GnaniBirundavanar

GnaniBirundavanar

சித்தர்களின் உண்மை ஞான சத்தியங்களை உலக மக்களுக்கு அறிவித்து, அனுபவ ரீதியாக உணர்த்திட, சித்தர்கள் மரபில் தோன்றிய ஓர் அற்புத மகான் ஞானிபிருந்தாவனர். சிறுவயது முதலே பல உண்மை சித்தர்களுக்கும், சூஃபி மகாங்களுக்கும் குருவடி தொண்டு செய்து அம்மகான்களால் பல தீட்சைகளை பெற்று சித்தர்களின் அதிரகசிய தவமுறை தியானத்தினை மேற்க்கொண்டு ஞானமடைந்தார்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற சித்தர் திருமூலர் அய்யாவின் வாக்குக்கிணங்க, குருநாதர் போகர் அப்பாவின் அருளானைப்படி ஞானிபிருந்தாவனர் ஞானபீடம் 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஞானபீடத்தின் முக்கிய செயல்பாடாக ஞானிபிருந்தாவனரால் உலகம் முழுவதும் அற்புத சித்தர் சிகிச்சை, ரகசிய சித்தர் சிகிச்சை, சூட்சம சித்தர் சிகிச்சை மற்றும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதற்பகுதியில் சித்தர்கள் கூறிய ரகசிய ஞான கருத்துக்களை ஞானசத்சங்கமாகவும், இரண்டாம் பகுதியில் ஆதிகாலத்திலிருந்து சித்தர்கள் இரகசியமாக உபதேசித்து வரும் தவமுறை தியானத்தினை இக்கால மக்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்து உபதேசமாகவும் வழங்கிவருகிறார்.

Пікірлер