பொன் செய்த மேனியினீர் - சுந்தரர் திருப்பாட்டு
Музыка
சொற்றமிழ்ச்செல்வர் சோலார்சாயி அவர்களின் தெய்வீக குரலில் சுந்தரர் திருப்பாட்டு- இசை - நாம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திருமுதுகுன்றம் மிகப் பெரிய கோயில். இத்தலம் இக்காலத்தில் விருத்தாசலம் (Vriddhachalam) என்று வழங்கப்பெறுகின்றது. விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி இடையே உள்ள தலம். (சிதம்பரத்திலிருந்து மேற்கே 45 கிமீ தூரத்தில் உள்ள தலம்).
பதிக வரலாறு : சுந்தரர் திருமுதுகுன்றத்தில் பதிகங்கள் பாடி ஈசனை வணங்கினார். (7.43 நஞ்சியிடை & 7.63 மெய்யை முற்றப் பொடிப் பூசி). ஈசன் 12,000 பொன் அருளினான். ஈசன் தந்த அப்பொற்காசுகளைத் திருவாரூரில் தரவேண்டினார் சுந்தரர். "மணிமுத்தாற்றில் இட்டுப் பின் கமலாலயத்தில் பெற்றுக்கொள்க" என்றான் ஈசன். அவ்வாறே சுந்தரர் அப்பொன்னைத் திருமுதுகுன்றத்தில் மணிமுத்தாற்றில் இட்டார். (அப்படிப் போடுமுன் ஒரு காசை மச்சம்வெட்டிக்கொண்டார் (kept a sample)).
திருவாரூரை அடைந்தபின் பரவையாரோடு கமலாலயத் திருக்குளத்தை அடைந்து தேடியபொழுது அப்பொன் கிட்டவில்லை. அப்பொழுது திருமுதுகுன்றத்து ஈசன்மேல் இப்பதிகத்தைப் பாடி அப்பொன்னைப் பெற்றார் சுந்தரர். திருச்சிற்றம்பலம்
பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே. 1
உம்பரும் வானவரும்
உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர்
அடியேனிட் டளங்கெடவே. 2
பத்தா பத்தர்களுக்
கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 3
மங்கையோர் கூறமர்ந்தீர்
மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர்
திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 4
மையா ரும்மிடற்றாய்
மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 5
நெடியான் நான்முகனும்
இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் *தந்தருளீர்
அடியேனிட் டளங்கெடவே.
(* தந்தருளாய் என்றும் பாடம்) 6
கொந்தண வும்பொழில்சூழ்
குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 7
பரசா ருங்கரவா
பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 8
ஏத்தா திருந்தறியேன்
இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
கொடியேனிட் டளங்கெடவே. 9
பிறையா ருஞ்சடையெம்
பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
கெளிதாஞ்சிவ லோகமதே. 10
திருச்சிற்றம்பலம் . #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
Пікірлер: 50
சூப்பர் அய்யா தெய்வீக குரல் இறைவன் உங்கள் காவில் குடிகொண்டு பாடுகின்றார் நன்று வாழ்க பல் ஆண்டு பணிந்து அன்புடன்
பாட்டு வரிகளோடு பாடுவது மேலும் சிறப்பாக உள்ளது கூடவே பாட வசதியாக உள்ளது நீங்கள் பாடம் எல்லா பாடும் எல்லா பாடல்களும் மிக மிக அருமை இனிமை நெஞ்சை நெகிழ நெகிழச் செய்கிறது ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்க எனது அன்பான வாழ்த்துக்கள்
ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்களில் நீர் அருவியாக🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ நமசிவாய சிவா இறைவன் திருவருள் நன்றி நமசிவாய
சிவா உண்மை யான பதிகம் இது கண்டிப்பாக சாமி.பொன்னும் பொருளும்.தருவார்
சிவ பெருமான் அடியர் வளர்க நலமுடன் வாழ வேண்டும்.
என் உயிரே குருநாதா தவத்திரு வாதவூரடிகள் ஐயா போற்றி போற்றி நமது சிவலோக திருமடத்தின் அன்பு அடியார் சிவ சோலார் ஐயா தேன் அழுதாய் இனிக்கிறது உங்கள் குரல் வாழ்க வளமுடன் ஐயா உங்கள் அன்பு சிவ கமலா தேவி அம்மா அந்தமான் சிவலோக திருமடம்
சிவ சிவ நின் திருவடி சரணம்
இனிய காலை வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு திரு சோலார் சாய் அவர்களின் குரலில் தெய்வீகமான சுந்தரர் தேவார பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
எங்கள் ஊர் திருமுதுகுன்றம் ( விருத்தாச்சலம்)☺
ஈசன் அருள்வீர் அடியார்கள் இட்டளம கெடவே.. 🙏
நமசிவாய வாழ்க
சிவாய நம
உங்களை உங்கள் இல்லத்திலிருந்து தெரியும். சிவத் தொண்டாற்றும் உங்களுக்கு சிவ காலை வணக்கம். பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Thiruchtrambalam 🙏🙏🙏🙏
சிவ சிவ நமசிவாய சிவா இறைவன் கருணை என்றும் குருநாதரின் அருள் இனிய பதிகம் உண்மை யான நிலை இந்த பதிகம் தொடர்ந்து 11நாள் கேளுங்கள் முடிந்தால் மனதில் பதியும்படி பாடுங்கள் பணம் திருப்பி வரும் இறைவன் மீது சுந்தரர் நம்பிக்கை யோடு கேட்டார் நாமும் உரிமையுடன் நம்பிக்கையுடன் கேளுங்கள்.அப்பா.தருவார்.சிவாயநம
கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது 🙏🙏🙏 சிவாயநம!
❤️
🙏🏾🙏🏾🙏🏾
சிவாயநம ஐயா திருவடிவணங்கி சிவாயநம
திருவருளும் குரு அருளும்
சிவாயநம 🙏🙏
Om Namah Shivay🙏 amazing rendition 🙏
சிவாயநம
ஓம் சிவாய நம ஓம் நமசிவாய
Sivayanama 🙏
தெய்வீக குரலில் மூழ்கினேன்🙏
ஓம் நமசிவாய ஓம்
எங்கள் ஊர் விருத்தாசலம் அருகில். விஜயமாநகரம்
எங்கள் ஊர் திருமுதுகுன்றம் ( விருத்தாச்சலம்)
எதிர்பார்த்த பதிகம் 🙏🙏🙏
Anna murugara pathi paduga anna
Super sir fantastic very very super sir
Namah Shivay 🙏🙏🙏
Om Namasvaiya
Siva Siva Siva Siva 🙏🏻
Andavan Thunai
இனிமை இனிமை திருச்சிற்றம்பலம்.
pathigathin palan appadiye starting la sollunga ayya. paduvathu miga arumai ayya. vazhga valamudan. Om Namasivaya🙏
இந்தப் பாட்டுக்கு பொருள் தேவை பரவை நாச்சியார் வாடுவது ஏன் இதனுடைய சரிதத்தை கூற வேண்டும் தயவு செய்து வீடியோ போடவும்
🙏
👣🫂💐💐💐💐💐💐👏
திருச்சிற்றம்பலத்தை விட என் மனம் கவர்ந்த மனம் நிறைந்த ஆலயம், திருமுதுகுன்றம் ஆகும். நீண்ட காலம் கடந்து சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களின் திருக் குரல், நம் சிவலோகத் திருமடம், நாம் இசை கூட்டணியில் அவதரித்துள்ள ஊனை உருக்கும் பதிகம், சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களே, எனது சுந்தரர் பெருமானாரே நீர் தானய்யா, உமது திருப்பாதங்களில் சரணம் அய்யா, திருச்சிற்றம்பலம்.
@004_eee_aravinds3
Жыл бұрын
Unmai
திருச்சிற்றம்பலம்
❤
❤