பத்தல பத்தல, வேள்பாரி பத்தல ! - சு. வெங்கடேசன் உரை | வேள்பாரியைக் கொண்டாடுவோம் | SU Venkatesan

களம் இலக்கிய அமைப்பு நடத்தும்
'வேள்பாரியைக் கொண்டாடுவோம்'
பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - கவிஞர் நந்தலாலா
பறம்பின் அரசியல் - இயக்குநர் கரு.பழனியப்பன்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
ஏற்புரை :
எழுத்தாளர் சு. வெங்கடேசன்
#வேள்பாரி #SUVenkatesan #KaruPalaniappan
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 352

  • @user-gz2bo4vw4v
    @user-gz2bo4vw4v3 жыл бұрын

    இந்த நாவலை படித்தபோது நீலனோடு சேர்ந்து கபிலர் மட்டும் பறம்பிற்கு செல்லவில்லை. இந்த நாவலை படித்த அனைவருமே பறம்பிற்கு சென்று கபிலரோடு பாரியோடு பறம்பின் மக்களோடு இருந்த உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.

  • @tamilinian

    @tamilinian

    2 жыл бұрын

    நிச்சயமாக மக்களே 😃

  • @baskarsrinivasan7601

    @baskarsrinivasan7601

    Жыл бұрын

    உண்மை. ஆதினி. பாரியின் மனைவி பெயரும் உங்கள் பெயர் தான். ஆதினி. நீலன் குலத்தை பற்றி செல்லும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

  • @pasupathiyogashthiran8189

    @pasupathiyogashthiran8189

    Жыл бұрын

    முற்றிலும் உண்மை

  • @ayyappanayyappan2917

    @ayyappanayyappan2917

    Жыл бұрын

    அருமை

  • @asrafali9997

    @asrafali9997

    Жыл бұрын

    Thank for author mp venkatesan & Mr Tamilan aanmeegam KZread channel

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj2332 ай бұрын

    திரு. வெங்கடேசன் ஐயா, உங்கள் பாதம் பணிகிறேன். என்னே அருமையான நூல் வேல்பாரி!!!!!!! திசைவேளரையும், தேக்கனையும் ஒரே சமயத்தில் ஒருசேர நீக்கிய வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஐயா,

  • @Malathi106
    @Malathi1064 жыл бұрын

    என்னா புத்தகம் டா சாமி.. பொன்னியின் செல்வன் ,ஹாரி பாட்டர் போல இதுவும் அதன் உலகத்தில் இழுத்து,வாழ்ந்து ,முழுக வைத்தது ..நன்றிகள் பல.

  • @kittenzone5196
    @kittenzone51962 жыл бұрын

    பாரியின் பெயரை கேட்கும்பொழுதே மனம் புத்தெழுச்சி கொள்கிறது... எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கிறது.. வாழ்க எம் தலைவன்.. திசை எட்டும் ஓங்குக வேள்பாரியின் புகழ்..

  • @Akilatailor449

    @Akilatailor449

    Жыл бұрын

    Ama unmaye

  • @venkatram7388
    @venkatram73885 жыл бұрын

    வேள்பாரி காலத்தின் கட்டாயம் அறத்தின் அடையாளம் அன்பின் இருப்பிடம் வீரத்தின் ஊற்று

  • @sarankaviyarasu9061
    @sarankaviyarasu9061 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் முடியன் தளபதியின் மகன் ஆன வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்கள் படையை எதிர்த்து மூர்க்கத்தனமான வால் வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பு குதிரை படை தளபதி இரவாதன்...I love வேல்பாரி all characters love... special one இறவாதன் 💕

  • @ramumuthumani728
    @ramumuthumani728 Жыл бұрын

    இப்படைப்பில் பாரி மீது சற்று வருத்தம் இரவாதன் இறப்பிற்கு முன் களம் இறங்கி இருக்கவேண்டும்... இரவாதன் இறப்பை விட்டு மனம் எங்கும் செல்ல மறுக்கிறது. அதனிலும் பாரியின் வாக்கு சிலிர்க்க வைக்கிறது சிறைப்பட்டுகிடக்கும் நீலனிடம் கபிலர் பேசும் வசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாரி வருவான் என்ற கபிலரின் சொல்லும் இனி பாரி பார்த்துக் கொள்வான் என்ற முடிநாதன் சொல்லும் கண்முண்ணே கடந்த கொண்டே இருக்கிறது

  • @mirudhulakarunanidhi5098
    @mirudhulakarunanidhi50982 жыл бұрын

    நமக்கு மொழித்திமிரு அதிகம் இருப்பதில் தவறில்லை என்பதை வேள்பாரி எடுத்து சொல்லிவிட்டு கர்வமாய் சிரிக்கிறது! பிரான்மலை தற்போது எந்தன் Bucketlist இல் சேர்க்கப்பட்டுள்ளது! பாரி நடந்த மண்ணை தொட சீக்கிரம் விரைவேன்!🔥

  • @mozhirajan8385
    @mozhirajan83855 жыл бұрын

    நான் வேள்பாரி தொடராக வந்த போது படிக்கவில்லை ஏனெனில் சிலசமயம் தொடர் விட்டு போகும் ஆனால் புத்தகமாக வெளிவந்த பிறகு வாங்கி படித்தேன் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப்படித்தேன் அமெரிக்கா வில் இருக்கும் என் மகளுக்கும் ஒரு பிரதிவாங்கி எடுத்துச் சென்றேன் எழுத்தாளர் சு .வெ. இது போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனைவுகளை எழுதவேண்டும் என்பது என் வாசகர்களின் பேராசை

  • @bharathiganesh2850

    @bharathiganesh2850

    Жыл бұрын

    Kandipa

  • @user-yt1kf5db5m
    @user-yt1kf5db5m21 күн бұрын

    வேள்பாரி ஒவ்வொரு கதை மாந்தர்களும் அற்புதம்.... ஆனால் பாரியை விட என்னை ஈர்த்த கதாபாத்திரம் நீலன்❤

  • @user-fd2jg6jm3q
    @user-fd2jg6jm3q4 жыл бұрын

    வேள்பாரி வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே என் மனமும் கபிலருடன் சேர்ந்தே பறம்பில் பயணித்தது....பாரி,ஆதினி,தேக்கன்,நீலன்,அலவன்,இராவெரி மரம்,தேவாங்கு,குலநாகினி,கொற்றவைக்கூத்து....அப்பப்பா ...இவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் பதிகிறது....

  • @shenbagakumarikumari423

    @shenbagakumarikumari423

    Жыл бұрын

    Vi va letter velpaari kathail varum name sollung

  • @priyank25781

    @priyank25781

    Жыл бұрын

    ​@@shenbagakumarikumari423 onnum puriyale.. konjam puriyura maadhri sollunga pls.

  • @nirmalavictus3919

    @nirmalavictus3919

    Ай бұрын

    Yes feel the same

  • @jgjeevaa
    @jgjeevaa5 жыл бұрын

    பல்லாயிரம் ஆன்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியலை எம் தலைமுறைகளுக்கு அளித்த ஜயனே நீர் வாழ்க பல்லான்டு பல்லான்டு

  • @veersamyashok8930
    @veersamyashok89303 ай бұрын

    தம்பி நீ வாழ்க பல்லாண்டு. உன் சேவை தொடரட்டும் என்றென்றும். வாழ்த்துகள்.

  • @poornamathisivakumar8757
    @poornamathisivakumar87573 жыл бұрын

    நான் படித்த எல்லா நூல்களில் ஆக சிறந்த நூல். உங்கள் பாதம் பணிகிரேன்

  • @user-cf4kq8sm9b
    @user-cf4kq8sm9b4 ай бұрын

    வேள்பாரியை போல இதுவரை ஒரு அற்புதமான புத்தகத்தை என் வாழ்வில் நான் படித்ததில்லை 🫡🔥🏹…எனக்கு மிகவும் பிடித்தது அங்கவை உதிரனை மரத்தின் மேலிழுத்து கட்டி எதிரிகளின் காதுகளில் துளைகளை கூட துல்லியமாக கண்டறிந்தது🫡🫡🫡hats off to her confidence in that toughest situation

  • @Poongkundran
    @Poongkundran5 жыл бұрын

    அருமை.. பெருமை தந்தீர்கள் பாரிக்கு.. கூடவே தமிழுக்கு.. காடு செழிக்க வேண்டும்.. தமிழர் சாதி பித்து ஒழித்து பாரி போல காடு மண் பற்றிய புரிதல் வேண்டும்.. இன்னும் பலர் தமிழ் அறம், வரலாறு பற்றி உண்மையை உலகிற்கு உரைக்க வேண்டும்..!! நன்றிகள் பல..

  • @eyrtamizhan4866
    @eyrtamizhan48663 жыл бұрын

    வேள்பாரியை இன்னும் 20000 பக்கம் எழுதியிருந்தால் மகிழ்ச்சியோடு படித்திருப்பேன். வேள்பாரியை பற்றி இன்னும் இரண்டு மணிநேரம் பேசியிருந்தாலும் மகிழ்ச்சியோடு கேட்டிருப்பேன். இப்படிப்பட்ட மிகச்சிறந்த தொடரை எழுதியதால் உங்கள் புகழ் தமிழ் சமூகம் உள்ளவரை நீடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @balasexbala
    @balasexbala5 жыл бұрын

    எழுதுவது மட்டுமல்ல இவர் பேசுவதும் சுவைபட இருக்கிறது ... வாழ்க பல்லாண்டு

  • @priyadharshini965

    @priyadharshini965

    Жыл бұрын

    பனை போல் வாழ்கட்டும்

  • @diravidan9630
    @diravidan96303 жыл бұрын

    வரம்பு மீறிய மூவேந்தர்களை பரம்புமீரிய வரலாறு, கம்பீரமான தமிழனின் பாரம்பரியம் அற்புதம். பொற்சுவை தோழியிடம் சொல்கிறாள் திருமணத்திற்கு என் உடல் தயாரிவிட்டது ஆயிரம் அர்த்தங்கள். நீலன் கபிலரிடம் கேட்கிறான் நீங்கள் சொல்லுகின்ற கடல் எப்படி இருக்கும்? கபிலர் சொல்லுகிறார் பரந்து விரிந்து பெரியதாக இருக்கும். நீலன் திரும்ப கேட்கிறான் எங்கள் பாரியின் கருணையை விடவா பெரிது! பரம்பில் பயணியுங்கள் திரும்பி வர மணமிருக்காது

  • @bharathi4908
    @bharathi49085 жыл бұрын

    இவர், இவர் போல் பலர் இன்னும் எழுத வேண்டும்

  • @sasiway7187
    @sasiway71875 жыл бұрын

    தயவு செய்து இவரை பாதுகாக்க வேண்டும்...

  • @user-fn8uk3st9d

    @user-fn8uk3st9d

    5 жыл бұрын

    கவலைப்படாதீர்கள்... திராவிடம் எபோதும் போல் பார்த்துக்கொள்ளும்

  • @shanjairahul5109

    @shanjairahul5109

    2 жыл бұрын

    வெங்கடேசன் பேச்சை அருமையிலும் அருமை வாழ்க வளமுடன்.

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi84535 жыл бұрын

    ச.வெங்கடேசன் எழுத்தாளர் பயணம் வெல்க.

  • @dudeonly1512
    @dudeonly15125 жыл бұрын

    நானும் சந்ரமுகி ஜோதிகா மாதிரிதான் இருந்தேன் வேள்பாரியை படித்த நாட்கள் முழுவதும்........

  • @kokilac9027

    @kokilac9027

    3 жыл бұрын

    Me too 😉

  • @kamaliqueen9158

    @kamaliqueen9158

    3 жыл бұрын

    Enga antha book kidaikum nu solla mudiyuma please...

  • @sivakumarjamuna9144

    @sivakumarjamuna9144

    Жыл бұрын

    Nanum

  • @varathuedits1957

    @varathuedits1957

    Жыл бұрын

    @@kamaliqueen9158 விகடன் பதிப்பகத்தில் கிடைக்கும். அது தவிர மற்ற எல்லா புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. Жыл бұрын

    என் முருக பெருமானை மிக அழகாக காட்டிய தற்கு நன்றி கள் பல

  • @varathuedits1957
    @varathuedits1957 Жыл бұрын

    இப்போது தான் வேள்பாரியை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். சில அத்தியாயங்களிலேயே பறம்பு நாட்டுக்குள் குடியேறி விட்டேன். பாரியின் அன்பில் கலந்து விட்டேன்.... இப்படியான படைப்பினைத் தந்த சு.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றிகளும், அன்பும்

  • @vijayaragavand9474
    @vijayaragavand94745 жыл бұрын

    வெங்கடேசனின் பேச்சில் சொக்கிபோய்விட்டேன்.இனிமையான குரல் ஆழமான மற்றும் சிந்திக்வைத்த கருத்துக்கள் இப்பேச்சில் இருந்தது.இவரை தமிழ் சமூகம் கொண்டாடவேண்டும்.

  • @aruna3906

    @aruna3906

    5 жыл бұрын

    Vijayaragavan D

  • @subbulaxmimuthuraj6677

    @subbulaxmimuthuraj6677

    5 жыл бұрын

    தமிழ் கொண்டாடுதே

  • @user-fn8uk3st9d

    @user-fn8uk3st9d

    5 жыл бұрын

    அதான் திராவிடர்கள் கொண்டாடுகிறார்களே.... அது போதும்... தமிழர்கள் வேறு கொண்டாட வேண்டுமா என்ன????

  • @alliswellnsm4716

    @alliswellnsm4716

    Жыл бұрын

    நகைச்சுவை யும் பேச்சில் அருமையாக இருந்தது.

  • @nss.nambirajansevasangam.1559
    @nss.nambirajansevasangam.15595 жыл бұрын

    குறிஞ்சி தாய் வள்ளிநாயகியையும் குறிஞ்சி தலைவன் முருகனையும் அடையாளப்படுத்தி திணை மக்களை ஒன்றுபடுத்தும் பாங்கும். வீரமும் பண்பாடும் மலை மக்களின் வாழ்வியலையும் எடுத்து இயம்பி உங்களுக்கு குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பாக நன்றி!! வாழ்த்துகள்!!

  • @just2minutes520
    @just2minutes5202 жыл бұрын

    Mr.Tamilan fans

  • @annamsomu6903
    @annamsomu69034 жыл бұрын

    தயவுசெய்து வேள் பாரி வாழ்க்கையை படமா எடுங்கள். இக்கால மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

  • @Pavithrathangaraj.
    @Pavithrathangaraj.3 жыл бұрын

    பாரியின் புகழ் என்றென்றும் வாழ்க.

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. Жыл бұрын

    நான் இதை மட்டுமே மீண்டும் மீண்டும் படிப்பேன். இது என்னை உள்ள தூய்மை யும் வளமான மனத்தையும் தருகிறது. இரவாதன் இறப்பு என்னை அழைத்து வைக்கிறது. நான் இப்பெரும் நிலத்தில் வாழ்வதை உணர்கிறேன்

  • @karthike5498

    @karthike5498

    Жыл бұрын

    பொற்சுவையின் காதலன் யார் என அறிந்தால் கூறவும்

  • @regisnirmala661
    @regisnirmala6614 жыл бұрын

    வேள்பாரி இதைப் படித்து எனை மறந்து கதைக்குள்ளேயே இருந்து விட்டேன். மிகவும் நன்றி.

  • @kumaravel396
    @kumaravel3963 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நபர் சு. வெங்கடேசன் அவர் வெற்றி பெற வேண்டும் ஏன் என்றால் தமிழ் பற்றி அதிகம் பதிவு செய்யும் நபர் யார் என்றால் இவர்

  • @vithyasagar2609
    @vithyasagar26095 жыл бұрын

    வாழ்த்துகள் தோழர், வளரவேண்டும் உங்கள் எழுத்துக்கள்.👌🙏👏👍❤❤❤❤❤

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan7601 Жыл бұрын

    முருகன் வள்ளி, நீலன் மயிலா, கோவன் செம்பா இவர்களின் காதலை மிக அருமையாக சொல்லி இருப்பார்.

  • @ravindranravind1714
    @ravindranravind17142 жыл бұрын

    ஐயா சு.வெங்கடேசன் மிக்க நன்றி என்ன எனக்கு மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் படைப்பு வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam2292 жыл бұрын

    வேள்பாரியைப் படித்தபோது தலைவர் பிரபாகரனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவில் நிறுத்தியது நாவலின் சிறப்பு.

  • @thirushan2741
    @thirushan27415 жыл бұрын

    நன்றி தோழரே! தமிழர் வரலாறு உங்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்!

  • @vijayalakshmi-rv4gd
    @vijayalakshmi-rv4gd5 жыл бұрын

    இரண்டாவது முறை படித்துக்கொண்டு இருக்கிறேன் புதிதாக படிப்பது போல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசித்துப் படிக்கிறேன்

  • @pushpalathav4376

    @pushpalathav4376

    4 жыл бұрын

    நான் ஐந்தாவது முறையாக ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் அக்கா

  • @Sethupathi-oq2vr
    @Sethupathi-oq2vr Жыл бұрын

    அண்ணா நான் முமூ தொடரையும் 3முறை கேட்டுக்கொள்கிறேன் ஆனாலும் மறுபடியும் கேக்க தோன்றியது அண்ணா உங்களுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

  • @senbagaraman2133
    @senbagaraman21335 жыл бұрын

    மதுரைக்கு சு.வெ அண்ணன் அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y Жыл бұрын

    பரம்பு தமிழர்களின் நரம்பு.நான் நான்கு முறை வேள்பாரி ஒலி புத்தகத்தை கேட்க கேட்க ஆசையை அடக்க முடியாது

  • @user-ho5zn8jx4o
    @user-ho5zn8jx4o5 жыл бұрын

    தமிழர் வீட்டில் இந்த புத்தகம் அவசியம் இருக்க வேண்டும்

  • @venthanraj3592

    @venthanraj3592

    Жыл бұрын

    Telugan punai kathai yegaluku thevai illai nee vena vachuko da teluga

  • @MuthuKumar-zp9ls
    @MuthuKumar-zp9ls4 жыл бұрын

    விகடனில் எழுதிக்கொண்டிருக்கும் போது அடுத்த வாரம் எப்போது வரும் என்று எங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த ஒரு அருமையான படைப்பு வேல்பாரி

  • @swethajanu1437
    @swethajanu14374 жыл бұрын

    பாரியின் வரலாறு தந்த நீவீர். எங்களுக்கு வள்ளல் தான்...!!! தமிழின்...சுவை மாறாது...!!! பறம்பினை கண்டேன் நின் தமிழ் வழியே...!!!

  • @sivatheva2307
    @sivatheva23075 жыл бұрын

    மக்களும் அறத்தை அறம் சார்ந்த வாழ்வை விரும்புவதை வேள்பாரி உணர்த்தி செல்கிறான்.

  • @truelies3783
    @truelies37834 жыл бұрын

    Im frm malaysia..recently i came to chennai..i bought this book...my tears was keep on falling when i finish reading the novel....vengadesan, hats off....pls write more novels..we are waiting

  • @chitrachitrak6513
    @chitrachitrak65139 күн бұрын

    Evlo oru arumaiyana naavalai engalku koduthu irukinga nandri ayya❤❤❤

  • @poorasamyanna4697
    @poorasamyanna46975 жыл бұрын

    தமிழ் மொழி வாழ்க தமிழன் வாழ்க தமிழ் மொழி உங்களை வாழ வைக்கும் வெங்கடேசன் சார்

  • @jam6851
    @jam68515 жыл бұрын

    அந்த நாகப்பட்டினம் அருகே வாழும் நூலகரின் ஊரையும் , பெயரையும் கூறி அவரை பெருமைப்படுத்தியிருக்கலாம்.

  • @subbulaxmimuthuraj6677

    @subbulaxmimuthuraj6677

    5 жыл бұрын

    must recognize

  • @sivabalant8918
    @sivabalant8918 Жыл бұрын

    வேள்பாரி புத்தகம் படித்ததிலேயே மிக மிக சிறந்த புத்தகம் . I have never read like this book

  • @umasubbu384
    @umasubbu384 Жыл бұрын

    இனி எப்போதும் பாரி,பறம்பு மலை,கபிலர் ஞாபகத்தோடு வாழ்ந்துக்கொண்டே இருப்பேன்

  • @Uyir.Ezhuthu

    @Uyir.Ezhuthu

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/daxo2o-GZqaXkaQ.html

  • @rizwanamohamedasen2088
    @rizwanamohamedasen20884 жыл бұрын

    மனம் இன்னும் வீர யுக நாயகனிக்குள்ளே இருக்கிறது. மறுபடியும் படிக்க ஆரம்பிக்க போகிறேன் எத்தனை முறை படித்தாலும் பாரி மூவேந்தரின் சூழ்ச்சியால் வீழ்ந்தான் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை அல்லவா....😂😂😂

  • @venkat6871

    @venkat6871

    2 жыл бұрын

    பொய் வரலாற்று புத்தகம்

  • @divipugal4812

    @divipugal4812

    Жыл бұрын

    எதை சங்க இலக்கியத்தை வா கூறுகிறீர்கள்

  • @priyank25781

    @priyank25781

    Жыл бұрын

    ​@@venkat6871 எப்படி சொல்கிறீர்கள்? எதை வைத்து சொல்கிறீர்கள்??

  • @vimalam9533
    @vimalam95333 жыл бұрын

    முல்லைக்கு தேர் தந்த பாரியை உலக எல்லை கடந்து நிலை நிறுத்திய ஐயாவிற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்........

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw18 сағат бұрын

    வேல்பாரிபடிக்க படிக்க தெவிட்டாத தேன்இன்பம் பாரியைக்காண மனம் ஏங்குகிறது பறம்பு மக்களின் வீரம் அறிவியல் மருத்துவம் வானிலையியல் அந்த காட்டின் பாதுகாப்பு அரணாக இருந்த இயற்கை எதை வர்ணிப்பது&எதைவணங்கவும்செய்யமனம்விழைகிறதுஆசிரியரைஅதைவிடபாராட்டவும்வணங்கவும்தோன்றுகிறதுநன்றிநன்றிநன்றி❤❤❤❤❤❤❤❤

  • @ganesasivam4405
    @ganesasivam44053 жыл бұрын

    சு வெங்கடேசன் மதுரை க்கு கிடைத்த ஒரு பொக்கிசம் அதுமட்டுமல்ல தங்களை நாடாளுமன்ற தி ற்கு தேர்வு செய்த வர்கள் போற்றுதளுக்உரியவர்கள் நன்றி

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Жыл бұрын

    சு வெங்கடேசன் நாயுடு வந்துதான் தமிழர் வரலாற்றை பேச வேண்டியுள்ளது😢😢😢 இவர்களது உள்நோக்கம் எப்படி இருக்கும் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @chandramoulliveeriah6228

    @chandramoulliveeriah6228

    Ай бұрын

    உன்னை திட்டணும்னு தோணுது

  • @meenam4378
    @meenam43783 жыл бұрын

    முல்லைக்கு சொந்தமானவன் ,முத்தமிழுக்கு முத்திரையானவன்,என் பிள்ளைக்கு பாட்டனானவன்,இனியவன்,எளியவன்,ஏங்கித்தவித்த கொடிக்கு அன்பு காதலனை இன்று காற்றும் போற்றுகிறது கனிந்த பழங்களும் போற்றுகிறது.நாமும் போற்றுவோம் வாரீர்.......

  • @rajaakumar6376

    @rajaakumar6376

    Жыл бұрын

    சிறப்பு👏👏👏

  • @sivamalam7120

    @sivamalam7120

    Жыл бұрын

    Wow superah potrukinga

  • @lotus4867
    @lotus48675 жыл бұрын

    படமாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது, ' வேள் பாரி ' விகடனில் 111-வது அத்தியாயம் தாண்டி தொடர்ந்து படிக்க /இரசிக்க கோடானு கோடி மக்கள் காத்திருக்கிறோம் ஐயா, தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.

  • @geotsnaselvaraj3872
    @geotsnaselvaraj3872 Жыл бұрын

    இரண்டு முறை முழுதும் வாசித்து விட்டேன். இருந்தாலும் வெளிவர இயலவில்லை; பறம்பு மலையை விட்டு. மீண்டு எழவில்லை இன்றும் வேள்பாரி மீது கொண்ட காதலில் இருந்து 🤩

  • @jothimanijeyavel9893

    @jothimanijeyavel9893

    Жыл бұрын

    பெரும்பாண்மையான வாசகர்களின் நிலை இதுவே! நாவலினூடே எத்தனை எத்தனை தகவல்கள்! 👍👍👍👏👏👏

  • @dr.kayalvizhip5298
    @dr.kayalvizhip52982 жыл бұрын

    Ipadi oru story ninaichi kooda enala pakka mudiyala.....manasula oru oru pathivum pathinjidichi enala paariya thaniya pirikka mudiyala...yen manasula irunthu....thank you sir

  • @user-lh7bu1vj5q
    @user-lh7bu1vj5q Жыл бұрын

    மனம் கவர்ந்த கள்வன், காதலன், வீரன் பாரி My evergreen hero❤ Venkatesan sir….. you are the gift of god

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj66775 жыл бұрын

    நேர்மை ,உண்மை கடும் உழைப்பு ,தீவீர சிந்தனை மகனுக்கு இனிய வாழ்த்துகள்

  • @dkeviv83
    @dkeviv83 Жыл бұрын

    I usually skimp when reading books. Velpari book made me read every single word. ருசித்துப் படிக்கிறேன்.. வார்த்தை வார்த்தையாக.. arumai..

  • @renugadevi2949
    @renugadevi29492 жыл бұрын

    காலத்தால் அழியாத படைப்பு ஐயா

  • @haiyyaseethis
    @haiyyaseethis5 жыл бұрын

    வேள்பாரி படித்தபின் ஆசிரியர் உரை கேட்பதே நல்படிப்பாளியின் நோக்கம், ஆதலால் படித்த பிறகு உரை கேட்கிறேன்.

  • @Sakthivel-lr2wr
    @Sakthivel-lr2wr9 сағат бұрын

    Velpaari bala kuralil ketpathe oru sugam🙏🙏

  • @anbuarasan2092
    @anbuarasan20925 жыл бұрын

    I start reading it. The very start is so imaginative and I am also travelling with நீலன்.

  • @svsvetrivelan2104
    @svsvetrivelan2104 Жыл бұрын

    🙏🇧🇴வீரயுக நாயகன் வேள்பாரி 🇧🇴🙏

  • @user-vk7xk3md2b
    @user-vk7xk3md2b5 жыл бұрын

    வேள்பாரி நாடு இளமுருகன் விகடனுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @shanmugamr9731
    @shanmugamr9731 Жыл бұрын

    தமிழும் தமிழரும் உள்ளவரை பாரியின் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம்

  • @manonmanimurugesan5435

    @manonmanimurugesan5435

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l6iJtcmHYpXXfNo.html

  • @VINODKUMAR-ib6gb
    @VINODKUMAR-ib6gb Жыл бұрын

    மிக அற்புதமான படைப்பு பாரியுடனான அந்த வாழ்வை வாழ முடியாத என்று ஏக்கமாக உள்ளது .நன்றிகள் பல உங்கள் படைப்புக்கு....

  • @s.k9323
    @s.k93235 жыл бұрын

    த மி ழ் சிறந்த நாவல் 1.பொன்னியின் செல்வன் 2.கள்ளி காட்டு eதிகாசாம் 3.வேள்பாரி

  • @browningherald3112

    @browningherald3112

    5 жыл бұрын

    Senthil Kumar.N கருவாச்சி காவியம் ஒரு அற்புதமான படைப்பு that is even much more better then kallikaatu ithikasam

  • @rubankaspro1814

    @rubankaspro1814

    5 жыл бұрын

    "Sivakamiyin sabatham" enga pochu....M

  • @HariHaran-xo8ur

    @HariHaran-xo8ur

    3 жыл бұрын

    கடல் புறா உடையார் 💗💗💗

  • @cirrodai438
    @cirrodai4382 жыл бұрын

    முதற்கொண்டு அனைத்து களங்களில் சுற்றி சுழன்று பணியாற்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muthubala8084
    @muthubala8084 Жыл бұрын

    இவ்வளவு பெரிய காணொளியை பார்ப்பதா என சோம்பேறி பட்டேன்...ஆனால் பார்க்க ஆரம்பித்தது எனக்கு தெரிந்தது எப்படி முடிந்தது என எனக்கு தெரியவில்லை

  • @Uyir.Ezhuthu

    @Uyir.Ezhuthu

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/daxo2o-GZqaXkaQ.html

  • @narayani731
    @narayani731 Жыл бұрын

    Super

  • @Uyir.Ezhuthu

    @Uyir.Ezhuthu

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/daxo2o-GZqaXkaQ.html

  • @selvam3068
    @selvam30685 жыл бұрын

    மனிதன் தன்வாழ்வின் முடிவை அறிந்துணரந்து அனுபவித்த வாழ்வு குறிஞ்சி வாழ்வு. தேவையற்ற அறிவு பெருக்கத்தாலும் தேவையற்ற நம்பிக்கையாலும் அனைத்தையும் இழந்தான்.

  • @karthikanbalagan8032
    @karthikanbalagan80323 ай бұрын

    ,நான் இப்போது தான் கேட்டேன் ,,(autio) வடிவில் கேட்டேன் (mr.tamilan KZread channel) கடைசில அழுதுவிட்டேன்.

  • @selvaranibalaguru4925
    @selvaranibalaguru49255 жыл бұрын

    வாவ் ❤️ .. சிறப்பு.. அழகு

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132Ай бұрын

    ஆதிக்குடியின் காதல் மலை முகட்டின் நீரோடைப்போல மனத்தின் எங்கோ ஒரு முலையில் சலசலக்கும் ஏன்னெனில் இன்று காதலைக்கூட அனுபவிக்க நேரம் வாய்ப்பு இல்லாத வாழ்க்கை

  • @Padmashri2000
    @Padmashri2000 Жыл бұрын

    Fantastic novel. The author's narration makes us a citizen on pari’s world.

  • @priyank25781

    @priyank25781

    Жыл бұрын

    *in" பாரி's world.. not on..!!

  • @babukamaraj7330
    @babukamaraj73305 жыл бұрын

    நன்றி 🙏

  • @karthithamizhan5818
    @karthithamizhan5818 Жыл бұрын

    இல்லை இதை நான் படித்த போது என்றும் இறவா புகழை உடைய என் இரவாதன் இறப்பு என் மனதை கொன்னறது

  • @pbaliah
    @pbaliah4 жыл бұрын

    I read it. Realy fantastic story. Superb narration. Great Venkatesan sir. 👍👍

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj66775 жыл бұрын

    அந்த உதவியாளரை கௌரவிக்க வேண்டும்

  • @mahendransubramani4945
    @mahendransubramani4945 Жыл бұрын

    ஐயா 💐 மிக்க நன்றி பல இனிய நாவல் குடுத்ததற்கு வணக்கம்

  • @kannathasansaravanan7381
    @kannathasansaravanan73812 жыл бұрын

    என் தமிழ் இனிது

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 Жыл бұрын

    பெரும் வணக்கம் 🙏🏻....... ஆக சிறந்த படைப்பு...

  • @ganeshtemp3781
    @ganeshtemp378119 күн бұрын

    வரலாறு கதை அல்ல புனைவு கதை.

  • @ganeshank5266
    @ganeshank52664 жыл бұрын

    Sir, I am lucky to read your velpari both parts. I am nothing before your writings of literature, history, philosophy and political philosophy, epistemological research and so on.sir,to me your writings will be valuable up to my breath. Part_1,page 19 is enough to know your literature, history and epistemological thoughts through dialogue between kabilar and neelan and in part-2 page 43 for the explanation of truth, page no.398 and 466 to 472 on ethics and meta ethics , your explanation for love and karma in valli murugan storyand finally in page no. 712 to 715 regarding your explanation on civil disobedience is extraordinary than others through cosmologist or Astronomer Thisai Velar, the excellent character in your novel for me..beside this , so many of your research on flowers, birds,animals particularly your elephant psychology and your analogy, comparison,logic, perception,your research methods and novel structure and pictures are eloquent sir. My research will go on

  • @Adventure9238
    @Adventure92383 жыл бұрын

    I had listened to Vel Pari audio in You Tube. Really I am gifted to listen to Vel Pari. Mr. Venkatesan Sir, you rocked, Million thanks to you.

  • @deepanshines
    @deepanshines5 жыл бұрын

    Super speech. Excellent book

  • @sathishsivakumar9659
    @sathishsivakumar96593 жыл бұрын

    வேள்பாரி கவிதைகளால் தொடுக்கப்பட்ட ஒரு காவியம்!...

  • @ganeshpichiah69
    @ganeshpichiah694 жыл бұрын

    அற்புதமான உரை

  • @poorasamyanna4697
    @poorasamyanna46975 жыл бұрын

    வேள் பாரி தற்போது அவசியம் தமிழர் களுக்கு

  • @ar.elangovan568
    @ar.elangovan5685 жыл бұрын

    இனிய நல்வாழ்த்துக்கள்

  • @poorasamyanna4697
    @poorasamyanna46975 жыл бұрын

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் வெங்கடேசன் சார்

  • @kumark522
    @kumark5222 жыл бұрын

    Who's after Mr tamilan

  • @aranmurali
    @aranmurali5 жыл бұрын

    Arumai arumaiyana peachu nodiku nodiku rasithean🙏

  • @rj4837
    @rj4837 Жыл бұрын

    அப்பப்பா என்னே ஒரு அனுபவ உரை சலிப்படையாது வியந்தேன்

Келесі