திருப்புகழ் பாடல்கள் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | திரு அருணகிரிநாதர் | Thirupugazh
Музыка
The Tiruppukal (Tamil: திருப்புகழ், Tiruppukaḻ, meaning 'Holy Praise' or 'Divine Glory'), sometimes spelled Tiruppugal, is a 15th-century anthology of Tamil religious songs dedicated to Murugan (Kartikeya), the son of Shiva, written by the poet-saint Arunagirinathar (Tamil: அருணகிரிநாதர்) The anthology is considered one of the central works of medieval Tamil literature, both for its poetical and musical qualities, and for its religious, moral and philosophical content.
There are no historical records of the life of Arunagirinathar, and what we know of the composition of the Tiruppukal is largely derived from oral traditions and legends recorded in commentaries on the work. According to these, Arunagirinathar led a hedonistic life as a young man. His disgust at his own conduct led him to attempt suicide by jumping off the temple tower at Tiruvannamalai. He was saved by Murugan himself. Arunagirinathar was transformed, and began a long pilgrimage, visiting the Arupadai Veedu (Six Abodes of Murugan), the six temples most sacred to Murugan, and over 200 other holy shrines in India and Sri Lanka. At each of these, he composed songs in praise of Murugan, which are collected together in the Tiruppukal. The majority of the songs are sung to Murugan, but there are also a few songs that sing of deeds of Shiva or the avatars of Vishnu, and of the power of Parvati. Almost all songs end addressing Murugan as Perumal, a term that traditionally had strong associations with Tamil Vaishnavism.
The worship of Murugan has strong roots in Tamil Nadu. According to Tamil legends, Murugan was the brave warrior who defeated the powerful demon Surapadman,[5] and was seen as being the epitome of youth, compassion and beauty. Arunagirinathar's songs build on this tradition, hailing Murugan as the source of all knowledge, who even gave saintly advice to his father, Shiva. Murugan is described as being full of love and compassion. Arunagirinathar says in the Tiruppukal the songs will, by the grace of Murugan, convey the pearls of devotion and wisdom. The songs contain philosophical musings on God, expressed in simple terms, placing particular emphasis on the role of God's grace or mercy in helping the individual deal with the troubles and ills that afflict humanity. The songs also deal with issues of morality and living a virtuous life on Earth, with many exhorting people to seek true happiness in God.
Please Subscribe to our whatsapp channel through the below link:
whatsapp.com/channel/0029VaN3...
Пікірлер: 143
பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் எங்க வம்சமே தலைமறை தலைமுறையாக அவருடைய குரலுக்கு ரசிகர்கள் அவர் கந்தனிடம் சென்று விட்டார் ஆகவே கந்தனோடு சிர்காலையும் பாதம் பணிகிறேன் கந்தன் அருளோடு சீர்காழி பகவான் அருளும் நமக்கு கிட்டட்டும் நன்றி ❤❤
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ... வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும், வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ... பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ... சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ... நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ... பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், ஆராயும் நீதி வேலும் மயிலும் ... நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ... ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ... மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ... அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு), ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ... நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ... தகுதி உள்ள ஊமைப் பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா ... ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு மறைவு செய் ... முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்த கோபாலராய நேயம் உள திரு மருகோனே ... கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் ... தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. ... கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.
ஆகா அற்புதம், இரண்டு நாளாக என் அப்பனின் திருப்புகழை தேடிக் கொண்டிருந்தேன், அய்யா சீர்காழியாரின் தேன் குரலில் கிடைக்கப் பெற்றது அடியேன் பாக்கியம், இது தான் முருகனின் திருவருள் 🙏🙇
@GURUDESIGANKALUSULINGAM
2 ай бұрын
😊
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉🙏 "திருப்புகழ்! 🎉🎉🎉🎉🎉 " உனைத் தினம் தொழுதினன்!🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 " நன்றி🙏🎉🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@TommyPeter-zo7ss
2 ай бұрын
(Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
@user-sm5gk9ti6o
2 ай бұрын
Suppar suppar suppar
காலையில் மிகவும் காதுக்கினிய.இசை மிகவும் அருமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@TommyPeter-zo7ss
2 ай бұрын
ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
திருப்புகழ் மகிமை.. அதைப் பெற்றவருக்கு மட்டும் தான் புரியும்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
கடைக்கண் அருள் கிடைக்கும் இந்த கடை திறந்து இருப்பினும் கொள்வார் இல்லையே இறைவா முருகா. நீயே கதி.... இறையருள் குரலோன் குருநாத பாதங்களே சரண்.🙏
@KandumanyVelupillaiRudra
2 ай бұрын
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@viswanathanv1887
2 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@Nagalakshmi-wc7ni
29 күн бұрын
காதில்தேன்பாய்ந்தமாநதிரியும்மனதில்உற்சாகமும்பிறக்குதுதெய்வீகக்குரல்
🌹சீர்காழியின் சீர்மிகு சங்கீதக் குரலுக்கு, 🌷சீரான சிந்தைமிகு திருப்புகழை அருளிய அருணகிரி யும் மனதார மகிழ்வான். 🌼🌸🌺🌻🌷🌲💐🥀
1)உனைத்தினந் தொழுதிலன்-திருப்பரங்குன்றம் 2)அதலசேடனாராட-பொதுப்பாடல்கள்(இத் திருப்புகழ் திருவண்ணாமலை தலத்திலே பாடப்பட்டது எனினும் பாடலில் தலத்தின் பெயர் குறிப்பிடாமையால் பொதுத் திருப்புகழ் ஆனது. அருணகிரி சுவாமிகளின் வாழ்க்கையில் பாடப்பட்ட முக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. முருகப்பெருமானை நேரில் வரவழைக்க பாடிய விருத்தங்கள்,கந்தர் அலங்காரப் பாடல் என்பவற்றோடு இத்திருப்புகழும் அடங்கும். கம்பத்திளையனார் தூணில் முருகப்பெருமான் இத்திருப்புகழ் பாடியதும் காட்சி அளித்ததாகக் கூறப்படுகின்றது. 3)கைத்தல நிறைகனி-விநாயகர் திருப்புகழ் 4)சீரான கோல கால நவமணி-விராலி மலை (,இத் திருப்புகழில் முருகப்பெருமான் மதுரையில் உப்பூரிக்குடி கிழானுக்கு ஊமை மகனாக உருத்திர ஜென்மன் என்ற நாமத்துடன் அவதரித்து இறையனார் அகப்பொருள்(திருவாலவாயுடையார் இயற்றியது)பொருளுரை எழுதிய 49(7×7)புலவர்களின் உரைகளைக் கேட்டு அவற்றில் நக்கீரர், கபிலர்,பரணர் ஆகியோரின் உரையே சரியானது எனக் குறிப்பால் உணர்த்தி மதுரைத் தமிழ் சங்கத்துடன் இணைந்திருந்த வரலாறு கூறப்படுகின்றது. உருத்திரஜென்மன்-உருத்திரன் ஆன சிவனால் சாபம் கொடுக்கப்பட்டு ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் முருகப்பெருமானுக்கு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று. மகேந்திரமலையில் ஆகமங்களைச் சுவடிகள் ஆக்கி அதனை உமையம்மைக்கு விளக்க முற்பட்டு நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே "எனக் கட்டளை இட்டு, விளக்க ஆரம்பித்தார்..அம்மை விருப்பின்றிக் கேட்கவே "நீ இங்கு இருக்க முடியாது "என தன்னிடம் இருந்து விலகச் சபித்தார். இதனை அறிந்த முருகப் பெருமான் மகேந்திரமலையினுள் நந்திதேவரின் காவலையும் மீறி உட்புகுந்து ஆகமச் சுவடிகளை தன் பன்னிரு கரங்களால் வாரி எடுத்து கடலினுள் புக வீசி எறிந்தார். இதனால் மதுரையில் மூங்கை மகனாக (ஊமைப் பிள்ளை)பிறக்கும் படி இறைவன் சபித்தார். தன் கட்டளையை நிறைவேற்றாது முருகனை உட்புக விட்ட நந்திதேவரையும் கெளிறாக அலையும் படி சபித்தார். கெளிறு-சுறா. நந்தி தேவர் சுறாவாகி முருகனால் கடலினுள் வீசி எறிந்த ஆகமங்களை தன்னுள் அடக்கி காத்தவாறே வலைஞர் பிடிக்கு அகப்படாது பெருந் தொல்லை கொடுத்து வந்தார். இங்கே தான் அன்னையும் வலைஞர் மகளாய் வளர்ந்து வந்தார். இறைவன் வலைஞனாக வந்து சுறாவைக் கொன்று நந்திதேவருக்கு சாபமுக்தி கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணந்தார். ஆகமங்களைக் காத்த பெருமைக்குரியவர் நந்திதேவர். 5)துள்ளுமத வேள் கைக் கணையாலே-பொதுத் திருப்புகழ் 6)எருவாய் கருவாய்-திருவீழிமிழலை 7)ஒரு பொழுதும் இரு சரண-பழநி 8)சாந்துடனே புழுகு (புனுகு)-சிதம்பரம் மிக்க நன்றி ஐயா.நமச்சிவாயம்.
@ramachandrans7306
2 ай бұрын
மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி..
@thayalanvyravanathan2651
2 ай бұрын
இறைவனின் அற்புத அவதாரங்களும்,அருளும் எல்லாக் காலங்களிலும் ஒரே வண்ணம் தான் உள்ளது.கலியுகத்தில் உள்ள மனிதர்களால் அதனை உணர்வது தான் சாத்தியமற்றுப் போனது. ஆனால், அருணகிரிநாதர் போன்ற ஞானிகள் மறுபிறவி எடுத்தனர் என்பதனை அடியேனால் ஒப்புக்கொள்ள முடியாது ஐயா.அது தவறான கருத்தும் கூற. ஞான நிலை அடைந்து இறைவன் திருவடியுடன் இரண்டறக் கலப்பவர்கள் மறுபடியும் பிறப்பது இல்லை.அருணகிரிநாதர் சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் இந்த வேண்டுகோளைக் காணலாம். நான் உதாரணம் கூறுகின்றேன். முதலில் ஐயா பாடியுள்ள பழனித் திருப்புகளில் இருந்தே பாருங்கள். "ஒரு பொழுதும் இரு சரண "எனும் திருப்புகழில் "பிறவி அற நினைகுவேன் என் ஆசைப்பாடைத் தவிரேனோ " சிதம்பரம் திருப்புகழ் கரிபுராரி காமாரி திரிபுராரி தீயாடி கயிலையாளி காபாலி....கழையோனி கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி காயோகி...சிவயோகி பரமயோகி மாயோகி பரி அரா ஜடாசூடி பகர ஒணாத மா ஞானி...பசுவேறி பரதம் ஆடி கானாடி பர வயோதிக அதீத பரம ஞான ஊர் பூத.....அருளாயோ. (இது இத்திருப்புகழின் முன் பாதி) யானையைக் கொன்று தோலை உரித்து உடுத்தியவரும்,மன்மதனை எரித்தவரும், திரிபுரத்தை அழித்தவரும், மயான நெருப்பில் மூழ்கி ஆடுபவரும், கயிலாய மலையின் இறைவரும், மண்டையோடுகளை கையில் ஏந்தியவரும்,மூங்கிலின் கீழே தோன்றியவரும் (வேய் மூத்தர்-திருநெல்வேலி தலபுராணம்),கையில் நெருப்பை ஏந்திய ஆச்சார்ய குருநாதரும் ,கோடரி ஆயுதத்தை கையில் ஏந்தியவரும்(மழு),நள்ளிரவில் ஆடுவதற்கு விருப்பம் உள்ளவரும், பூத கணங்களோடு ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவயோகியும், பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும், பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும், சொல்லுதற்கு அரிய மகா ஞானியும், பசுவை வாகனமாகக் கொண்டவரும், பரதநாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் ஆடுபவரும் மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய பரமசிவனாரின் பெரிய ஞான ஊர் ஆன கயிலாயத்தில் சிவஞானபீடத்தில் யான் புகுவதற்கு நீ அருள மாட்டாயோ? என்பது இந்த வரிகளின் பொருள். மேலும், அனுபூதியில், "கார் மா மிசை காலன் வரில் கலபத்து ஏர் மா மீசை வந்து எதிரப்படுவாய் " என்பார். இதன் பொருள் கரிய எருமை வாகனத்தில் அமர்ந்து எமன் வரும் காலம் என் முன்னே மயில் மீது அமர்ந்து என்னை அழைத்துச் செல்ல நீ வருவாய்... "கூ கா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா " இதன் பொருள் எனது சுற்றத்தாரும் உறவினரும் ஒப்பாரி வைத்து கதறி அழும் படி நான் மரணிக்காத வகையில் எனக்கு மெய்ஞானத்தை உபதேசித்தவனே... இங்கே மரணம் என்பது ஒரு உயிர் பிறந்து பூமியில் அது வாழும் காலம் முடிவடைந்து விட்டது என்றால் யம தூதர்களோ, யமனோ வந்து அழைத்துச் செல்வார்கள். இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமே ஐயா.இப்படி அழைத்துச் செல்லப்படும் ஆத்மாக்கள் தாம் ஆற்றிய வினைகளுக்கு ஏற்ப சொர்கமோ, நரகமோ வாழ்ந்து அனுபவித்து அந்தக் காலமும் முடிய எஞ்சிய வினைகளுக்கேற்ப மறு பிறவியை அடைகின்றன. யமனால், அல்லது யம தூதர்களால் அழைத்துச் செல்லப்படும் உயிர்களுக்கு மறுபிறவி கண்டிப்பாக உண்டு. ஆனால், யோகியரோ, ஞானியரோ, அவதார புருஷரோ...இவர்களை யமனோ யம தூதர்களோ அணுக மாட்டார்கள். இவர்கள் தாம் வாழ்ந்த காலம் முடிவடைந்ததுடன் தாம் தமது ஸ்தூல சரீரத்தை விட்டு இறைவனுடன் தாமே இரண்டறக் கலந்து விடுகின்றனர். இதே கருத்தைத் தான் கருட புராணம் கூறுகின்றது. சாதாரண மனிதர்களுக்குத் தான் பிதிர் காரியங்கள் செய்ய வேண்டும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அது தேவை இல்லை. ஒரு வேளை அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பின் அந்தப் பிள்ளைகள் தமக்கு பித்ரு தோஷம் வராதிருக்க தமது நல்வாழ்க்கைக்காக இந்தக் கருமாக்களைச் செய்யலாம். ஆனால் இதனால் எந்த நன்மையோ தீமையோ முக்தி அடைந்த ஞானிகளுக்கு ஏற்படுவதில்லை. இதனால், அருணகிரிநாதர் போன்ற ஞானிகள் மறுபிறவி என்று கூறாதீர்கள். அது அவர்களின் பக்திக்கே இழுக்கு. அவர்கள் பாடிய அத்தனை தெய்வீகப் பாடல்களும் பலன் அற்றது என்று ஆகிவிடும். தவிர அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் 15ம் நூற்றாண்டு.நமச்சிவாயம்.
@gopalakrishnanpanjan2767
2 ай бұрын
😅nasiwa
ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@TommyPeter-zo7ss
2 ай бұрын
ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
அருட்செல்வர் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் இசைமேதை சீர்காழியார் குரலில் கேட்க நாங்கள்திருமுருகன்அருள்பெற்றுள்ளோம்
இந்த தெய்வக்குரலோன் பாடிய திருப்புகழ் இசைப்பேழைகளை தேவாரத்தை மறைத்து வைத்திருந்த சிதம்பரம் கோவில் திருஅறைகளில் வைத்திருந்தீர்களா சீக்கிரமாக சீர்காழியார் பாடிய தேவாரம், திருப்புகழை வெளியிடுங்கள் எங்கள் ஆவி இருக்கும் பொழுதே சுவைத்து விடுகிறோம் ஆவஇகஉழஐயஉமஉன்னஏ
@viswanathanv1887
2 ай бұрын
Thanks
@aavinsaibabu3625
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@suparamani633
2 ай бұрын
Mkkmm
@vmaniam9740
Ай бұрын
088⁸⁸⁸o7⅞am
@renum99
Ай бұрын
😮😢😊😮😢😊😢😊😢😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😊😢😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😢😮😢😊😢😢😊😮😢😊😮😢😊😢😊😢😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊😮😢😊
ஐயா சீர்காழி அவர்களின் குரலுக்கு என் அப்பன் முருகன் ஓடோடி வருவார் அத்தனை இனிமையான குரல்
இவரது குரலுக்கு முருகன் ஓடோடி வருவான் முருகா முருகா. 🙏🏿🙏🏿🙏🏿
My favourite singer is always Sirkazhi Govindarajan Sir. No one can match his high pitch voice
Waiting for thirupugazh all songs from ayya Govindarajan voice ❤
@TommyPeter-zo7ss
2 ай бұрын
ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
உங்கள் குரலில் அற்புதமான தெய்வீக தன்மையை என்ன வென்று உரைப்பது மறைந்தாலும் மறக்காமல் எங்களோடு வாழ்வது ஐயா அவர்கள்
தெய்வீக குரலோன், என்ன ஒரு குரல் என்ன இனிமை தெய்வீகம், கேட்க கேட்க திகட்டாத தெய்வ கானங்கள், முருகா ❤
கருணை கடவுளே முருகா!!! உன் அருளை உணர செய்த முறை அடியேன் செய்த பாக்கியமே !! முருகா ஆறுபடையோனே சரணம் ❤
அருணகிரி திருப்புகழை இவ்வுலகமக்கள் கேட்டுமகிழ்ந்திட மிகச் சிறப்புடன் பாடிய எங்கள் இசைமாமணி கலாநிதி கோவிந்தராஜன் ஐயாவிற்கும் இப்பாடல்கள் மூலம் ஐயா என்றும் இவ்வுலகில் வாழ்கிறார் என்பதை உணரவைத்து அவர்குரலில் ஒலிக்கும் பாடல்களை பதிவிட்ட இப்பதிவிற்கும் நன்றிகள்
வேலும் மயிலும் துணை. முருகப் பெருமான் துணை குருவே துணை. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.
Thank you SG family for sharing this video. It sounds like this great soul is still alive.🇨🇦
தாளக்கட்டு, சந்தம், இசை மிடுக்குகளுக்கு எடுத்துகாட்டாக விளங்குவது திருப்புகழ். அத்தகைய திருப்புகழைத் துள்ளியமாக உணர்ந்து தமது வெண்கலக்குரலில் கம்பீரமாகப் பாடியுள்ளார் சீர்காழியார். வணங்கி மகிழ்ந்து பாராட்டுகிறேன்
@durgawings69
3 ай бұрын
41:34 😊 42:17 😊 43:52 43:52 43:53 😅
வாழ்க திருப்புகழ் பாடல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தெய்வீக குரலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏻
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை மோந்துப யோதரம ...... தணையாகச் சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக காந்தமொ டூசியென ...... மடவார்பால் கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை பூண்டுற வாடுதின ...... முளதோதான் பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள் நீண்டிடு மாலொடய ...... னறியாது பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன் ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து ... சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், பயோதரம் அது அணையாக சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து ... மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும், அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார் பால் ... காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு, விலைமாதர்களிடத்தில் கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ... மிக்கெழுந்த அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி, ஓர்ந்து உணரா உணர்வு இல் அடி நாயேன் ... ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி நாயேனாகிய நான், கூம்பு அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் ... குவிந்து அவிழ்ந்த தாமரை போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று உள்ளதோ? பாந்தளின் மீது இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது ... பாம்பாகிய ஆதிசேஷன் மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று, பாம்பு உருவான முநி வா(வு)ம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடம் இடும் பாதர் ... பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி) முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானுடைய பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகா புரியில் அமர் வாழ்வே ... அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே, பூ ங்கமுகு ஆர்வு செறி(யூ)யும் கநகா புரிசை சூழு(ழ்)ம் புலியூரில் உறை பெருமாளே. ... அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே.
Excellent Album. Waiting for so many years to hear Thirupugazh in Dr. Seerkali Govinda rajan ayya voice. Om muruga potri
நாதம் வைத்தியமே ‘எல்லா’வும் இணைந்து ஒலித்திட🙏
DHARUMAPURA ADHEENA ISAI PULAVAR - What an apt title. Who else can pronounce tamil like him?
extraordinary performance , aedian felt sirkazi iyya connect himself with lord murugan and lost himself ;; as oneness'' the highest achievement , paripooramana arivu, thiruarul
athalasaedanaar aada ''' atumyiyana the highest of the highest in the whole universe, ;; murugan visvarupam'' arunagiri swamigal has seen the lord visually so powerful iyya, we all contemplated to listen and sirkazhi iyaavin highly divine voice with background issai so good to miss, aedian remember this was sung in london murugan temple with lots of devotees nandri iyya
muruga parama kumara we always with you , be with us always
விளக்கவுரை கிடைத்தால் மக்களுக்கு பயன் தரும்
அப்பா கண்ணீரே வந்தது முருகன் அருள்
அருமை , அருமை. பாடல், அதற்கு தமிழில் விளக்கம், மற்றும் ஆங்கிலத்திலும். ஆஹா அருமை. தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.
nandri iyya ungal anbaana pathivullu, '' payam arra myil muthuginil vatuvayae'' murugaperuman will definitely meet us and accompany us during our last journey so no fear at all om saravanapava
நன்றி ஐயா. ஓம் முருகா சரணம். Dhanesh kku உடம்பு sariyaganum முருகா ❤
ஓம் முருகா குமரிக்கண்டத்தை நோக்கிய என் பயணம் பாகம் 1
Vithyai Vel Vellum… Ohm MURUGA Saranam🙏🏽…
Suggest song wise uploads. Short duration, different shrines separately, different presentation listened with more rapt attention.
@SirkazhiGovindarajanOfficial
3 ай бұрын
well noted. we will try to upload in short duration with different shrine information in a more detailed format soon...
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அய்யா
Thayalan vyravanathan already know this story in my early in my thirupugazh and thevaram class told by sir but your explanation is very fine in tiruvilayadal film also this sura story is coming super songs by divine by sirgazhi sir
@thayalanvyravanathan2651
2 ай бұрын
நன்றி.நமச்சிவாயம்.
@thayalanvyravanathan2651
2 ай бұрын
திருப்புகழ், திருவாசகம் கீர்த்தித்திருவகவல் ,திருவிளையாடற்புராணம் (பரஞ்சோதி முனிவர்)ஆகியவற்றில் இந்த வரலாறு சிறுசிறு வேறுபாட்டுடன் வருகின்றது. மற்றும் நீங்கள் கூறிய திருவிளையாடல் திரைப்படத்தில் கூட சற்று சுருக்கப்பட்ட வரலாறு வருகின்றது. (முருகப்பெருமான் கதையைத் தவிர்த்து உள்ளனர் திரைப்படத்தில்)நமச்சிவாயம்.
Golden voice and beautiful bhakthi Thamizh! 🙏
சந்தத் தமிழ் சண்முகார்ப்பணம் அருமை💐💐💐🙏😌
அய்யா அவர்கள் காந்தகுரல்எல்லாருக்கும்இனிக்கும்
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
முருகா நீதான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🔯🔯🔯🔯🔯🔯🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அருமை பார் எங்கும் உன் புகழ் திருப்புகழ்
என் தமிழ்த் தாய்க்கு 🙏🏿🙏🏿🙏🏿முதல் வணக்கம்.. தமிழ் தாயின் தலைமகன்..ஐயா சீர்காழி கோவிந்தராஜன் தமிழின் மறுபிறவி கோடான கோடி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@radhakrishnanvt2951
Ай бұрын
முருக சரணம்
Thank you very much. 🙏🏼 🙏🏼
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
முருகா நீதான் துணை 🔯🔯🔯🔯🔯🔯
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Inimaiyaga irunthadhu kodanakodi nandringal😊
@SirkazhiGovindarajanOfficial
6 күн бұрын
Thank you. Please share with your loved ones and subscribe to our channel 🙏
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉
OM SARAVANA BHAVA🎉🎉
Theni....Bruclin.....Android.....Selvam Pettai.....Ayyothi......Kalahasthi......Kili Gopuram......Arunagirinathar......Thirupugazh......Facebook......Marckes Arelious......Linch Hock....Anaiya Villakku.....
முருகா முருகா போற்றி
@TommyPeter-zo7ss
2 ай бұрын
ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
3:17 🙏🙏🙏🙏👍
சிவ சிவ முருகா❤
ஓம் சரவண பவன்
'' vallal tholu gngna kalalgal' bless us with no more births , infinite number of births more than the total number of grains in seven oceans but deleted and we donot remember at all, always thinking this birth is good and first nandri iyya vetivel murukannku arohara
@sangarapillaishanmugam8244
2 ай бұрын
absolutely true no second word , no difference between murugan and arunagirinathaswamigal, ; athuvitham'' cannot be separated '' there is a oneness'' thiruvidimarutoor thirupugal migga atputham,;; arugu nuni '' '' neeum naanumai irugum suham'' arul enbaar, eaga nayaha loga nayaha imiavar perumalae enbaar, bless you with murugan thiruarul guruarul ;; guruvai vatuvai arulvaai kuganae kandar anuboothi nandri iyya
AYYA THIRUVADI SARANAM
Very very super
சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய அனைத்து திருப்புகழையும் பதிவிடுங்கள்
நம்பிக்கைவைத்துவிடுமுருகனிடம்திருபுகழ்படிதிடுபிறவிகரைசேறை
arumai iya.
ஓம் சரவண பவ
ஐயா மிக அருமையாக உள்ளது
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
முருகனின் அருளால் இனிய குரலோசை பெற்று அவன் புகழ் பாடும் ஐயா சீர்காழியாற்கு கோடனுகோடி நமஸ்காரங்கள் அவர்பாடிய அபிராமி அந்தாதியும் மிகசிறப்பனது
@TommyPeter-zo7ss
2 ай бұрын
ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. முருகன் இங்கே பூமியில் இருக்கிறார், அருணகிரிநாதரும் இங்கே இருக்கிறார்.
great effort - super ❤
Om muruga potri
நல்லது நன்றி
ohm Murugasaranam
atumyi iyya beyond time timeless nanfri iyya vetivel muruganukku arogara
Extraordinary thirupugal with meaning🎉🎉
ஓம் சரவணபவ
❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சரவண பகவான்
அரோகரா
மிகவும் அருமை,மிக்க நன்றி
ஓம் சரவணபவாய நமஹ
ஓம் சரவண பவ. 🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த புத்தகம் உங்களிடம் குடுக்க வேண்டும்
Murugha Murugha Murugha. .......
Om muruga vel muruga
Vetrimalai muruga arogara
🥲🥲🥲 🙏🙏🙏 ❤️❤️❤️
Nimalar....Arun Pandiyan......Pakkasuran.....Katthi.....Arunagiri......Agathiyar.....after Jesus Christ......Humanity Life......Watchco......
🙏🙏🙏🙏🙏🙏✡️✡️✡️🦚🦚🦚🦚✡️🕉️🔥🔥🔥
பாடல்கள் கேட்கும் போது தித்திக்கும் இடையில் வரும் சோடனை படங்கள் அவசியமில்லையே அப்படியே பதிவு செய்தாலும் நின்ற கோலத்தில் உள்ள காட்சி சரி.அமர்ந்தநிலை காட்சி யைதவிர்க்கலாம்
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Kamakchiammanpadalkal
😢
🙏🏾🌹💯🇳🇪🇳🇪🌴👫
உங்களது முகவரி அல்லது தொடர்பு என் வேண்டும்
முருகன் அருணகிரிநாதரைப் பற்றிய செய்தியைத் தெரிவியுங்கள் என்கிறார். அவர் எல்லோருக்கும் உதவ வந்தவர். ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் (Harikesanallur Venkataraman) 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த அருணகிரிநாதரின் மறுபிறவி. அவர் இந்தியாவின் சென்னையில் இருக்கிறார். இவருக்கு யூடியூபில் சேனல் வைத்துள்ளார். யூடியூபில் இது தலைப்பு "Where will Kalki Avataram". அவர் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்து கடவுளைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் பேசுவார்.
please don't use AI generated image the soul is missing please use traditional image.thank you