Part-1 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
------
இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
00:25
கந்தர் அலங்காரம் - 106 (kaumaram.com/alangkaram/alang... )
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தரு ளாய்ஒரு கோடிமுத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே.
00:39
கந்தர் அலங்காரம் - 107 (kaumaram.com/alangkaram/alang... )
சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கொரு காலும்அஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.
திருமுருகாற்றுப்படை - தனி வெண்பாக்கள் (kaumaram.com/tmpadai/ )
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்திவாழ் வே.
01:28
( www.kaumaram.com/thiru/nnt000... )
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
.. .. கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
.. கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
.. .. கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
.. .. மற்பொரு திரள்புய ...... மதயானை
.. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
.. .. மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
.. .. முற்பட எழுதிய ...... முதல்வோனே
.. முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
.. .. அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
.. .. அப்புன மதனிடை ...... இபமாகி
.. அக்குற மகளுட னச்சிறு முருகனை
.. .. அக்கண மணமருள் ...... பெருமாளே.
03:00
( www.kaumaram.com/thiru/nnt005... )
கொம்பனை யார்காது மோதிரு .. கண்களி லாமோத சீதள
.. .. குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
.. கொங்கையி னீராவி மேல்வளர் .. செங்கழு நீர்மாலை சூடிய
.. .. கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம .. எம்பெரு மானேந மோநம
.. .. ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
.. உன்புக ழேபாடி நானினி .. அன்புட னாசார பூசைசெய்
.. .. துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய .. சங்கரி வேதாள நாயகி
.. .. பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
.. பங்கமி லாநீலி மோடிப .. யங்கரி மாகாளி யோகினி
.. .. பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ .. னும்படி வீறான வேல்தர
.. .. என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
.. இன்சொல்வி சாகாக்ரு பாகர .. செந்திலில் வாழ்வாகி யேயடி
.. .. யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
41:00
( kaumaram.com/thiru/nnt0824_u.... )
திருப்புகழ் - ஒருவழிபடாது - (சோமநாதன்மடம்)
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
------

Пікірлер: 132

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH4 жыл бұрын

    அன்பே ஓர் வடிவம் பெற்றது போன்ற திருமேனி; அந்த சிவந்த மேனி எங்கும் திருநீறு; மார்பில் சிவச்சின்னங்கள்; வாக்கில் எப்போதும் முருக நாமம்; கருணையே நிறைந்த கடைக்கண் பார்வை; பொன்னையும், பொருளையும் அள்ளி வழங்கும் திருக்கரங்கள்; கோடிக்கணக்கான மக்கள் கூடி இருந்தாலும் “கைத்தல நிறைகனி” என்ற சிம்மக்குரலைக் கேட்டவுடன் மகுடி கேட்ட நாகம்போல் மயக்கும் குரலோசை; கல்லாதவருக்கும், புலவருக்கும் புரிய வைக்கும் மதிநுட்பம் என இத்தனைக்கும் சொந்தமான மொத்த உருவமே நம்ம குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள்.

  • @poobalanganesan4145
    @poobalanganesan41455 жыл бұрын

    திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அனைத்து சொற்பொழிகளும் உலகத்தில் விலைமதிக்க முடியாதவை ... 64வது நாயன்மார் ஆக போற்ற பட வேண்டியவர். அவர் ஒரு இசை மேதை அவர் பாடும் பாடல்கள் உள்ளத்தை உருக்கும்... அவரை சார்த்தவர்கள் அவருடைய புகழை மேலும் உலகறிய செய்யுங்கள்... மேலும் அவருடைய video-கள் பதிவிடுங்கள் ..

  • @MuthuKumar-vs3im
    @MuthuKumar-vs3im4 жыл бұрын

    கிருபானந்த ஐயா வின் சொற்பொழிவுகள் அனைத்தும் முருகப்பெருமானே நேரில் வந்து பேசுவதுபோல இருக்கும்....ஐயா ...

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91926 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் 64வது நாயன்மாராக வைத்துப்போற்றப்படவேண்டியவர்.சிறந்த, பரந்த ஞானக்கடல் அவர்.அவருக்கு தெரியாத கருத்துகளே இல்லை எனலாம்.இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்.எல்லாருக்கும் புரியும் படி தெளிவாக,விளங்கும்படி இனிமைச் சொல்வதில் வல்லவர்.அவருடைய சொபொழிவை நாத்திகரும் விரும்பிக் கேட்பர்.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91926 жыл бұрын

    கதாகாலட்சேபம் என்ற சொல்லை மாற்றி இன்னிசைச்சொற்பொழிவாக்கி அனைவரும் கேட்கும் படி செய்தவர்.சலிப்பு தட்டாமல் விருப்புடன் கேட்கும் படியாக இருக்கும் அவர் சொற்பொழிவு.

  • @mariappansivasubramanian4166
    @mariappansivasubramanian41667 жыл бұрын

    காலத்தால் அழியாத இந்த பொக்கிக்ஷத்தை நாங்க ள் அனுபவிக்க செய்த மைக்கு மிக்க நன்றி.இப்பணிமேலும் தொடர வேண்டுகிறேன்

  • @mdvv6312
    @mdvv6312

    பட்டிமன்ற கடிகளை அனுபவிப்பவர்கள் வாரியார் நகைச்சவைகளை என்னவென்று சொல்வீர்கள். 🙏🌹💐👍

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j

    ஹிந்து மததுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா ஸ்ரீமத் கிருபானந்த வாரியார்

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91926 жыл бұрын

    யதார்த்தமான,வாழ்வியலுடன் கூடிய கருத்துகளை கூறுவதில் வல்லவர்.சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்.Presents of mind அதிகம் அவருக்கு.உவமானங்களும், உதாரணங்களும் மடைதிறந்த வெள்ளம் போல் வரும்.

  • @ravananraju1436
    @ravananraju1436

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH3 жыл бұрын

    கொம்பனை யார்காது மோதிரு

  • @chinnadurai431
    @chinnadurai431

    வாரியர்ஸ்வமிகள் நமக 🍁🌼🪷❤️💐🌹🌺🙏🙏🙏

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636

    இறைவன்மிகப்பெரியவன்

  • @vinothmaster1265
    @vinothmaster12656 жыл бұрын

    இந்த அரிய சொற்பொழிவை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Жыл бұрын

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் உமது சொர்பொழிவை நேரடியாக கேட்டு மகிழ்ந்ததர்க்கு ஆண்டவனு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.முருகா சாணம், சஷ்ண்முகா சரணம், வேலவா சரணம்.

  • @chinnadurai2501
    @chinnadurai25014 жыл бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🌹💐🌺வாரியார் சுவாமிகள் போற்றி 🙏🌹💐🌺

  • @irajan2659
    @irajan2659

    தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @jayaramankrishnamoorthy9589
    @jayaramankrishnamoorthy95896 жыл бұрын

    கடவுளே முன்னின்று வழங்கும் அருளுரையெனத் திகழ்கிறது வாரியார் ஸ்வாமிகள் அருளிய அருளுரை.

Келесі