No video

Worst among all creation | மொத்த படைப்புகளில் ஆக கேடுகெட்டவர்கள்

#tamil #bayan #tamilbayan #bayanat
காஃபிர்களுக்கு (இறைமறுப்பாளர்களுக்கு) இறங்கிய இறைவசனங்களை முஃமின்களுக்கு சொல்பவன், படைப்புகளில், மனிதர்களில் அல்ல, மொத்த படைப்புகளில் ஆக கேடுகெட்டவர்கள்....
இன்னொரு உதாரனம்
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
அவனையன்றி நீங்கள் எவைகளை வணங்குகிறீர்களோ, அவைகளுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை 35:13
இந்த ஜியானிஸ கைக்கூலிகள், இதில். வணக்கம் என்பதை அழைப்பது என்றும், அவை என்பதை அவர்கள் என்றும் மாற்றி அவ்லியாக்களை அழைப்பது என்று சொல்கிறார்கள். வழமை போல் அடுத்த ஆயத்தை பார்த்தால் புரியும் இவர்களின் ஈனத்தனமான செயல்.
إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ
நீங்கள் அவைகளைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவை உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்காது; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்காது;… 35:14.
எப்படி செவியேற்காது, செவியேற்றாலும் பதில் அளிக்காது! இங்கு தான், கண்மணி நாயகம் ﷺ அவர்களின் சொற்களுக்கு, நம்முடைய இமாம்கள் அளித்த விளக்கங்களை பார்க்க வேண்டும். கண்மணி நாயகம் ﷺ அவர்களின் புனித நாவு வஹி அல்லாதவைற்றை பேசாது ஏன் உசும்ப கூட செய்யாது (53:3,4). இப்பேற்பட்ட நாயகம் ﷺ அவர்கள், கப்ரடியில் நின்று கொண்டு சொன்னார்கள்,
‏"‏السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون،
கப்ரில் இருக்கும் முஃமின்களே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும், நீங்கள் முந்தி விட்டீர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி நாங்களும் உங்களை தொடர்வோம்...
இது ஸஹீஹ் முஸ்லிம் ஷரீபிலும் (131,581), அபூ தாவுத் ஷரீஃப் (3237), (மேலுள்ள வார்த்தை அதேமாதிரி இருந்து இருந்து, பின் தொடரும் மேல் விளக்கங்களுடனும்) சில வார்த்தைகளின் வித்தியாசத்துடன் மிச்காதுல் மஸாபீஹ் 1766, இப்னு மாஜாஹ் ஷரீஃப் 1546, நஸஈ ஷரீப் 2041, போன்ற கிரந்தத்தில் வந்துள்ள ஸஹீஹான ஹதீஸாகும்.
இப்பொழுது கேட்கிறோம், குர்ஆன் ஷரீஃப் 35:14ல் சொல்லப்பட்ட கேட்காது, கேட்டாலும் பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளவர்களிடமா கண்மனி நாயகம் ﷺ அவர்கள் முன் நிற்பவர்களிடம் (உங்களுக்கு, நீங்கள் என்று) பேசுவது போல் பேசினார்கள்? எனவே தெள்ளத்தெளிவு இது சிலைகளை வணங்குபவர்கள் குறித்து இறங்கிய ஆயத் என்று.
எனவே தான், இப்படி ஒரு பொல்லா பழியை முஃமின்களின் மேல் சுமத்தும், இன்றைய போலி தவ்ஹீத், நஜ்திகளின் முன்னோர்களான ஹவாரிஜிய்யாக்களை படைப்பினங்களிளேயே மிகவும் மோசமானவர்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு சாடியுள்ளார்கள். இது புஹாரி ஷரீஃபில், கவாரிஜிய்யக்களை தண்டிப்பது பற்றிய பாடத்தின் ஆரம்பத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது....
باب قَتْلِ الْخَوَارِجِ وَالْمُلْحِدِينَ بَعْدَ إِقَامَةِ الْحُجَّةِ عَلَيْهِمْ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّى يُبَيِّنَ لَهُمْ مَا يَتَّقُونَ}. وَكَانَ ابْنُ عُمَرَ يَرَاهُمْ شِرَارَ خَلْقِ اللَّهِ وَقَالَ إِنَّهُمُ انْطَلَقُوا إِلَى آيَاتٍ نَزَلَتْ فِي الْكُفَّارِ فَجَعَلُوهَا عَلَى الْمُؤْمِنِينَ.

Пікірлер: 8

  • @athuatheeb6390
    @athuatheeb63902 ай бұрын

    Mashallah alhamdulillah arumayana wilakkam allah ogaluku rahmath seywanaga aameen 💚💚💚💚💚💚

  • @Syed-ux1oi
    @Syed-ux1oi2 ай бұрын

    ماشاءاللّٰه اَلْحَمْدُلِلّٰه جزاك اللّٰه خيرًا

  • @hasanhafiza
    @hasanhafiza3 ай бұрын

    Mashallah crystal and clear explanation❤

  • @user-qb6hk4kw8c
    @user-qb6hk4kw8c3 ай бұрын

  • @Syed_Ibrahim_03
    @Syed_Ibrahim_033 ай бұрын

    👌🏻👌🏻

  • @ahamadhabubakkar97
    @ahamadhabubakkar972 ай бұрын

    Ameen ameen yarabillalameen

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    அவர்களின் பெயர் என்ன?

Келесі