மந்திரமாவது நீறு | Manthiramavathu neeru | Thevaram | திருஞானசம்பந்தர்

A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
KZread Link: www.youtube.com/@KEERTHANAMUS...
Join whatsapp Community of Keerthana Music World
chat.whatsapp.com/G2Jc9fx5aI6...
Follow us on Instagram:
/ __keerthana_vengatesan
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
Thiruneetru Pathigam Lyrics Meaning
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை (கமண்டலத்தை) ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளை அடைந்தவரும் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.
தென்னாடுடைய சிவனே போற்றி

Пікірлер: 215

  • @parthibanparthiban5277
    @parthibanparthiban5277 Жыл бұрын

    என் சிறுவயதில் எனக்கு உடல் நிலை சரிஇல்லை என்றால் என் அம்மா என்னை மடியில் படுக்க வைத்து இந்த பாடலை பாடுவார்.என் அம்மா பாடும் அழகிலே உடல் நிலை சரியாகிவிடும். சிவபெருமானை கண்டதில்லை எவரும் நானும். உங்களை போன்றவர்களின் குரல் வளத்தில் இருப்பாரோ? ??.நீண்ட நாள் கழித்து அம்மாவையும். இந்த பாடலையும் நினைவு படுத்தியதுக்கு நன்றி ....ஏனோ நீண்ட வருடம் கழித்து இந்த பாடலை கேட்டு கண் நீண்ட நேரம் வேர்த்தது.........

  • @rajanmk4823
    @rajanmk4823

    திருச்சிற்றம்பலம் இந்த பாடல் கேட்க அந்த ஈசன் அருள் இருக்க வேண்டும். அடியேன் கொடுத்து வைத்துள்ளேன். சிவாயநம. 🙏🙏🙏🙏🙏

  • @ravikumarkumar6479
    @ravikumarkumar6479

    திருச்சிற்றம்பலம் என்ற சொல்லுக்கு அனைத்தும் இறைவனின் சித்தம் என்று பொருள் திரு- இறைவன், சித்தம்-எண்ணம்,செயல் பலம்-வலிமை, உறுதி, நிறை, முழுமை இன்னும் சுருக்கமாக சொன்னால் எல்லாம் அவன் செயல்

  • @matheswaranr6705
    @matheswaranr6705 Жыл бұрын

    நான் சிறுவயதில் இருக்கும் போது , கோவிலில் திருநீறு தரும் போது பாடிக்கொண்டே வருவார்கள் ,, இந்த பாடலை நாங்கள் மணலில் கோவில் கட்டி விளையாடும் போது பாடிக்கொண்டே மணலை திருநீறாக தருவோம் ..

  • @parthibanparthiban5277
    @parthibanparthiban5277 Жыл бұрын

    தேவாரம் திருவாசகம் அனைத்து பாடலும் பாடி பதிவேற்று தாயே....

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576

    இனிமையான குரலில் திருநீற்று பதிகம் அருமை யாக இருந்தது. ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿

  • @harinik2593
    @harinik2593

    எமது பிள்ளைகள் பவித்ரா காவ்யா ஹரினி அஜய் மோனேஷ் தஷ்வின் பவன் லிங்கேஸ்வரன் இவர்கள் அனைவரும் வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் நீடுழி வாழ வேண்டும் ஐயனே❤

  • @muthulakshmikannan271
    @muthulakshmikannan271

    உண்மையில் உன் குரலுக்கு ஈசனின் மனம் மட்டும் இன்றி எங்கள் அனைவருரின் மனமும் ஆனந்தத்தில் ஆடுகின்றது❤🎉

  • @parvathis7300
    @parvathis7300

    அம்மையே உங்களின் பக்திபரவசாமான இந்தப்பாடல் எம்பெருமான் ஈசனின் திருவடி அருகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.மிக்க நன்றி அம்மையே.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை.திருச்சிற்றம்பலம்.

  • @pushpanarayani9965
    @pushpanarayani9965

    இன்று தான் கேட்கப் பேறு பெற்றேன்.திரும்பத் திரும்ப கேட்டும் திட்டவில்லை. பாடியவர் என் ஈசன் அருள் பெற்றவர்.ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190

    இனிமையாக பாடிய கண்மணியே தெய்வீகக் குரல் அம்மா உனக்கு எல்லாம் இறைவன் அருள். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎉

  • @sri83244
    @sri83244 Жыл бұрын

    அருமை அற்புதம் அழகு. சரியான ராகம் (நானும் தாளம்போட்டுகொண்டு கேட்டேன்).. காணொளியின் ஸஹஸ்ரலிங்கம் அழகாக உள்ளது 😍..

  • @thirumal969
    @thirumal969 Жыл бұрын

    திருநீறு பற்றி இவ்வளவு அருமையான பாடல் கேட்கும் வாய்ப்பு கீர்த்தனாவின் குரலில் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சி....வாழ்க.. திருச்சிற்றம்பலம்.

  • @arunrajendran6968
    @arunrajendran6968

    என்ன ஒரு ஏகாந்தமான குரல்...😊😊😊...வாழ்க பல்லாண்டு

  • @gunasekaran1110
    @gunasekaran1110

    அருமையான குரல். மண்ணில்

  • @dhuraisamy8732
    @dhuraisamy8732 Жыл бұрын

    இந்தப் பாடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை போன்ற நோய்கள் இந்தப் பாடல் பாடினால் பறந்தோடும் . மிகவும் எளிமையாக பாடியது மிக்க நன்றி

  • @mbm2020m
    @mbm2020m

    🙏🙏 தாங்கள் மற்றும் பெற்றோர் எப்பிறவி செய்த புண்ணியம்.... தாங்கள் நாக்கில் கலைவாணி தஞ்சம் அடைந்து உள்ளாள் 🙏

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 Жыл бұрын

    அருமை!மிக அருமையாக பாடி இருக்கிறாய் கண்ணே!உன் குரலில் என்ன ஒரு இனிமை!வாழ்க வளமுடன்

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா

  • @balatamilselvi6674
    @balatamilselvi6674

    ஓம் நமசிவாய வாழ்க நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது இந்த பதிகம் சிவ சிவ சிவ

Келесі