Azhagiya Kanne Song இசைஞானி இசையில் S.ஜானகி பாடிய அழகிய கண்ணே பாடல்... Ilaiyaraaja | S.Janaki

Фильм және анимация

Movie - Uthiripookkal
Singer - S. Janaki
Music by Ilaiyaraaja
Lyrics - Kannadasan
Starring - Ashwini , Baby Anju, Master Raja
Directed by J. Mahendran
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - kzread.info...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 1 400

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran94432 жыл бұрын

    கடவுள் என்முன்னே தோன்றி என்னவரம் வேண்டும் என்றுகேட்டால் நான்வாழ்ந்த 80 -90 ன் வாழ்க்கையை மீண்டும் இளையராஜாவின் இசையோடு மீட்டுகொடு என்பேன்..,,,

  • @sumathip3745

    @sumathip3745

    2 жыл бұрын

    நிச்சயமாக இந்த எண்ணங்களோடு நிறைய மக்கள் இருக்கிறார்கள். வாழ்க இளையராஜா ஐயா.

  • @manichinnappa1922

    @manichinnappa1922

    2 жыл бұрын

    Super

  • @vijayakumarnatarajan2408

    @vijayakumarnatarajan2408

    2 жыл бұрын

    thanks for all

  • @muthumari9294

    @muthumari9294

    2 жыл бұрын

    வாழ்ந்து விட்டோம் அதுவே தெய்வம் தந்த சிறப்பு.

  • @amuthas7542

    @amuthas7542

    2 жыл бұрын

    Naanum

  • @jahirhussainmohamedshali5074
    @jahirhussainmohamedshali50745 ай бұрын

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @sixv5902

    @sixv5902

    Ай бұрын

    semme

  • @chithraa4445
    @chithraa44452 ай бұрын

    இந்தப்பாட்டை பார்த்தவுடன் நானும் என் பிள்ளைகளும் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வந்தது. சோகம் இழையோடும் இனிமையான பாடல்.வாழ்க்கை ஒருமுறைதான் தானும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ விடுங்கள். ஒரு நல்ல மனைவி அமைந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லி அன்புடன் வாழுங்கள். பணம்,பணம் என்று அலையாதீர்கள்

  • @jamesyacob5051

    @jamesyacob5051

    Ай бұрын

    😢😢😢

  • @kamarajs1465
    @kamarajs14652 ай бұрын

    மெட்ராஸ்க்கு வந்தபுதிதில் 80 ல் TV முன் உட்கார்ந்து 17 வயதில் ஒளியும் ஒலியும் பார்த்த அப்போதே இதயத்தை ஏதோ செய்தது, இப்பொழுதோ இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் இளவயதில் ஞாபகம் வந்து உயிரைக்ககொள்ளுகிறது. நான்கு வயதில் தந்தையை இழந்த என்னோடு நான்கு பிள்ளைகளை என் தாயார் தனிமையில் வளர்த்தார்கள், கண்ணதாசன் போன்று இளையராஜா போன்று உலகில் வேறு எந்த மொழியிலும் யாரும் பிறக்கப் போவதில்லை.. ஞாபகம் 2:43

  • @user-ji9nz4sq1x
    @user-ji9nz4sq1x6 ай бұрын

    இந்தப் பாடலில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்துள்ளது இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ஏதோ ஒரு டன் வெயிட்டை ஏத்தியது போல பாரமாகி விடுகிறது அது ஏன் என்று தெரியவில்லை ஆனாலும் சுகமான வலி அது மட்டும்

  • @vijiviji4823

    @vijiviji4823

    Ай бұрын

    உண்மையிலேயே எனக்கும் அப்படித்தான் உள்ளது.

  • @kprakash8067

    @kprakash8067

    Ай бұрын

    எனக்கு மிதப்பது போல் தெரிகிறது.

  • @kprakash8067

    @kprakash8067

    Ай бұрын

    இளையராஜா அண்ணாத்த !என்னாத்த சொல்றது ! மயக்கம்‌ வருதே ! போதை தரும் இசை ! இனியொரு முறை இந்த மண்ணில் பிறந்தால்தான் மண்ணோடு‌ சேர்ந்து மயங்கிக் கிடைக்கலாம் ! இசைஞானி எங்கள் இளையராஜா வாழ்க‌!

  • @jamesyacob5051

    @jamesyacob5051

    Ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுவேன்.. காரணம் தெரியவில்லை..

  • @athavang786
    @athavang786 Жыл бұрын

    இந்த பாடல்வரிகளை எழுத எவனும் பிறக்கபோவதில்லை இந்த குரலில் பாடவும் யாரும் பிறக்கபோவதில்லை இந்த இசையும் இனி எந்த ஜென்மத்திலும் எவனும் அமைக்கபோவதில்லை நாம் தான் கொடுத்துவைய்தவர்கள்

  • @rajavikram5350

    @rajavikram5350

    Жыл бұрын

    Super 👌

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    தெய்வமே 🙏🏻 சரியா சொன்னீங்க

  • @essmeans3548

    @essmeans3548

    Жыл бұрын

    மிகச் சரி..... (படமாக்கிய மகேந்திரனையும், தாயாகவே மாறிய அஸ்வினியையும் விட்டுவிட்டீர்கள்)

  • @athavang786

    @athavang786

    Жыл бұрын

    @@essmeans3548 👍👍👍

  • @ayyamperumalgomathinayagam5668

    @ayyamperumalgomathinayagam5668

    10 ай бұрын

    Enna alagana kaaviyam.....ini ipdi oru padaippuku vaaippu illa.....saathiyam illatha naraga vaalkaiyil vaalkirom......ethilum sirappu illai. Palaya thirupthi illai....yeno vaalanumennu nagargirathu ellor vaalvum......

  • @sbspsenthilkumar1721
    @sbspsenthilkumar17213 жыл бұрын

    சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயும் அல்ல இந்த வார்த்தைகள் ரொம்ப ரொம்ப அருமை

  • @chitrachitu6382

    @chitrachitu6382

    3 жыл бұрын

    அருமை மிகவும் நன்றி அய்யா

  • @bhuvaneswariporchelvam3923

    @bhuvaneswariporchelvam3923

    3 жыл бұрын

    👌

  • @kanchiraveisubramaniyan9187

    @kanchiraveisubramaniyan9187

    3 жыл бұрын

    Yes. This line is highlight of the song. KannA dhasan is a unique "Kavinjar- poet. Surpriseto hear, how he connects the words for our enlightenment to say.!!!!

  • @narendirababubabu4119

    @narendirababubabu4119

    3 жыл бұрын

    அது "தன்னை" அல்ல "தனை" என்று நினைக்கிறேன். தனை (தனையன்) (குழந்தையை அறியாதவள் தாயும் அல்ல என்ற பொருளில். நன்றி.

  • @komban2745

    @komban2745

    2 жыл бұрын

    Su

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam34383 жыл бұрын

    எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைகளுக்காகவே தன் சுதந்திரத்தை விட்டு கொடுப்பவள் தாய் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @shanthidhananjayan4578

    @shanthidhananjayan4578

    2 жыл бұрын

    உண்மையை மிகச்சிறப்பாக சொன்னீர்

  • @santhivanadhurai5900

    @santhivanadhurai5900

    Жыл бұрын

    20 years back ila eppavum iruntha nalla irukum epa child major ayetanga

  • @SELVISELVI-uw4tk

    @SELVISELVI-uw4tk

    10 ай бұрын

    தாய்க்கு இணையான தெய்வம் உள்ளதா?

  • @kavithat8338

    @kavithat8338

    8 ай бұрын

    ரொம்ப பிடித்த பாடல்❤

  • @starkill2201
    @starkill22013 жыл бұрын

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் , ❤️❤️❤️

  • @subbaiyacolonytippururban2616

    @subbaiyacolonytippururban2616

    3 жыл бұрын

    Neengal nallavar

  • @bala-ic7vq

    @bala-ic7vq

    3 жыл бұрын

    Great sir

  • @sankarankaliappansankaran7451

    @sankarankaliappansankaran7451

    3 жыл бұрын

    Excellent sir

  • @prakashpathygold8878

    @prakashpathygold8878

    3 жыл бұрын

    Correct

  • @Santhralekha

    @Santhralekha

    3 жыл бұрын

    👌👌😍💐💐

  • @Indran71
    @Indran716 ай бұрын

    எல்லாத் திரைப்பாடல்களிலும், இசை இருக்கலாம்! இளையராஜாவின் பாடல்களில் மட்டும்தானே ஜீவன் இருக்கிறது! இசைமழையால் பெருகுகின்றதே கண்ணீர் கடல்!!!😢

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Жыл бұрын

    என் பேத்தி நினைவாக இந்த பாடல்.. அவள் அமெரிக்க மண்ணில் இருக்கிறாள்... கவியரசு கண்ணதாசன் திரை இசை சந்தம். ஜானகி அம்மையார் பாடிய மெல்லிய மனமுருக்கும் குரல்.. இசைஞானி இசை.. எங்கோ கொண்டு செல்கிறது..

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth82928 ай бұрын

    பிள்ளைகளுக்கு ஆகவும் கணவருக்காகவும் வாழும் அப்பாவி அம்மாக்களுக்கு இந்த பாடல் சமப்பர்ணம

  • @nasarvilog
    @nasarvilog3 жыл бұрын

    இந்தப் பாடலை நமக்காக உயிர் தந்த கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி இளையராஜா அவர்களுக்கும் எஸ் ஜானகி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்

  • @rpgaming5300

    @rpgaming5300

    3 жыл бұрын

    👍👍👍👍

  • @starkill2201

    @starkill2201

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fZanlat6hcrQgMY.html

  • @juliejohn6420

    @juliejohn6420

    3 жыл бұрын

    😘😘😘a😘ala😘a😘lalo😘la😘al😘😘😘a😘😘la😘la😘l😘a😘l😘l😘as😘al😘a😘la😘l😘😘lala😘😘la😘😘l😘😘la😘la😘😘a😘a😘alaa😘😘ala😘a😘a😘😘a😘😘a Saalaa😘😘அல்லாத😘a😘a😘a😘a😘a😘a😘l😘al😘a😘laa😘a😘😘l😘😘al😘a😘😘a😘😘😘😘😘l😘la😘a😘la😘la😘😘😘😘😘😘😘😘a😘lla😘😘a😘lala😘 கால 😘😘😘 என 😘 😘😘லா😘a😘a😘😘ala😘😘aa😘laaalaa😘a😘lallla😘ala😘a😘lla😘aa😘a😘a😘a😘a😘a😘😘😘a😘😘😘😘ala😘a😘la😘😘அல்லது😘😘😘😘😘a😘aa😘al😘😘😘 ஆள் a😘 அல்லது 😘al😘al😘😘aa😘a😘a😘la😘la😘lalaa😘aala😘😘lal😘l😘aa😘l😘lala😘aa😘😘ala😘😘😘l😘a😘😘😘😘😘😘😘a😘😘😘😘😘😘😘😘😘lmao😘😘lala😘😘😘a😘al😘😘a😘😘lal😘l😘a😘😘😘al😘la😘al😘la😘😘😘😘😘a😘a😘😘l😘a😘is😘😘a😘a😘😘😘a😘😘😘a😘😘a😘la😘😘😘😘😘😘😘al😘லவ்😘😘😘 என 😘,😘😘l😘😘l😘al😘😘😘😘😘

  • @rajendranrevathi4558

    @rajendranrevathi4558

    2 жыл бұрын

    @@rpgaming5300 y

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    உயிருக்கு உயிர் கொடுத்த அஸ்வினியை விட்டுவிட்டீர்களே

  • @rajeshsamrutha34
    @rajeshsamrutha343 жыл бұрын

    நான் இந்த திரைக் காவியத்தை கடந்த கொரோனா காலத்தில்தான் பார்த்தேன். ஒரு வாரமாக அந்த படத்தின் தாக்கம் என்னை ரொம்பவே ஆட்கொண்டது. மகேந்திரன் இயக்கம் அனைவரும் சிறப்பான நடிப்பு மிக அருமை. படத்தின் மிகப்பெரிய பலம் ராகதேவனின் பாடல் மட்டுமின்றி பின்னணி இசை என் கண்களை ஆறாக ஊற்றெடுக்க வைத்து விட்டார்.உதிரிப் பூக்கள் என் நினைவில் என்றும் உதிராப் பூக்கள்தான்

  • @mohan1771

    @mohan1771

    5 ай бұрын

    குறிப்பாய் வில்லனாக நடித்த விஜயனின் நடிப்பு பிரமாதம்....

  • @rajendranner5459
    @rajendranner54593 жыл бұрын

    அந்த 80.களின் எவர்கிரீன் காலம் திரும்ப வரவே வராதா..அதுவே சொர்க்கம்.....சொர்க்கம்

  • @harri_____kkk

    @harri_____kkk

    3 жыл бұрын

    True

  • @haris4299

    @haris4299

    3 жыл бұрын

    Really

  • @latchouvenkat633

    @latchouvenkat633

    3 жыл бұрын

    Yes

  • @anusuthan8646

    @anusuthan8646

    3 жыл бұрын

    Yespa

  • @tgopi8233

    @tgopi8233

    3 жыл бұрын

    Yes

  • @manic6643
    @manic66434 жыл бұрын

    தாய் சேய் உயிரில் கலந்த பாடல் இந்த உலகில் இதைவிட மனதிற்க்கு ஆனந்தம் உண்டோ நிச்சையம் கிடையாது ராஜாவின் தெய்வீகபாடல் இது இருகைசேர்த்து வணங்குகிறேன்

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d61802 жыл бұрын

    படித்துவிட்டு, எழுபதுகளின் பிற்பகுதியில் வேலைக்காக‌ நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம் அது. சரியான வேலை கிடைக்காமல் மனம் சோர்ந்து போய் இருந்த நேரம் எனது மனப் புண்ணை ஆற்றியது, வானோலிப்பெட்டி வழியே தவழ்ந்து வந்த இசைஞானி இளையராஜாவின் இதுபோன்ற பாடல்கள்தான்.💐💐💐💐💐

  • @vageducationalconsultancy7775

    @vageducationalconsultancy7775

    2 жыл бұрын

    🙏🏼😭

  • @tamilselvankaalathi6368

    @tamilselvankaalathi6368

    Жыл бұрын

    அழகிய வரிகள்

  • @sundararajaperumaljothider6941

    @sundararajaperumaljothider6941

    Жыл бұрын

    இரவு நேரங்களில் நெஞ்சை வருடுகின்ற இசை ஞானி உடைய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இன்ப வெல்லம் பொங்குகின்ற நேரம்

  • @kundumani5162

    @kundumani5162

    Жыл бұрын

    😂

  • @sriramajeyam779

    @sriramajeyam779

    Жыл бұрын

    Excellent your experience

  • @svrajendran1157
    @svrajendran1157 Жыл бұрын

    இந்தகுயில் ஐம்பதுகளில் பாட ஆரம்பித்தபோதும் , இசைஞானி வந்த எழுபதுகளில்தான் இசையின் இளவரசி ஆனார் வயது ஏற ஏறத்தான் குரலில் இனிமை கூடியது என்பதே உண்மை ஜானகி அம்மாவின் பாடல்களில் இது ஒரு மைல்கல்

  • @rajavikram5350

    @rajavikram5350

    Жыл бұрын

    Excellent

  • @sharmilabasheer7706

    @sharmilabasheer7706

    Жыл бұрын

    ​@Raja Vikram 😅

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Well said

  • @akhilks3464

    @akhilks3464

    Жыл бұрын

    Late 50s,60,70,80,late 90s South industry ruled s. Janaki amma especially 50,60,70,80s kannada, malayalam industry's full ruled s. Janaki amma and late 60s, 70,80,90 Tamil and telugu ruled also 80s she was ruled hindi music

  • @wolfsr9259

    @wolfsr9259

    Жыл бұрын

    ​@@akhilks3464 not true It was P. Susila mam.

  • @romeoraja7888
    @romeoraja7888 Жыл бұрын

    நான் மட்டுமல்ல எண்பதுகளில் பிறந்த அனைவரும் அப்போது வாழ்ந்த வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் சனிக்கிழமை இந்தி திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் திரைப்படம் சத்தான தின்பண்டங்கள் எப்போதும் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடுவது இன்னும் நிறைய நிறைய நீங்காத நினைவுகளுடன் நாம் விரும்பும் இசைஞானி இளையராஜா கீதங்கள்

  • @mathialaganp3286
    @mathialaganp32863 жыл бұрын

    கொடியும்.மலரும்.வாசனையும்.என்றும்பிரியாது.அதபோல்.கண்ணதாசனும்.கொடியே.இளையராஜா.மலர்.ஜானகியம்மா.வாசனை.அழகியபாசம்உள்ளபாடல்.வாழ்க.தெய்வங்களே

  • @kmahendranmahendrank880
    @kmahendranmahendrank8802 жыл бұрын

    இதுபோன்ற பாடல்களுக்கு என்றும் அழிவில்லை, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்,மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது கவியரசரின் வரிகளில் எத்தனை அர்த்தம்! ஜானகி அம்மாவின் குரலில் நெஞ்சைப் பிழியும் சோகம் இழையோடும் உணர்வோடு பாடும் பாடல் இது .

  • @kamilabanu547

    @kamilabanu547

    Жыл бұрын

    Muhmatrfek

  • @vinayagamc3866
    @vinayagamc38663 жыл бұрын

    சொர்கம் எப்போதும் நம் கையிலே, என்ன ஒரு உயர் தத்துவம், கருத்து, இசை, அருமை! அருமை! .

  • @sathyabalaji1623

    @sathyabalaji1623

    3 жыл бұрын

    🙏

  • @periyasamy.csanjith6680

    @periyasamy.csanjith6680

    2 жыл бұрын

    😔😧

  • @radhat634

    @radhat634

    2 жыл бұрын

    Nice song👌

  • @vimalarathi6140

    @vimalarathi6140

    2 жыл бұрын

    கவலைகள் மறக்க செய்யும் அருமையான பாடல்

  • @sargunamr5697

    @sargunamr5697

    Жыл бұрын

    @@radhat634 the ih

  • @devass6173
    @devass61732 жыл бұрын

    இந்த பாடல் எங்கு கேட்டாலும் மனதை ஏதோ செய்கிறது எங்கள் ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் மயங்காத வண்டுகள் தான் இருக்க முடியமா என்ன மலரில் மட்டும் தான் தேன் இருக்குமா,,,,,?

  • @natarajanvanchinathan4206
    @natarajanvanchinathan42063 жыл бұрын

    கவியரசு கண்ணதாசனால் மட்டுமே இப்படி எழுதமுடியும். எளிமை,இனிமை.

  • @venkatvenkat3673

    @venkatvenkat3673

    2 жыл бұрын

    நாம் தாயாகும் போதுதான் நம் தாயின் அருமை தெரிகிறது.

  • @palaniappanhi9498

    @palaniappanhi9498

    2 жыл бұрын

    கண்ணதாசா நீ சாகவில்லை உன் கைகளால் எழுதிய இது போன்ற பாடல்களால் தமிழர்களை வாழவைத்து கொண்டு இருக்கிறாய்.தலைமகனே அடுத்த பிறவி எடுத்து வந்து பாட்டெழுதி நம் தமிழை காப்பாத்து கண்ணதாசா.

  • @jahanilango
    @jahanilango3 жыл бұрын

    மனக்காயத்தோடு பாடும் பாடல்.. அதில் சொற்களும் இசையும் பாடும் அழகும் போட்டிபோடுகின்றன..

  • @sasikaladhanapal8939

    @sasikaladhanapal8939

    2 жыл бұрын

    Z .

  • @mohan1771

    @mohan1771

    2 жыл бұрын

    கண்ணதாசன் the great 🥰

  • @sivanathankajenthiran7985

    @sivanathankajenthiran7985

    2 жыл бұрын

    @@mohan1771 .

  • @lakshmis9750

    @lakshmis9750

    10 ай бұрын

    Yes

  • @jeyajeya4756
    @jeyajeya47563 жыл бұрын

    உதிரிப்பூக்கள்.... பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்+ பாடம்.....

  • @valliammala2470
    @valliammala24703 жыл бұрын

    கண்ணதாசனின் வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.மலரும் நினைவுகள் மனதை நெருடின.💗💗💗👌👌👌

  • @komban2745

    @komban2745

    2 жыл бұрын

    Su

  • @PJMKumar

    @PJMKumar

    Жыл бұрын

    Kannadasan proved as The Legend

  • @Recreatdayfuns

    @Recreatdayfuns

    Жыл бұрын

    Santhei

  • @Mahevas-sb4fu

    @Mahevas-sb4fu

    Жыл бұрын

    😭

  • @nagammalsubramani7122

    @nagammalsubramani7122

    11 ай бұрын

    ​@@komban2745dy😊

  • @riviereganessane9128
    @riviereganessane91282 жыл бұрын

    ஆராத சோகத்தை எல்லாம் தன் குழந்தையின் சிரிப்பில் மறக்கும் ஒரு தாயின் சோக கீதம் மெல்லிய இழையாக மறைந்து நிற்கும் சோகமே இப்பாடலின் தனிச்சிறப்பு

  • @PJMKumar

    @PJMKumar

    Жыл бұрын

    Kannadasan

  • @jayakumar4573

    @jayakumar4573

    Жыл бұрын

    @@PJMKumar puroteen food

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51392 жыл бұрын

    "அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே சங்கம் காணாதது தமிழும் அல்ல தனை அறியாதவள் தாயும் அல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தனை அறியாதவள் தாயும் அல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா அழகிய கண்ணே உறவுகள் நீயே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான் என் தெய்வம் மாங்கல்யம்தான் அழகிய கண்ணே உறவுகள் நீயே மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலை மோதுது என் நெஞ்சம் மலையாதது அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே" -------------¤💎¤------------- 💎உதிரிப்பூக்கள் 💎1979 💎An amazing voice of ஜானகி 💎An evergreen pathos of இளையராஜா 💎கண்ணதாசன்

  • @user-qb7ft3pc9p

    @user-qb7ft3pc9p

    2 жыл бұрын

    Super👏👏💐

  • @geethasuganthi8877

    @geethasuganthi8877

    2 жыл бұрын

    I never watch new films and I'm not listening new songs always old only my friends all criticizing me but I don't care

  • @SaravananSaravanan-ng4wx

    @SaravananSaravanan-ng4wx

    Жыл бұрын

    Pattum sogamum ennudaiyathai pola

  • @rajpriyar1800

    @rajpriyar1800

    Жыл бұрын

    Entha piravi pothathu da samay esaiyil neentha

  • @SS-xs5iu

    @SS-xs5iu

    8 ай бұрын

    🌹❤👌

  • @vishalvinod8923
    @vishalvinod89233 жыл бұрын

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது என்னவோ தெரியல இந்த பாட்டு கேட்கும்போது கண்ணுல தண்ணியே வருது ❤️

  • @lekhapadmanaban1854

    @lekhapadmanaban1854

    2 жыл бұрын

    ஆம்

  • @seeniappan9643
    @seeniappan96433 жыл бұрын

    என்றும் இளையராஜா இசை வாழும்., ஆத்ம ராகம் எண்பது இதுதான்., நன்றி இளையராஜா என்ற இசை ஞானிக்கு.,

  • @starkill2201

    @starkill2201

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fZanlat6hcrQgMY.html

  • @kanchiraveisubramaniyan9187

    @kanchiraveisubramaniyan9187

    3 жыл бұрын

    Add to kannadasan too for the lyrics , where he spinned the words like knitting cloth.

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    இசைஞானி அல்ல இசைமேதை

  • @viveksundar707
    @viveksundar707 Жыл бұрын

    ஓர் அடியில் உலகளந்தான், ஓர் பாடலில் மக்கள் மணங்களை வென்றான்

  • @gpmsrinivasan5873
    @gpmsrinivasan58733 жыл бұрын

    நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின் நகரத்தில் வாழ்ந்து இப்போதும் இந்தப் பாடல் எங்கு கேட்டாலும் நின்று பாடல் முடிந்த பின் செல்வேன்

  • @vijayaragavan5957

    @vijayaragavan5957

    3 жыл бұрын

    Super

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    எண்பதுகளில் ரேடியோ பெட்டி முன் தவமிருந்த காலம் அது

  • @rameshponnaiah7609
    @rameshponnaiah76093 жыл бұрын

    மிக அருமையான பாடல்.இதயத்தை அலுத்தும் சோகம் மற்றும் சொல்லமுடியாத ஒரு மௌனத்திண் வலியை கொண்டுவருகிற பாடல் .இசையும், பாடலின் வரிகளும் வர்ணிக்க வார்த்தை இல்லை .

  • @menakaganesan111
    @menakaganesan1113 жыл бұрын

    சங்கம் காணாதது தமிழும் அல்ல.. தன்னை அறியாதவள் தாயும் அல்ல.. வரிகள் 👌👌👌👌

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    💐

  • @starkill2201

    @starkill2201

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fZanlat6hcrQgMY.html

  • @vetriselvanu9584

    @vetriselvanu9584

    10 ай бұрын

  • @athiandjani2409
    @athiandjani24093 жыл бұрын

    Janaki அம்மா குரலுக்கு என்றும் நான் அடிமை🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @mozhitamil9358

    @mozhitamil9358

    2 жыл бұрын

    Nanum adimaithan janaki ammavku

  • @rajavikram5350

    @rajavikram5350

    Жыл бұрын

    Me tooooooo

  • @sathamsmsathamsm9911
    @sathamsmsathamsm9911 Жыл бұрын

    எத்தனை காலங்கள் ஆனாலும் தாயின் அன்பு எதற்க்கும் ஈடாகாது❤❤❤

  • @jayanthibellvan8576
    @jayanthibellvan85763 жыл бұрын

    🌸🌸🌸🌸என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... 🌷🌷🌷 Miss u so much pa 🌸🌸🌸

  • @gandhimohan.d6620

    @gandhimohan.d6620

    3 жыл бұрын

    எங்க அப்பாவுடன் பார்த்த படம் .அப்ப 8வது படிக்கிறேன்

  • @archanapremvelam2865
    @archanapremvelam28653 жыл бұрын

    எண்ண முடியாத அளவிற்கு கேட்டு விட்டேன்.இன்னும் இப்பாடல் சலிக்க வில்லை. என் குழந்தைகளின் பால்ய பருவம் நியாபகம். இந்த பாடல் மாதிரி இனி வரும் காலத்தில் யாரும் போட முடியாது..

  • @arunramchandar3904

    @arunramchandar3904

    3 жыл бұрын

    Very emotional song madam. When I listened this song I cried many times alone

  • @rameshr2578

    @rameshr2578

    3 жыл бұрын

    Ennkumthan

  • @starkill2201

    @starkill2201

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fZanlat6hcrQgMY.html

  • @udayasp655

    @udayasp655

    2 жыл бұрын

    வாழ்த்துகள் சகோ..

  • @l.psureshkumaar2721

    @l.psureshkumaar2721

    2 жыл бұрын

    படம் எது என்று கேட்டால் தெரியாத பள்ளி பருவத்தில் என்னை ஏதோ உணர்வுடன் கலந்த இசை ஞானி பாடல்களில் இந்த பாடல் முக்கியமானது

  • @vadhanamr3037
    @vadhanamr30373 жыл бұрын

    சங்கம் காணாதது தமிழும் மல்ல தன்னை அறியாதவாள் தாயும் அல்ல... கவிஞனின் படைப்பிற்கு நாங்கள் அடிமை...

  • @deepadeepa.r6344

    @deepadeepa.r6344

    3 жыл бұрын

    Vera level

  • @komban2745

    @komban2745

    2 жыл бұрын

    Su

  • @palaniappanhi9498

    @palaniappanhi9498

    2 жыл бұрын

    கண்ணதாசன் ஒருவன் இல்லை என்றால் இது போன்ற உயிரோட கலந்த சொற்கள் நமக்கு கிடைக்காது இளையராஜா இசை அதற்கு பிறகுதான் கவிஞனுக்கே இந்த ஆளுமை

  • @dhanalakshmipadmanathan5186

    @dhanalakshmipadmanathan5186

    Жыл бұрын

    @@palaniappanhi9498 ஆமோத்திக்கிறேன் ஐயா...

  • @natarajans6904
    @natarajans69043 жыл бұрын

    இந்த மாதிரி பாடல் இனிமேல் வராது . காலத்தால் அழியாத காவியம்

  • @udayasooriyan191

    @udayasooriyan191

    3 жыл бұрын

    நடராஜன் அவர்களே உங்களுக்கு வயது எத்தனை என்று தெரிந்து கொள்ளலாமா நன்றி

  • @natarajans6904

    @natarajans6904

    3 жыл бұрын

    @@udayasooriyan191 49

  • @udayasooriyan191

    @udayasooriyan191

    3 жыл бұрын

    @@natarajans6904 நன்றி இப்படியான பாடல்கள் வந்த காலம் எப்படி இருந்தது

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    அது ஒரு பொற்காலம்

  • @rameshn4070

    @rameshn4070

    2 жыл бұрын

    @@natarajans6904 மரரரௌ

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi68452 жыл бұрын

    3.10...to...3.40... இந்த இசை வரும் போது என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது...

  • @PammalRaaja

    @PammalRaaja

    10 ай бұрын

    It is not flute it’s type of ,but an emotion triggering instrument Raaja sir cleverly used it.

  • @prakashprk878
    @prakashprk8783 жыл бұрын

    இளையராஜ ஜானகி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி அப்படி ஒரு பாடல் இதயம் தொட்ட பாடல்களில் தனித்துவம் பெற்ற பாடல் உயிரோட்டமான பாடல் இதுக்கு மேல என்ன சொல்ல வார்த்தைகளால் விவரிக்க முடியல...

  • @boopathycid7943
    @boopathycid794311 күн бұрын

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @manivannancn1844
    @manivannancn18442 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது மறைந்த எங்க அம்மாவின் நினைவு வருகிறது.

  • @vaithivaithi2831
    @vaithivaithi28313 жыл бұрын

    அழகிய கண்ணே பாடல் எனக்கு தெவிட்டாத தீஞ்சுவை கனி

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani53963 жыл бұрын

    என்ன ஒரு இதயததை வருடும் அழகான பாடல் மனம் போகுதே அந்த kalaingalie தேடி .

  • @user-vk5jv6lt9u
    @user-vk5jv6lt9uАй бұрын

    மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் மலையாது. அழிகிய கன்னே உறவுகள் நீயே.

  • @vethiyan7754
    @vethiyan77542 жыл бұрын

    நான் பிறந்த வருடம் தான் கண்ணதாசன் நினைவு வருடம் நான் அழுதது உனக்காகதான் இருக்கும்😭😭😭😭

  • @MohamedMohamed-rv6bt
    @MohamedMohamed-rv6btАй бұрын

    அருமையான வரிகள்.. மனதை மிகவும் வருடும் இசை.. தாய் அன்பிற்கு ஈடு இணை இல்லை

  • @p.saravanagandhi2174
    @p.saravanagandhi21742 жыл бұрын

    2022 லும் இந்த தேவகானத்தை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

  • @naazeerarja6993

    @naazeerarja6993

    Жыл бұрын

    Yes sir ❤❤

  • @thenmozhis4170

    @thenmozhis4170

    Жыл бұрын

    YES 👌👌👌👌❤️❤️❤️

  • @ramachandiran2468

    @ramachandiran2468

    Жыл бұрын

    Immortal song

  • @govindarajn7363

    @govindarajn7363

    Жыл бұрын

    Yes

  • @jaysonrajan4775

    @jaysonrajan4775

    Жыл бұрын

    ஆபி!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92493 жыл бұрын

    பழைய நினைவுகளை நம் எண்ணத்தில் எதிரொலிக்க செய்யும் இளையராஜாவின் இசை கருவிகள் பொழிந்த இசை மழை.. தாய்மையின் அன்பை நினைவு படுத்தும் நம் மனதை கனக்க வைக்கும் ஜானகியின் குரலோசை.. பட்டாம்பூச்சிகளாக பறந்து திரியும் அஞ்சு மகேந்திர் .. ஹாஜா ஷரீப்.. பெண்மைக்கு அழகு சேர்க்கும் அந்த தாய்மையின் வடிவமாக .. ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் கண் கேமரா வழியாக பார்த்த பசுமையும் பாசமும் ததும்பும் அழகான காட்சிகள்.. இயக்குனர் மகேந்திரன் இந்த பாடலுடன் நம் நினைவில் நிழலாடுகிறார்..

  • @karuppasamys210

    @karuppasamys210

    2 жыл бұрын

    Nalla padal

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty3 жыл бұрын

    என் உயரினும மேலான என் இனிய அம்மா எங்களிடம் இந்த பாடலை அடிக்கடி பாடி பாடி எங்கள் ஐந்து பேரையும் அன்பில் அரவணைத்து வளர்த்த பாடல் ....... இன்று கேட்டாலே அம்மாவின் அரவணைப்பு வாட்டி வதைக்கிறது....😭😭😭😭😭😭😭😭

  • @kamaldeen3462

    @kamaldeen3462

    9 ай бұрын

    ❤😂😢

  • @nagasankar6799
    @nagasankar67993 жыл бұрын

    இரவில் அமைதியான சூழலில் கேட்க வேண்டிய பாடல்

  • @hemaladha1064
    @hemaladha10643 жыл бұрын

    ஒரு தாயாக மாறியதும் நூறு சதவீதம் இந்த பாடலை நான் உணர்ந்தேன்

  • @anbumukilan1975

    @anbumukilan1975

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @sathyamurthimuniappan3198
    @sathyamurthimuniappan31982 жыл бұрын

    என்இளமைக் காலப்பாடல்களில் முதன்மையானது ஜானகிஅம்மாவிற்கு நன்றி

  • @sakyamohan
    @sakyamohan Жыл бұрын

    ஆயிரம் முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் அழாமல் இந்த இசைஞானியின் இணையற்ற பாடல் முடிந்ததில்லை! என் வாழ்வின் தவம் இந்த பாடலை என் பிறப்பில் கேட்கிறேன்! எந்த மனநோயையும் தீர்க்கும் இணையற்ற மனமருந்து இசைஞானி இளையராஜாவின் இசை! இசைபோதிசத்துவனே! இன்னும் பல நூற்றாண்டுகள் உனது இசைமெட்டுக்கள் பல நூறு பரம்பரைகளை பண்பாட்டோடு இணைக்கும்!

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan7603 жыл бұрын

    1987 -- அன்று வயது 8. தலையில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்கு நடந்து செல்லும்போது அந்த குறிப்பிட்ட சம்சா கடையில் இந்த பாடல்.. ஏதோ!! இனம்புரியாத ஏக்கம், ஈர்ப்பு , இன்னும் விவரிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வு. எல்லாம் கலந்த ஒரு கிரக்கம். பாடலை கேட்டுக்கொண்டே இருக்க.. சம்சா கடைகார அண்ணன்: டாய் பள்ளிக்கூடம் மணி ஆகலையா??? ஐய்யய்யோ!!!!!😱😱😱 ஓடுரா!! ஓடுரா!! 🏃🏃🏃🏃.. அந்த நினைவுகளை அசை போட்டால் இன்றும் கண்களில் கண்ணீர் வரும்.. 😭😭😭😭 அப்படி காலத்தால் அழியாத படைப்பு அது. பாடல், இசை, இவையிரண்டும் உணர்வுடன் கலந்து. இதயம் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கும்... இன்றளவும் இந்தப் பாடலை முந்திச்செல்ல தாய் அன்பு கொண்ட பாடல் இயற்றப்படவில்லை என்றே நான் சொல்லுவேன்... இதை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் கவலைப்பட போவதில்லை.. 💗💗💗💗

  • @padmavathyvenkatasubramani8112

    @padmavathyvenkatasubramani8112

    3 жыл бұрын

    Amazing

  • @splashvenkatesh2805

    @splashvenkatesh2805

    3 жыл бұрын

    Excellent comment

  • @boscolawrencemarianathan760

    @boscolawrencemarianathan760

    3 жыл бұрын

    @@splashvenkatesh2805 thank you so much 🙏

  • @umamaheswarisenthilkumar6922

    @umamaheswarisenthilkumar6922

    3 жыл бұрын

    S as correct

  • @kalaivanithirumurthy

    @kalaivanithirumurthy

    3 жыл бұрын

    Ur comment is excellent...way of explaining ur memories are superb

  • @senthikumar6172
    @senthikumar61722 жыл бұрын

    ஜானகி அம்மா குரல் என்றும் இனிமை 🙏

  • @rkanagarajtvm
    @rkanagarajtvm Жыл бұрын

    🙏👍🙏👍🙏👍🙏❤️🙏🌹🌹🌹 இந்த குரலுக்கு இணை எந்த குரலும் இல்லை. தெய்வ குரல்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776Ай бұрын

    உன் இசையில் கண்ணீர் வருகிறது....மேகங்கள் அருகில் இருந்து கேட்குமேயானால் நிச்சயம் மழை வரும்..!

  • @BABLOO2015
    @BABLOO20153 жыл бұрын

    இந்த பாட்டுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை என்றால் மனநோயாளி ஆக இருப்பாங்க

  • @kalaivanimannavan6537

    @kalaivanimannavan6537

    3 жыл бұрын

    Kandippa bro

  • @revathinaveen8836

    @revathinaveen8836

    2 жыл бұрын

    உண்மைதான் நண்பரே

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    உண்மையாக பாசம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஒரு துளி கண்ணீர் வரத்தான் செய்யும்

  • @rajraj-xg4pb

    @rajraj-xg4pb

    2 жыл бұрын

    Yes Bro

  • @premalatha2080

    @premalatha2080

    2 жыл бұрын

    Yes

  • @MrArasu747
    @MrArasu7473 жыл бұрын

    கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகள் காலத்தினால் அழியாதது

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g3 жыл бұрын

    ஒரு தாய்க்கு நிகர் எவரும் இல்லை 😌😌😌🙏🙏🙏

  • @dharanganga8019

    @dharanganga8019

    2 жыл бұрын

    Onmai sathiyam

  • @punniamoorthy5017

    @punniamoorthy5017

    2 жыл бұрын

    @@dharanganga8019 ய lpl

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy19082 жыл бұрын

    எத்தனை தலைமுறை கடந்தாலும்.. மன அமைதியையும் இனிமையையும் தரும் பாடல்....

  • @krindran2314

    @krindran2314

    11 ай бұрын

    Never furget

  • @seenathrohaiya4083
    @seenathrohaiya40833 жыл бұрын

    என் பிள்ளைநினைவு. என் மகள் என் தாய்.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu71442 жыл бұрын

    நம் வாழ்க்கையை நாமே நேரில் பார்க்கும் மிக அழுத்தமான மறக்கமுடியாத பதிவு..

  • @indianindian8486
    @indianindian848610 ай бұрын

    இந்த பாடல், அன்னக்கிளி ஜானகியின் சிங்கார வேலனே தேவாவின் அருள் கிடைத்திட்ட வரம்

  • @subbannanpalanisamy2197
    @subbannanpalanisamy219727 күн бұрын

    இன்றும் என்றும் மனதை பிசையும் கண்ணீர் காவியமாக இப்பாடல் இசைத்துக் கொண்டே இருக்கும்!

  • @neppolianneps8489

    @neppolianneps8489

    25 күн бұрын

    நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன் அழுகிறேன்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd2 жыл бұрын

    கவியரசர் வரிகள் இளையராஜா இசை.ஜானகிஅம்மாகுரல்இனிமேல்.இதுபோன்றபாடல்களபடைக்க முடியாது

  • @nausathali8806
    @nausathali88063 жыл бұрын

    இதுபோன்ற பாடல்கள் நமக்கு கிடைக்க காரணமே படத்தின் இயக்குனர் (மகேந்திரன்) இப்படத்தின் இசையமைப்பாளர் (இளையராஜா) இந்த இருவரிடமும் தேடுதல் என்ற விஷயம் ரொம்பவே மேலோங்கி இருந்த காரணத்தினாலேயே ஜீவனுள்ள இப்பாடல். "ஜானகி அம்மா"வின் குரலின் மூலம், சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான இயற்கை சூழலில் நிலையான மணநிறைவோடு இப்பாடலை கேட்கவேண்டும். உலகத் தரமிக்க இயக்குனர் மகேந்திரன் மட்டுமே, (பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு தரக்கூடியவர். எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ அல்ல இது, அன்றாடம் பூத்து அன்றே தெய்வத்தை சென்றடையும் தெய்வீக மலர் இது !!! மலரும் நினைவுகள் சின்னஞ்சிறு மலர்களோடு !! படம் : உதிரிப்பூக்கள். இசை : இசைஞானி இளையராஜா.

  • @starkill2201

    @starkill2201

    3 жыл бұрын

    Super varigal nandiy sir

  • @nausathali8806

    @nausathali8806

    3 жыл бұрын

    @@starkill2201 மிக்க நன்றி சகோதரரே...!

  • @udayasooriyan191

    @udayasooriyan191

    3 жыл бұрын

    உண்மை

  • @nausathali8806

    @nausathali8806

    3 жыл бұрын

    @@udayasooriyan191 நன்றி சகோதரரே...!

  • @palaniappanhi9498

    @palaniappanhi9498

    2 жыл бұрын

    இந்த பாட்டுக்கு உயிர் குடுத்தது கவிஞர் கண்ணதாசன் மட்டுமமே வேற எவரும் இல்லை

  • @neelanagan6126
    @neelanagan61262 ай бұрын

    இப்பாடலைக் கேடகும் போதெல்லாம் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாது ஒரு தாய் தன் பிள்ளைகளின் மேல் வைத்துள்ள அன்புக்கு ஈடு இணையில்லை அற்புதமான நடிப்பு கணவனே தெய்வம் என்றெண்ணி வாழும் அவளை கணவர் புறகணிக்கும் ஒவ்வொரு முறையும் அவள் படும் வேதனையை காட்டும் நடிப்பு அற்புதம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் பிள்ளைகளின் நடிப்பும் மிக அற்புதம் இப்படம் மட்டுமல்ல இப்பாடலும் ஒரு காவியம்

  • @Amirtha20077
    @Amirtha200773 жыл бұрын

    திரும்ப வராத காலங்கள் இந்தபாடலை கேட்டவுடன் அழுகை வந்துவிடும் மமிகவும் பிடித்தபாடல்

  • @udayasooriyan191

    @udayasooriyan191

    Жыл бұрын

    பொற்காலம்

  • @rajendrans9432
    @rajendrans94323 жыл бұрын

    கண்ணீரை வரவழைத்த காவியப் பாடல் சூப்பர்.

  • @maheswaranmaheswaran1390

    @maheswaranmaheswaran1390

    2 жыл бұрын

    😭😭😭

  • @umarn2635
    @umarn26352 жыл бұрын

    இலங்கை வானொலியில் மாலை நான்கு முப்பதுக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று வரும் அதில் தவறாமல் இந்த பாடல் இடம்பெறும்

  • @kanishkasenthilkumar8683
    @kanishkasenthilkumar86832 ай бұрын

    இனம்புரியாத ஒன்று மனதை ஆழ்த்தியது இந்த பாடலை கேட்கும் போது

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g3 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.....,

  • @latchouvenkat633

    @latchouvenkat633

    3 жыл бұрын

    Yes

  • @veeturuchiveeturuchi9620

    @veeturuchiveeturuchi9620

    3 жыл бұрын

    Yes 👍

  • @rameshr2578

    @rameshr2578

    3 жыл бұрын

    Yes

  • @chitrasarfoji4718
    @chitrasarfoji4718 Жыл бұрын

    என் கணவர் எங்களை விட்டு போனாலும் என் உலகம் என் குழந்தை எனக் காலம் தள்ளி வாழ்பவருக்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai6 ай бұрын

    அழகிய கண்ணே... உறவுகள் நீயே... நீ எங்கே... இனி நான் அங்கே... என் சேய் அல்ல... என் தாய்... நீயே... அழகிய கண்ணே... உறவுகள் நீயே... சங்கம் காணாதது தமிழும் அல்ல... தன்னை அறியாதவள்... தாயும் அல்ல... என் வீட்டில்... என்றும் சூரியோதயம்... நான் கண்டேன்... வெள்ளி நிலா.... சொர்க்கம் எப்போதும்... நம் கையிலே... அதை நான் காண்கிறேன்... உன் கண்ணிலே... என் நெஞ்சம்... என்றும் கண்ணாடிதான்... என் தெய்வம் என்றும்... மாங்கல்யம்தான்... மஞ்சள் என்றென்றும் நிலையானது... மழை வந்தாலுமே... அது கலையாதது... நம் வீட்டில் என்றும் அலை மோதுது... என் நெஞ்சம்... இன்றும் அலையாடுது...

  • @kalaimanim8717
    @kalaimanim87172 жыл бұрын

    பலமுறைகேட்டுவிட்டேன். இருப்பினும் ஆண்டுகளுக்குகேட்கலாம். அருமையானபாட்டு

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    KV மகாதேவன் MS. விஸ்வநாதன் இருவரும் மிரமித்த இசையமைப்பாளர் ஒருவரே அவர் தான் இசைஞானி இளையராஜா .

  • @abdulnasar2862
    @abdulnasar28622 жыл бұрын

    Janakiamma unga padal super

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh17 күн бұрын

    அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தி ஞாபகம் வருகிறது.. கவியரசு கண்ணதாசன் வைரவரிகள் இவை.. அம்மா ஜானகி குரலோ மதுரம்

  • @rizamt
    @rizamt3 ай бұрын

    அய்யா இசைஞானி யே நீ இன்னும் எவ்வளவு திமிராவும் கெத்தாவும் இருய்யா... இன்னா பாட்டுய்யா மனச போட்டு குடையுதுய்யா ஏதோ பன்னுது....

  • @sa.t.a4213
    @sa.t.a42133 жыл бұрын

    Romba നല്ല പാട്ട്. Picturization adipoli. എന്നുടെ കുട്ടികാലത്ത് കേട്ട പാട്ട് . നല്ല പാടിയിരുക്ക് ജാനകി അമ്മ.Janaki Amma and the team you really performed well. Thanks for the commitment and dedication 🙏🙏🙏

  • @msubramaniam8
    @msubramaniam82 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் வரிகள், இசை, குரல், காட்சி அமைப்பு, நடிப்பு..இப்படி அனைத்தும் நிறைந்த காலத்தால் அழியாத காவியம் உதிரிப்பூக்கள்...தமிழ் என்றும் அமிழ்தே..இப்பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் கன க்கும்..இனம் புரியாத ஒரு சோகம், சிலிர்ப்பு. நம்மை அறியாமல் கண்களில் வடியும் கண்ணீர் துளிகள்..கண்ணதாசன் அய்யா, ...என்றும் சிரஞ்சீவி ..இளையராஜா சார், ஜானகியம்மா , மகேந்திரன் சார் ...மறக்க முடியாத காவியம்

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Жыл бұрын

    சங்கம் காணாதது தமிழும் அல்ல தனைஅறியாதவள் தாயும்அல்ல அடடா என்ன அருமையான வரிகள் இசை கொடுத்த இசைஞானி அவர்களுக்கும்,கவியரசு அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி .எக்காலத்துக்கும் பொருத்தமான பாடல்.

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 Жыл бұрын

    இன்றைய தினத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவருமே அதாவது 75 85 95 எந்த வருடத்திலும் வாழ்ந்தவர்கள் இப்போதும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் பாக்கியவான்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி நாம் வாழ்ந்த அந்தப் பொற்காலம் இதற்குமேலும் வருமா என்பது எனக்கு தெரியாது அதுபோல 1960க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது இதற்கு உட்பட்ட காலங்கள் பொற்காலம் என்று சொன்னால் மிகை ஆகாது என்று நினைக்கிறேன்.இக்காலத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @vikramanjoshua6913
    @vikramanjoshua6913 Жыл бұрын

    My dad used to sing this song for me to sleep. Now am in Bulgaria and my family is in Chennai. Nostalgic whenever I hear this song. Missing him and my mom's cooking a lot.

  • @ramasamy-nc7ju
    @ramasamy-nc7ju Жыл бұрын

    என் குழந்தை பருவ நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்துகிறது இப்பாடல்

  • @ramalingamk5319
    @ramalingamk53192 жыл бұрын

    அழகிய பாடலை பழகிய விதத்தில் எழுதிட கவியரசு கண்ணதாசன் தவிர வேறு யாரால் இயலும்.. இசைஞானி இளையராஜா மனதை அசைய வைக்கும் வித்தை கற்றவர்.. ஜானகி அவர் தம் குரலின் வசீகரம் என்றும் எப்போதும் மாறாதது..

  • @RajkumarRajkumar-dc9ny
    @RajkumarRajkumar-dc9ny3 ай бұрын

    நான் இந்த பாட்டை நிறைய தடவை கேட்டு விட்டேன் எனக்கு சலிக்கவே இல்லை

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Жыл бұрын

    2023 ல் அம்மாவை நினைத்து இந்த பாடலை கேட்டு நெஞ்சம் உருகியவர்கள் இங்கே இருக்கீங்களா

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick91243 жыл бұрын

    இசைஞானி இசை அற்புதம்

  • @muralidharanc5769
    @muralidharanc57695 ай бұрын

    தாயை இழந்து வாடுபவர்களுக்கு தாயின் அரவனைப்பை மீண்டும் தரும் பாடல். இயக்குனர் பாடல் ஆசிரியர் பாடிய குரலுக்கு உரியவர் இசை அமைப்பாளர் திரைப்படத்தில் நடித்த நடிகை அனைவருக்கும் என் நன்றியை கானிக்கை ஆக்குகிறேன்.

  • @chandrasakthi108
    @chandrasakthi1083 жыл бұрын

    என்றும் என்னுள் .அருமையான பாடல் ❤️

  • @ganeshganesh4708
    @ganeshganesh47083 жыл бұрын

    அந்த 586 டிஸ்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரக வாசிகள் என்று நினைக்கிறேன்.

  • @revathinaveen8836

    @revathinaveen8836

    3 жыл бұрын

    இருக்கலாம் இதயமே இல்லை போல

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    இதயம் இருந்தும் இல்லாத இல்லாதது போல் நடிக்கிறார்கள்

  • @anustar225

    @anustar225

    2 жыл бұрын

    ஆமா ஏலியன்ஸ்

  • @rajann9643
    @rajann96433 жыл бұрын

    உதிரி பூக்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு வாரம் என்னால சரியா சாப்ட முடியல

  • @whitefeatherstudios5390

    @whitefeatherstudios5390

    3 жыл бұрын

    Enakkun antha experience irunthuchi

  • @yousufz2780

    @yousufz2780

    3 жыл бұрын

    ⚡️

  • @arockiarajb5774

    @arockiarajb5774

    3 жыл бұрын

    mokka padam

  • @mkumarkumar781

    @mkumarkumar781

    3 жыл бұрын

    @@arockiarajb5774 pooluuuuuu

  • @mkumarkumar781

    @mkumarkumar781

    3 жыл бұрын

    Naanum

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli69786 ай бұрын

    அம்மா இருக்கும் வரை அவரின் அருமை, பாசம், அன்பு, தெரியவில்லை இந்த மர மண்டைக்கு.தன் வாழ்க்கையை எனக்கும் என் தம்பிக்கும் அர்பணித்த என்அம்மாவுக்கு இப்பாடலை அர்பணிக்கிறேன்.(28.12.23)

  • @nareshvarman4199
    @nareshvarman41993 жыл бұрын

    80வருடங்களில் இந்த பாடலை எங்கஊர கள்ளிமடையில்ஆத்தூமேட்டுகளில் கேட்ட நினவுகள்

Келесі