Thirukadavoor Thevaram / Sundarar Thevaram / Podiyaar Meniyane.. / Keshav Raj’s Official
Музыка
Thiruchitrambalam🙏
New Year 2024 | New Release| Thirukadavoor Thevaram
In the depths of devotion, we uncover Shiva's boundless love, compassion and grace
"Welcoming in 2024, with the blessings of affectionately known as Thampiran Thozhan and Vanthonden, Sundaramurthy Swamigal's Thirukadavoor Thevaram. As my 1st release for this year, I pray that Lord Shiva's presence never leaves your heart, to each chapter of your life ..may He grant you His grace, strength and love. May everyday in 2024 sparkle brighther...and His presence shines through everything and keeps you and your family safe and healthy".
🌀Lets together spread the vibe of Saivism to every corner of the world..❤
🌀Huge thanks to my family and friends, wellwishers, followers and subscribers for all the tremendous love and support you have given me all this years..I'm so thrilled and grateful!🙏❤🙏...Happy New Year once again to all.
✅ Please do Subscribe|Like|Comment|Share
Vocal : Thirumanthira Nagar Kesavaraj Krishnan
Music : Dr. C. Radhakrishnan
Flute : Dr. C. Radhakrishnan
Nathaswaram : Thirumaalam T. G. Ananthan Govindhan
Mirudangam & Tabla : Nellai M. Harihara Sudhan
Morsing : Chandrasekar Raja
Voice over : Nandini Indiran
Mixing & Mastering : Thiagu Murugessu @Zenith Music Productions
Videography & Video Editing : Sabari Steps, Team, Pollachi,Tamil Nadu
Title Designer : Siva punniya Murthy & Vasanthi
பொடியார் மேனியனே
புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல்
வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே
எனக்கார்துணை நீயலதே.
பிறையா ருஞ்சடையாய்
பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே
மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய்
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே
எனக்கார்துணை நீயலதே.
எரியார் புன்சடைமேல்
இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை
நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய்
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே
எனக்கார்துணை நீயலதே
காரா ரும்பொழில்சூழ்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத்
துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான்
அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார்
பரலோகத்திருப்பாரே
Пікірлер: 119
திருசிற்றம்பலம் எம்பெருமான் ஈசனருளாள் எனது மனதில் குடிகொண்டுள்ள என் அன்பர்களுக்கு எனது அன்பு வணக்கங்கள். அனைவரும் எம்பெருமான் ஈசனருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று சகல செல்வங்களும் ஞானமும் நோயில்லா பெருவாழ்வும் வாழ இறைவனை விண்ணப்பிக்கிறேன். இப்பதிகம் சுந்தரமூர்த்தி சுவாமிகளாள் பாடப்பெற்றது. இதனை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி, இப்பாடல் படமாக்கப்பட்ட ஆலயங்கள் இறையருளிம் இயற்கை அன்னையின் நிழலும் புடைசூழ சுவாமி மக்களுக்கு அருள் பாலிக்கிறார். முதலாமாக : திருப்புடை மருதூர் திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் அருகில் உள்ள அற்புத திருத்தலமாகும். இங்கு அருள்பாலிக்கும் கோமதி அம்பாளின் திருமேனி உளிபடாது இமயமலையில் கிடைக்கப்பெற்ற திருமேனியாகும், மேலும் அம்பாள் மேனி உருத்திராக்ஷத்திருமேனியாகும்,சுவாமி திருநாமம் நாரும்பூநாதர் இனையதளத்தில் பார்த்து சென்று தரிசனம் பெற வேண்டுகிறேன். இரண்டாமக : ஶ்ரீ நித்யகலயானி அம்மன் ஆலயம் கடையம், மேற்குத்தெடர்ச்சி மலை அடிவாரத்தில் ராமந்திக்கறையில் உள்ளது சுவாமி வில்வ வன நாதர் அம்மை நித்ய கல்யானி அம்பாள்.மகாகவி பாரதியின் மனைவி ஊர், பல கவிகள் இங்குள்ள தெப்பத்தில் அவர் அமர்ந்து எழுதியுள்ளார். மூன்றாமாக : அருள்மிகு காசிநாத சுவாமி ஆலயம் அம்பசமுத்திரம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் இறைவன் காசிநாதராகவும், அம்பாள் மருகுதாம்பிகையாகவும் அருள்பாலிகின்றனர். நான்காமாக : தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு அருகேயுள்ள வீரசிகாமணி எனும் ஊரில் முற்காலப் பாண்டியர் காலத்து எட்டாம் நூற்றாண்டு குடைவரையொன்று காணப்படுகிறது. இன்று அக்குடைவரை கைலாசநாதர் கோவிலென அழைக்கப்படுகிறது. இவ்வூர் இராஜராஜ பாண்டி நாட்டு முடி கொண்ட சோழ வளநாட்டு கல்லக நாட்டு பிரமதேயம் வீரசிகாமணியான வீரவிநோதச் சதுர்வேதி மங்கலமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கைலாயத்து எம்பெருமான். பாண்டிய நாட்டில் சோழர்கள் பெயர்களிலிருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று. ( வீரசிகாமணி முதல் பராந்தகச் சோழனின் விருதுப்பெயர் ). இவ்வூர் இன்றுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. தெடர்ந்து தரும் தங்களது ஆதரவிற்க்கும் அன்பான கருத்துக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் திருசிற்றம்பலம் 🙏🏾 இப்படிக்கு கேசவராஐ் கிருஷ்ணன் ❤
@dr.n.mohan-738
Ай бұрын
உண்மையிலேயே அற்புதமான பரவசமூட்டும் காணொலி காட்சிகள் ஐயா. சுந்தரர் பாடலை மனம் உருகும் விமாக பாடினீர்கள். தாங்கள் கூறிய கோவில் பெயரும் இடத்தின் பெயரையும் குறிப்பிட்ட காட்சி வரும்போது திரையில் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது அடியேனின் பணிவான கருத்து. பாடலை பதிவுசெய்த தங்களின் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. தங்கள் திருவடிகளுக்கு வணக்கம் ஐயா. திருச்சிற்றம்பலம்.
@ayyammaayyamma9285
Ай бұрын
ஹரஹர சிவசிவ மிக்க நன்றிங்க சிவா❤🎉 தங்கள் இந்த திருத்தலங்களை குறிப்பிட்டு அற்புத பதிவிட்டமைக்கு தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் தங்கள் குறிபிட்ட திருத்தலங்களையேல்லாம் அடியேன் தரிசிக்க இறைவன் திருவடிகளையும் இவ்வேளையில் வேண்டுகின்றேன் சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவா
@user-dx4io5el1b
19 күн бұрын
அன்பு நன்றிகள் சகோ 🙏❤... உங்களின் இந்த அறிய விளக்கவுரைக்கு அன்பு நன்றிகள் பல சகோ.ஈசனருள் என்றும் நிலைக்கட்டும் ❤ ஓம் நமசிவாய 🙏💕🙏இவ்விடங்களை தரிசிக்கும் பாக்கியத்தை எமக்களிக்கட்டும் இறைவன் 🙏💜🙏சிவ சிவ.
@sabarimuthumuthu8150
18 күн бұрын
இதற்கும் அருகில் உள்ளது கோவில்பட்டி செண்பகவல்லி பூவனநாதர்.. அம்பாள் அவ்ளோ அழகா இருப்பாள் 7.5 அடி உயரம்..
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத் தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள் அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
@shanmugams8106
4 ай бұрын
❤❤
🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏
இந்த ஆண்டு வாரம் ஒரு திருமுறை எதிர் பார்க்கிறோம் ஐயா
இது போன்ற தேவார பாடல்களை உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள் அருமையாக உள்ளது.❤
அருமையான ஈடுபாடு.இனிமை.ஆசிகள்.வாழ்க வளர்க.சிவசிவ.வித்யாசமான பண் தேர்வு.
ஓம் நமசிவாய ❤
🎉 ஓம் நமசிவாய நமஹ 🙏
📿💐 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐📿
Just make me cry 🥹🥹🥹🥹🥹🥹
ஓம் நமசிவாய 🙏🙏
Om nama shivaya namaha. Engum nee ethilum nee ingu ennai seer paduthu..om nama shivaya.
சாகோ!! இதே போல் "திரு அரி சூத்திரம்" --(ஶ்ரீ ஹரி ஸ்தோத்திரம்), "மதுரா துதி" --( மதுராஷ்டகம்) போன்ற பாடல்களையும் தமிழில் படையுங்கள் ( மொத்த பாடலும் கூட்டு குரலில் மட்டுமே அமைய வேண்டும் (corrous))🙏 எனது தாழ்ந்த வேண்டுகோள்..🙏🙏 இப்பாடல்கள் வடமொழியில் மட்டுமே உள்ளது😢😢 கேட்க இனிமையாக இருக்கும்..ஆனால் தமிழில் இருந்தால் நிறைவாக இருக்கும்..🥲❤️
Om sai ram, shivaya nama om...
வாழ்க வளமுடன் ஐயா
சிவாய நம திருச்சிற்றம்பலம் சமார்ப்பணம் இறைவா
Om namah shivaya
Happy new year 2024🎉
🙏🙏👍
ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ ❤🙏🤲📿📿📿
HARA HARA mahadeva
முதற்கண் வணக்கங்கள் ஐயா🙏 பிறக்கும் புத்தாண்டு தங்களின் தேவாரப் பாடல் மூலம் ஆரம்பம் ஆகிறது இயற்கை எழில் கொஞ்சும் படபிடிப்பு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது ஐயா இயற்கையின் அழகை மெருகூட்டி மேலும் அழகு சேர்த்தது தங்களின் குரல் மெய்சிலிற்கிறது ஐயா🙏🙏🙏 நீங்கள் பிறைசூடிய மன்னனின் மைந்தன் ஐயா அதனால் தான் நீங்கள் பாடிய ஒவ்வொரு தேவாரப் பாடலும் தேவாமிர்தமாக இனிக்கிறது ❤️❤️❤️இதே போன்று இன்னும் நிறைய தேவாரப் பாடல்கள் தங்களுடைய குரலில் கேட்பதற்கு ஆவலாய் உள்ளேன் 🙏🙏🙏 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது 😍😍😍 இனிய புத்தாண்டு அன்பையும் மகிழ்ச்சியையும் புகழையும் நோயில்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஆண்டாக மலர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் ❤️❤️❤️🙏🙏🙏
@saravanamahimahi3029
6 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
சிவாய நம. உங்கள் பதிவை எதிர்ப்பார்த்தோம் மிக்க நன்றி ஐயா.
அய்யா வணக்கம் தேவாரம் இசை பயணம் மிக அற்புதம் தங்களின் படைப்புகளை எதிர் நோக்கும் அடியேனும் ஒருவன் .புத்தம் புது வருடம் இனிமையாக மலர்ந்ததாக எண்ணுகிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏 தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🔱🔱🔱 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெணுரு ஆனாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி ஆரூ ரமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. கயிலை மலையானே போற்றி போற்றி 🔱🔱🔱🔱
@Thirrupugazhmurugansongs
6 ай бұрын
(தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம் ) பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 1 பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 2 அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. 3 போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத் தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 4 மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 5 மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 6 எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7 வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. 8 அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள் அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 9 காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
4:29 Goosebumps at peak anne Thiruchitrambalam Sivasiva 🙏
I AM EAGERLY WAITING FOR THIRUKKADAVOOR THEARAM IN YOUR DIVINELY VOICE🎉
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!தங்கள் பாடலைக் கேட்கும் போது அடியேனுக்குத் தோன்றுவது ஒன்று தான்..அற்புதத் திருமுறைகள் போன்ற தெய்வீகப் பாடல்களை இனி வரும் காலங்களிலுள்ள தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் ஓர் கருவியாக இறைவன் தங்களைப் பயன்படுத்துகின்றான்.மிகச் சிறந்த சிவத்தொண்டு...நன்றி.நமச்சிவாயம்.
கேசவ் ஐயா வணக்கம், காலம் மிக வேகமாக போய் கொண்டு உள்ளது, ஆகையால் இறைவன் கொடுத்த இந்த வாடகைவீடு (உடல், உயிர்) தங்கியுள்ள போதே தங்களது பாடல்களை கேட்டு இன்புற்று வாழ வேண்டும் என்று மனம் ஏங்குகிறது ஆகையால் திருமுறைகள் பாடல்கள் காலம் தாழ்த்தாமல் பாடி அருள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இறைவனின் கருணையால் நிச்சயம் நல்லதே நடக்கும் சிவாயநம 🙏
@keshavrajsofficial
Ай бұрын
சிவாய நம ஐயா.. மிக்க நன்றி தங்களின் திருமுறை மேல் உள்ள தாகம். கண்டிப்பாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடி பதிகிறேன் திருசிற்றம்பலம் 🙏🏾
Aahaa arpudham, iyaa.
@keshavrajsofficial
3 ай бұрын
Sivayanama 🙏🏾
🙏ஆரூரா தியாகேசா 🌼 அமிர்தகடேசா 🌼 சிவாய நம சிவாய 🙏🌼🦚🔱🔱🔱
மனதிற்கு இதமாக உள்ளது ஐயா!! மிக்க நன்றி!!
தேவாரப் பாடலின் ராகம் மிகவும் இதயத்திற்கு இனிமையாக இருந்தது. உங்களின் குரல் வளம் மிகவும் அற்புதம். மீதமுள்ள பதிகங்களையும் படிந்தால் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும். நன்றி அய்யா!... பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத் தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள் அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. விடுப்பட்ட பதிகங்களையும் உங்கள் குரல் வளர்த்தால் பாடினால் மிகவும் இனிமையாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கிறோம். நன்றி அய்யா!...
ஹரஹர சிவசிவ
நமசிவாய வாழ்க.. நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதார் தான் வாழ்க...🙏🏼🙏🏼🙏🏼
Aum NamaShivaya... Your voice never failed to make tears in my eyes.. May Shivaperuman Always Bless you
still i am waiting for next video.
புத்தாண்டுக்கு சிறந்த வரவேற்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
I have always liked your rendition, the music and visuals. I appreciate this all the more for the introduction and translation of the verses. Thambi, the artistry you bring to these videos is superb. || Thiruchitrambalam ||
ஓம் நமசிவாய வாழ்க
💕💕💕🕉️🕉️🕉️🙏🙏🙏👌.super.nice..om.namasivaya.siva.siva.hara.hara.maha.deva.krithika..hari.om.sir.💕🌙🌜🌟🎼🎶🎤🎵🌺🌹❤️
Ohm shivaya namaha 🙏🙏🙏
🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி
💙💙💙💙🎶🎶🎵🎵🎵🌟🌟🌟🌟.stear.like.sir.hari.om..k.k.🌺🕉️🌺🕉️🌺🙏👌
You are absolutely stealing my heart with your songs. Your voice is very good. Om Namah Shivaya Vaazhga...♥️💐🙏
❤சிவாயநம ❤சிவாயநம
Awesome pic super super 👌🙏🙏🙏👌
நன்றி அண்ணா 🙏 திருகடவூர் தேவாரம் பாடல் வாயிலாக தந்தமைக்கு.❤
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
இது போன்ற தேவார பாடல்கள் தயாரித்து பதிவேற்றுங்கள் ஐயா❤ 🙏🙏🙏
தங்கள் குரல் கேட்க கத்திருந் தேன். நன்றி சகோதரரே🤝
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
ஐயா... காதலாகி கண்ணீர் மல்கி பாடல் வேண்டும். 🙏🚩
சேக்கிழார் பெரிய புராணம் 63 நாயன்மார்கள் பற்றி பாடல் வேண்டும் சிவா ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏🤲❤📿📿📿👍🤝🏻❤🤗
அருமை சகோ❤ ஓம் நமசிவாய 🙏💕🙏
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏🙏 சகோதரருக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤ அருமையான பதிவு.⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
ஐயா சிவ சிவ தங்களின் எந்த பதிகம் கேட்பினும் உருகி ஈசன் பால் அன்பு பெருகுகிறது தங்கள் திருவடி வணங்கி மகிழ்கிறேன் ஐயா
சிவாயநம ஐயா 🙏🙏🙏
No words explain Siva siva
Excellent ayya! What a rendition! Can sense your divinity when singing. Please continue with more thevarams in our unparalleled ancient Sivan temples in South India 🙏🏾 Really soul lifting. Thank you.
ஐயா திருச்சிற்றம்பலம் ஐயா உங்க குரல் வளத்தில் முத்து விதானம் பதிகம் பாட வேண்டுகிறேன்
namassiváya🙏
Sivayanama 🙏🏻🙏🏻🙏🏻
Super very nice.... Super divine voice 🙏
சிவ சிவ
நெஞ்சுருகி, கண்ணீர் பெருகுகிறது, அருமை,ஐயா !
ஓம் நமசிவாய சிவாய வசி வசி🙏
அருமை அற்புதம்
ஓம் நமசிவாய
Keep doing all thevaram verses My best wishes
Super sir... Really excited to see your upcoming projects. All are purely divine
Amazing ....my heart melted....my eyes cried
@keshavrajsofficial
5 ай бұрын
Sivayanama 🙏🏾
அண்ணா உள்ளமுருகிய குரல் அருமை 🙏 04:53 - 05:13 கறையாரும் மிடற்றாய் , மிடறு என்பதே சரியானது இடற்றாய் அல்ல. மிடற்றாய்; மிடறு = கண்டம், கறையாரும் மிடறு = நீலகண்டம் 🙏 குறிப்பு: கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே - சம்பந்தர் தேவாரம் திருவாவடுதுறைப் பதிகம் 🙏
🎉 Happy New year anna this year staring with your wonderful voice I'm so happy ❤ annamalayar blessings always with you honey will compared only with thiruvasagam but as I compared your wonderful voice with honey 🍯 so sweet and no words to explain about my expressions but the search never end for Keshav tunes 🎉🎉🎉🎉💌💯💫✨🥰🤍🤍🤍🤍🤍🙇🙇🙇 best of luck for all your schedules 👍take care 🙏 sivayanama anna 🙏🙏🙏🙏🙏🎁🎹🎤🎧🌹🌸
@crazyboyzz4512
5 ай бұрын
.💙💙💙💙💙🕉️🕉️🕉️🙏🙏
ஐயா அருமை,ரமண மகரிஷி பாடல் ஒன்றை இதே போல் வழங்க வேண்டும்.
Beautiful Thevaram Sir ❤ God Bless you 🙏🏼 Keep rockingg like this in this year 2024 Sirr..
Aiya ungaal thiruvadi saranam
@keshavrajsofficial
5 ай бұрын
Sivayanama 🙏🏾🙏🏾
சிவாய நம🙏
The song and the way it was sing was divine and blissful.. It was a treat to ears and the video was a visual treat..is this song filmed at Thirukkadavur temple??
5:14 I cried this word.
ஓம் நமசிவாய போற்றி ❤❤❤❤💪💪💪💪
Sir🎉🎉🎉🎉 VERY HAPPY NEW YEAR🎉
Ohm Namashivaya
நன்றி நன்றி நன்றி பா
Very nice❤
Very nice singing sir.Voice is so clear.The song is really mesmerising. 🙏🙏
Which place the divine temple shooting held. So nice Templeand teppakulam
@lavanyanagaraj-kumar2715
3 ай бұрын
Thirukadaiyur - an hour away from Sirkazhi / Mayiladuthurai. Famous for conducting Shashtiabdapoorthi here. Am at this divine place today . Listening to this Thevaram completed my experience
👌👌👍👍🙏🙏👌👌👍👍💐💐
Super bro om Nama shivaya
அற்புதம்.... ❤❤❤
💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🌜🌜🌜🌛🌛🌛🙏🙏🙏🕉️🕉️🕉️
உடலில் உயிர் உள்ளதென்பதே.... அறிந்து கொண்டேன்..... மெய் சிலிர்க்கிறது...... அதிர்வில் இருந்து..... என்னால் மீள முடியவில்லை........
இக் காணொளியில் வரும் திருக்கோயில் எந்த ஊருங்க சிவா
Such a beautiful and divine voice master 🙏🏼✨
Splendid bro
❤❤❤ awesome Briohh
So divine song tambi ❤
ஐயா தயவு செய்து முழு பாடலையும் பாடி பதிவேற்றம் செய்யுங்கள் 😓😔🙏
கேசவன் நமஸ்காரம், நான் சென்னையிலிருந்து வருகிறேன். என் பேரன் பெயர் சிவா. சிவனிடம் அதிக ஈடுபாடு டைய குடும்பம் எங்கள் குடும்பம் குழந்தை க்கு முறையான திருமுறை பாட பயிற்சி வேண்டும். நீங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறீர்களா? அப்படி இருந்தால் தெரியப்படுத்தவும். Link ஏதாவது இருந்தால் பகிறவும். திருச்சிற்றம்பலம்.
@keshavrajsofficial
3 ай бұрын
@shankunthalaraj406 : திருசிற்றம்பலம் ஐயா🙏🏾 நல்லது மிக்க மகிழ்ச்சி எனது மின்அஞ்சலில் தொடர்பு கொள்ளவும் kkeshavaraj@gmail.com
@shakunthalaraj406
3 ай бұрын
ஐயா நமஸ்காரம், உங்கள் பதில் பதிவை இப்போது தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன். நன்றி ஐயா.
Mam u teach thevaram claas...plz send mam number whatsap
ஓம் நமசிவாய ❤