The Book of the Mirdad ll மிர்தாதின் புத்தகம் ll பேரா.இரா.முரளி

#bookofmirdad,#mikhailnaimy
மிர்தாதின் புத்தகம் பற்றிய தத்துவ விளக்கம்

Пікірлер: 329

  • @rajuaravale677
    @rajuaravale677 Жыл бұрын

    கந்த குரு கவசம் பாடல் வரிகள் அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும் அன்பே தேவரும் அன்பே மனிதரும் அன்பே நீயும் அன்பே நானும் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்

  • @pathmanathanvelladhurai3280

    @pathmanathanvelladhurai3280

    Жыл бұрын

  • @vijayalakshmiramanan2287

    @vijayalakshmiramanan2287

    Жыл бұрын

    👏🙏🙏🙏

  • @SidharthSidharth-br5hr

    @SidharthSidharth-br5hr

    8 ай бұрын

    Ok

  • @vishwanaththanikachalam5623

    @vishwanaththanikachalam5623

    7 ай бұрын

    ❤❤❤

  • @karthikkrishnamoorthy447

    @karthikkrishnamoorthy447

    4 ай бұрын

    thanks

  • @parthibanutr9130
    @parthibanutr9130 Жыл бұрын

    தன்னை அறியும் முன் உள்ள நான் ஆணவத்தால் உண்டானது.தன்னை அறிந்த பின் உள்ள நான் இறைவன்.

  • @d.m.parthiban4486
    @d.m.parthiban4486 Жыл бұрын

    ஒஷோ புத்தகங்கள் வாயிலாக மிர்தாத் அறிமுகம் கிடைத்தது. சற்றேறக்குறைய 10 ஆண்டுகள் இந்த புத்தகத்தை தேடினேன். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக இப்புத்தகம் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் வாங்கினேன். பின் தான் புரிந்தது, இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரு வரி கூட புரிந்திருக்க முடியாது. ஓஷோவின் வாசிப்பினால் குறீயீடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. 10 ஆண்டுகள் கடந்த பின் தங்களின் காணொளியால் மறுவாசிப்பு வாய்பு பெற்றதில் மகிழ்ச்சி. நன்றி.

  • @user-yu6qw6mx8h

    @user-yu6qw6mx8h

    Жыл бұрын

    உங்கள் 10 ஆண்டுகால தேடுதல் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகம் தன் கையில் கிடைத்ததே ஒரு miracle என்று கவிஞர் புவியரசு குறிப்பிடுகிறார். அதை நானும் உணர்ந்தேன். மிக்கேல் நைமியை முழுதும் உணர அவர் எழுதிய ஆங்கில மூலத்தைப் படிக்க ஆவல். Amazon இல் வாங்க மனம் ஒப்பவில்லை. கடைகளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Жыл бұрын

    லெபனான் நாடு ஞானிகளின் தோட்டம் என்று சொல்லலாம்.உலக மகா ஞானியும் தீர்க்கதரிசி யுவான் கலீல் ஜிப்ரான் லெபனானைச் சேர்ந்தவர்.சாலமனின் ஞானம் எல்லாம் ஒன்றாகி தழைத்த பூமி அது.மிர்தாதின் புத்தகம் பற்றிய உங்கள் மனதை தொடும் விளக்கம் அருமை ஐயா

  • @rkguruful
    @rkguruful Жыл бұрын

    மிர்த்தார்தின் புத்தகதை பேசிய தங்களின் காணொளி சிறப்பு..💐 யாம் ஓஷோ புத்தகங்கள் அடுத்து விரும்பி படித்த புத்தகம் மிர்த்தாதின் புத்தகம். ஒருவேலை என் குரு ஓஷோவுக்கு பிடித்த நூல் என்றதால் எனக்கு பிடித்ததாக மாறியதோ..! ஆனால் அதன் சாரம் புத்தரும், போதி தர்மரும், ஓஷோவும் சொன்னதே அதனால் என் குருவுக்கு பிடித்தற்கு மேலாகவும் எனக்கு அப்புத்தகம் பிடித்தது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ஆன்மிக உள்ளோளி வைரம். விலங்கினங்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிகொண்டால்,"நம்மைவிட இந்த மனிதர்களுக்கு என்னவோ இருக்கு.. அவர்கள் மாதிரி ஆகனும்" என்று ஆசைபடலாம் ஆனால் மனிதர்கள் சாமியார்களை பார்த்து ஏங்குகிறார்கள் அவர்கள் மாதிரி சித்தி, ஞானம் அடையனும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்பூமியில் இருக்கும் புழு, பூச்சிகூட ஒரு நாள் 'நான்' என்ற ஆணவத்தை கடந்துதான் சென்றாக வேண்டும். அதற்காகவே எல்லாம் இங்கு வினையாற்றபடுகிறது. காலம், காலமற்ற காலவெளியில் காத்திருக்கிறது. யாம் முன்னே இருக்கலாம் நீங்கள் பின்னே இருக்கலாம் ஆனாலும் நீங்க முன்னோக்கியே தள்ளபடுகிறீர்கள். சுயம் அறிய நான் அழிய, அன்பு ஒரு ஊக்கியாகும்( Tricker) #பரபிரம்ம ஆதிமூலம், விருப்பு வெறுபற்ற நிலையை எல்லாம் உள்ளடக்கி இருக்கும் ஆனால் உள்ளாகாத நிலையாகவும் இருக்கும். அது கடிமான தேங்காயின் உள்ளிருக்கும் மென்மையான பூ போன்றது. அந்த பூவை காக்கவே கடினமான ஓடு(நான்) உள்ளது ஆனால் பூ இருப்பதை உணர்ந்து ஓடு உடைக்கபடாமல் உடைக்கபடவேண்டும். வெறுப்பு, வெறுப்பற்ற பூ உணர்ந்து(சாவி) மலரவேண்டும். தங்கள் ஆன்மிக தத்துவார்த்த பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்..💐 :-Rk.Guru

  • @question6468

    @question6468

    Жыл бұрын

    அருமை

  • @vijayaraniprabakara5163
    @vijayaraniprabakara51639 ай бұрын

    தங்களின் காணொளிகளை இதுவரை கேட்டதில் இதுவே ஏதோ ஒரு ஞான புரிதலை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். நன்றி.

  • @amudham06
    @amudham06 Жыл бұрын

    எப்படித்தான் விஷயங்களை தேர்ந்தெடுக்கிறீர்களோ 💕💕. அருமை. நன்றி. தொல்காப்பியம், நீலகேசி மற்றும் ஆரோக்கிய நிக்கேதனம் ஆகியவை குறித்தும் பேசவும் 🙏

  • @aramsei5202
    @aramsei5202 Жыл бұрын

    அய்யா பல வருடங்களுக்கு முன் படித்து இருக்கிறேன் ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை இந்த காணேலி மிகவும் அற்புதமாக புரியும் வகையில் அமைந்துள்ளது 🙏🏾 நன்றிகள் அய்யா

  • @saravananvelusamy300

    @saravananvelusamy300

    Жыл бұрын

    நான் என்பது ஒன்றுமில்லை உலகில் என்னைத் தவிர எதுவும் இல்லை

  • @mohankumaramos811_famineof9

    @mohankumaramos811_famineof9

    Жыл бұрын

    காண்+ஒலி=காணொலி Video

  • @sudhakaran8281

    @sudhakaran8281

    8 ай бұрын

    Exam la fail Aanavan teacher a paarthu naan failahividuvean yendru therinthum yeaan sir exam vaithu fail mark poteergal yendru ketpathu polirukirathu. God had tested man whether he obeyed Him. But mankind failed, but God didn't leave him at that state. He himself came to this world as man and died for him in the cross and found a way to save man.

  • @ganapathiramansubramaniam5434

    @ganapathiramansubramaniam5434

    8 ай бұрын

    நானும் படித்தேன் புரியாததால் முடிக்கவில்லை. இவர் மிக அருமையாக புரியவைத்து விட்டார். இவர் நன்றிக்கு உரியவர்

  • @radhakrishnan480

    @radhakrishnan480

    3 ай бұрын

    😂😂😂😂😂❤❤​@@saravananvelusamy300

  • @vijirr9701
    @vijirr9701 Жыл бұрын

    அருமை ஐயா மிக அருமை..... புரிந்து கொள்வதற்கே சிரமமாக இருக்கும் இந்நூலின் சாரங்களை தங்கள் அனுபவத்தின் கீழ் அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கியமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻....

  • @rajuaravale677
    @rajuaravale677 Жыл бұрын

    அன்பின் தேவன் அன்பின் வார்த்தைகளைக் கொண்டு சகல சிரிஷ்டி களையும் சிரிஸ்டிதார் அவை அனைத்தும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன - பைபிள். தேவனைகிய உன் கர்த்தரிடத்தில் அன்போடும் முழுமைனதோடும் அன்பு கூறுவாயாக, உன்னிடத்தில் நீ அன்புக்குறுவதுபோல் பிறரிடத்தில் அன்புக்கூறுவாயாக, இதுவே ஞானமும் தீர்க்க தரிசனமும் ஆகும் என்று இயேசு கூறினார் -Bible

  • @venkai81
    @venkai81 Жыл бұрын

    அற்புதமான ஆன்மீக வழிகாட்டி நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எல்லாருக்கும் முன்னதாக அறிமுகப்படுத்திய ஓஷோவுக்கும் நன்றி.

  • @KS-wj4bc
    @KS-wj4bc Жыл бұрын

    மிக அருமையான தருணம். இந்த நூல் குறித்து அறிந்திருந்தேன். ஒரு போதும் வாசிக்கவில்லை. இன்று நல்ல ஒரு அறிமுகம். அந்த இளைஞன் மலையேறும் தருணத்தை விபரித்த உங்கள் வார்த்தைகள் அற்புதம். உடை இழந்து, ஊன்றுகோல் இழந்து அவன் உயர உயரப் போகும் அந்த தத்துவ நிலை குறித்து நீங்கள் பேசிய போது மெய் மறந்துபோனேன். நன்றி. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @question6468

    @question6468

    Жыл бұрын

    அருமை

  • @kannank9840
    @kannank9840 Жыл бұрын

    எல்லோருக்கும் புரிந்து விட்டால் இங்கு தூதர்கள் தேவையில்லை. புரியதவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தூதர்களும் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இது ஒரு முடிவில்லாத பயணம், காலத்தை போல. வழக்கம் போல தங்கள் விளக்கம் அருமை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rajaraasa492
    @rajaraasa492 Жыл бұрын

    பல்கலைக்கழகம் போல் ஒரு காணொளி. பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போன்ற எளிமையான பாடம். உலக தத்துவங்களை இருக்கும் இடத்திலிருந்தே கற்கிறோம்.. தங்கள் தத்துவப் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சார்.

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Жыл бұрын

    7...திரைகள்..வள்ளளார் சொன்னது..எல்லாத்தையும் இழந்தால் தான் முக்தி ஞானம்..செங்குத்தான மைய பாதை..சுழுமுனை..நிர்வாணம்...புத்தர் சொன்ன சூன்யம்..பரி நிர்வாணம்..வைராக்யம்....பலமுறை படித்திருக்கிறேன்.. excellent book..விவரித்தவிதம் மிக அழகு.....

  • @giriraj2055

    @giriraj2055

    Жыл бұрын

    😮

  • @giriraj2055

    @giriraj2055

    Жыл бұрын

    😊0

  • @antonycruz4672

    @antonycruz4672

    Жыл бұрын

    எல்லாம் இழப்பதே இறைசரணாகதி. இயேசு ஒருவரே அவர்

  • @periyasamyuthandi8574

    @periyasamyuthandi8574

    9 ай бұрын

    😢l T😊😮😮😊😊

  • @thamil9
    @thamil9 Жыл бұрын

    பகவத் கீதை படிக்கும் போது ஏற்பட்ட பல இனிய நல்ல அனுபவங்கள் மிர்தாதின் புத்தகம் பற்றிய உங்களின் காணொளியில் மூழ்கும்போது ஏற்படுகிறது. நன்றி ஐயா. 😊🙏

  • @naannee5971

    @naannee5971

    Жыл бұрын

    மிர்தாதின் புத்தகம் அனைவருக்கும் ஆனது அன்பை பிரதானப்படுத்துவது. ஆண் பெண் சமன் மற்றும் மனிதம் பேசுகிறது. தங்கள் ஒப்புமை சரியானதா?

  • @thamil9

    @thamil9

    Жыл бұрын

    மிர்தாத்தின் புத்தகம், கீதை இவை மட்டுமல்ல உச்சக்கட்ட மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் எந்தத் தத்துவமும் அனைவருக்குமானதே. கீதையானது அன்பை மட்டுமல்ல, மனிதத்தையும் தாண்டிய புனிதத்தையும் பேசுகிறது. அந்தப் புனித நிலையில் அனைத்து உயிர்கள் மீதும் இயல்பான அன்பு பிறக்கும். 'அன்பே சிவம்' என்றும் கூறலாம். எனினும் அந்த உச்ச நிலை அடையும் வரை அவரவர் இயல்புக்குத் தக்க (சுதர்மம், பூர்வ மற்றும் இந்த ஜென்மப் பதிவுகள், பிரகிருதி, கர்மச் சக்கரம் இவற்றைக் கீதையில் படித்தால் மேலும் தெளிவு பிறக்கும்) கருமங்களைச் செய்தே ஆக வேண்டும் எனக் கீதை வலியுறுத்துகிறது. எனவே தான் கீதை மிகப் practical ஆனது! 😊🙏

  • @sivavilathai
    @sivavilathai Жыл бұрын

    ஓஷோ அவர்களால் மிகச.சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக, குறிப்பிடத்தக்க நூலாக கூறியது இப்புத்தகம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்திருக்கிறேன். முதலில் ஆங்கிலத்தில் படித்தேன், புரியவே இல்லை. மீண்டும் படித்தேன் சிறிது புரிந்தது. பின் கவிஞர் புவியரசு அவர்களின் தமிழாக்கத்தைப் படித்தேன். மேலும் கொஞ்சம் புரிந்தது. சுழற்றி சுழற்றி பேசும் ஆங்கில ஆளுமையில் மிரண்டு தமிழில் இந்நூலைப் படித்தேன். அய்யா புவியரசு அவர்களின் தமிழாக்கத்தில் கரைந்து போனேன். இக்காணொலியின் மூலம், முரளி அவர்களின் உரை மூலம் " ஒரு ஆன்மிகத் தேடலின்" உண்மையைத் தெரிந்து கொண்டேன். அருமையான காணொலி, அருமையான புத்தகம்.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Жыл бұрын

    இந்து பௌத்தம் தத்துவங்கள் மீண்டும் சொல்லப்ட்டுள்ளது . நன்றிகள் ஐயா. சிறப்பாக விளக்கம் தந்து விட்டீர்கள்

  • @selvakumar5663

    @selvakumar5663

    Жыл бұрын

    பவுத்தம் வேறு இந்து தத்துவம் என்பது வேறு.

  • @TT-xg7qd

    @TT-xg7qd

    9 ай бұрын

    @@selvakumar5663Ellam onnu dha sila changes avolodha 😂

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 Жыл бұрын

    இந்நூலின் ஆசிரியர் கீழ் திசை மெய்யியலில் ஆழ்ந்த பயிற்சியும் செறிவும் நிறைவும் பெற்று உய்த்து , இந்த நூலை வழங்கியுள்ளார் என கருதுகிறோம். அதற்காக தரவுகள் ஏதேனும் உள்ளனவா... தங்களது தெளிவான விரிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. ஐயா. வணக்கம்.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Жыл бұрын

    அய்யா, கடினமான புத்தகம். புரியும்படியான விளக்கம். நன்றிகள் பல.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Жыл бұрын

    அகம் பிரம்மாஸ்மி! தத்துவமசி! ! என்ற கிழக்குத் தத்துவங்களின், பிரதிபலிப்பாகவே இதை நான் பார்க்கிறேன்! உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடீஸ்! "என்னை அருகிலன் இத்தனை காலமும் !என்னை அறிந்த பின், ஏதும் அருகிலேன்!"என்கிறார் திருமூலர்!

  • @jamest1812
    @jamest18128 ай бұрын

    வெகு நேர்த்தியான பதிவு. தினம் தினம் உங்களின் ஒரு பதிவை பார்கிறேன். நான் அந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட இவ்வளவு முழுமையாக புரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி சார்❤

  • @raja.de.shankar
    @raja.de.shankar Жыл бұрын

    இந்த புத்தகம் 12 வருடங்களுக்கு முன் எனக்கு பரிச்சயம் ஆனது. முதல் அத்தியாயம் கூட என்னால் தாண்ட முடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஓஷோ வின் பல புத்தக வாசிப்புக்கு பிறகு இதை புரிந்து கொள்வது ஓரளவுக்கு சாத்தியமாயிற்று. ஓரளவுக்கு மட்டுமே 😅. ஒவ்வோர் முறை படிக்கும் போதும் ஒவ்வோர் அர்த்தம் கிட்டும். அற்புதமான புத்தகம். உங்கள் காணொளியில் இதை மிகவும் வரவேற்கிறேன்.

  • @question6468

    @question6468

    Жыл бұрын

    அருமை

  • @johnwilliamgomaz8674

    @johnwilliamgomaz8674

    Жыл бұрын

    Correct Difficult understanding

  • @subramaniansambantham2696

    @subramaniansambantham2696

    Жыл бұрын

    I fully endorse your view

  • @rajapa3430

    @rajapa3430

    Жыл бұрын

    உங்கள் கற்பனைக்கு நன்றி

  • @sathischam4096
    @sathischam4096 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. இது போன்ற நிறைய புத்தகங்களை பரிந்துரை செய்யவும்..

  • @uzifosheezy1781
    @uzifosheezy178110 ай бұрын

    நான் இரண்டாவது முறையாக முழுமையாக பார்த்த 1மணி நேர காணொளி... மிக்க நன்றி் ஐயா🙏🏽

  • @silicons1
    @silicons1 Жыл бұрын

    புத்தகத்தை நான் படித்துவிட்டது போன்ற உணர்வை கொடுத்து விட்டது உங்கள் சிறப்பான உரை.

  • @premkumarprem4546
    @premkumarprem4546 Жыл бұрын

    சிறந்த விளக்கம். உங்கள் பேச்சாற்றல் அருமை. பல வருட கற்பித்தல் அனுபவம். தொடர்ச்சியாக உங்கள் விளக்கங்களை கேட்டு வருகின்றேன். நன்றி ஐயா.

  • @Dr.Mithulashrivedha
    @Dr.Mithulashrivedha26 күн бұрын

    Wow.. பலதடவை படித்த புத்தகம் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்க அனுபவிக்க நிறைவாக உள்ளது.. your flow of speech is good...

  • @user-yu6qw6mx8h
    @user-yu6qw6mx8h Жыл бұрын

    அன்பின் வலிமையை உணர்த்தும் உன்னதப் படைப்பு. இதன் வார்த்தைகள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. அருமையான மொழிபெயர்ப்பு. படித்துவிட்டு, பாதியுடன் நிறுத்தியிருந்த புத்தகம். உங்களால் இதோ மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டேன். நன்றி!! ஆங்கிலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Жыл бұрын

    தன்னை மௌனம் ஆக்க கூடிய ஒரே கேள்வி யார் நீ?என்பது தான் என்று கலீல் ஜிப்ரான் மணலும் நுரையும் புத்தகத்தில் கூறியுள்ளதை நினைவு கூர்கிறேன்.அருமையான விமர்சனம்.

  • @damodharanm8775
    @damodharanm87758 ай бұрын

    சென்று அடையாத திருவுடையவன் இறைவன்....இது ஒரு அருமையான வாக்கியம்.. தேவாரம் திருஞானசம்பந்தர் பாடலில்....

  • @sridharse
    @sridharse Жыл бұрын

    காணொளிக்காக காத்திருந்தேன்.. எங்கள் தத்துவ உலகம் உங்களால் அறிமுகம் பெறுவது மகிழ்ச்சி

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Жыл бұрын

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. மேன்மேலும் தங்கள் சேவை இப்போதிருக்கும் "சரியான நேரத்திற்காண "தேவை" அய்யா. "பிறப்பின் நோக்கரியா" மனிதர்கள்???? ....... " எப்போது "தன்னையறியும் "நுண்ணறிவை" அறியப்போகிறார்கள் என்பதனையும் "காலம்" தான் உணர்க்த வேண்டும். "சின்றின்பமே "வாழ்க்கை என நம்பி நம்பி தன்னை இழந்துக்கொண்டிருக்கிறார்கள். "வள்ளார் வாடியப் (மனித) பயிரைக் கண்டு தான் வாடி தவித்திருப்பார் எனத் தான் எண்ணுகிறோம். "ஓம் சாந்தி" நிலையை அடைவது எக் காலமே ??? "மெளனம்",,,!!!!....... "அனைத்துலகும் இன்பமுற" "வடக்கு மலை"(விஷ்வாசி) யானே" போற்றி போற்றி போற்றி... ஓம் சாந்தி"...

  • @pmmagesh8932
    @pmmagesh893213 күн бұрын

    ஏனென்றால் ஆதமும் கடவுள்தான்.. இதை கேட்பதும் சொல்வதும் படிப்பதும் படிக்காததும் கடவுள்தான்..

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Жыл бұрын

    மிகவும் அற்புதமான உன்னதமான உயர்வான ஞானம் நிறைந்த நூலைப் பற்றி மிக உயர்ந்த ஞானத்தோடு நீங்கள் கூறியது அந்த ஞானத்தோடு கேட்கும்பொழுது அந்த உன்னதமான உயர்வான நிலையில் கேட்கும் பொழுது நமக்குள் மாற்றத்தை உணர முடிகிறது தங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியை காணிக்கையாக்குகிறேன், அற்புதம் நன்றி ஐயா, உங்கள் குழு அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @question6468

    @question6468

    Жыл бұрын

    அருமை

  • @arasuast6184

    @arasuast6184

    Жыл бұрын

    Thanks & thanks to The Socrates studio.🙏

  • @sweetdarlings

    @sweetdarlings

    Жыл бұрын

    நன்றி ஐயா ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்துள்ளேன். உங்கள் விளக்கம் மிக எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக உள்ளது. ரமணரின் 'நான் யார்' என்ற விசாரணைக்கு ஒப்பாக உள்ளது இந்த நான் அறிமுகமோ ( அ ) விளக்கமோ.... வளர்க உங்கள் பணி... 🙏

  • @MohamedIbrahim-sq6kq
    @MohamedIbrahim-sq6kq Жыл бұрын

    அன்பு வணக்கம் அய்யா பேராசிரியர் அவர்களுக்கு தங்களின் ஆய்வு திறன் தத்துவார்த்ததில் விடை என்பது பிழிந்து எடுத்த அமிர்தம் போல் தருவது புரிதல் எனும் மிகு பலனை பெறுவது எங்களுக்கு சாத்தியமாகிறது மிக்க நன்றி அய்யா 🙏👌

  • @question6468

    @question6468

    Жыл бұрын

    அருமை

  • @MohamedIbrahim-sq6kq

    @MohamedIbrahim-sq6kq

    Жыл бұрын

    கேள்விகள் என்பது அய்யா அவர்கள் எடுத்துக்கொண்ட புத்தகத்தின் ஆய்வுகளே...

  • @BalaChennai
    @BalaChennai Жыл бұрын

    32:20 நான் என்பது எது , அன்பு என்பது எது என்பதை பற்றி மிக சிறப்பான காணொளி.. அருமை..

  • @saraswathis5102
    @saraswathis5102 Жыл бұрын

    நான் எனது சாயலுடன் இருந்து உன்னதமான முறையில் உரையாடல் செய்வது போல் தெரிகிறது.

  • @raguveeransivasubramaniam843
    @raguveeransivasubramaniam843 Жыл бұрын

    சிறப்பான காணொலி. அழகான வர்ணனை. விளக்கம். முரளி ஐயாவுக்கு வணக்கம். வாழ்த்துகள்.

  • @loganathanpalanisamy2976
    @loganathanpalanisamy29764 күн бұрын

    அற்புதம் அய்யா உங்களின் விளக்கம்!❤

  • @kannant8188
    @kannant8188 Жыл бұрын

    ஐயா உங்கள் சேவை அளப்பரியது! சொல்லி அடங்காது அது சொல்லிலும் அடங்காது. மிகவும் நன்றி!!!

  • @mayooranbala4034
    @mayooranbala4034 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா! என்றும் போல் மிக அழகாக ஆழமாக விளக்கம் தந்துள்ளீர்கள். உங்கள் சேவைக்கு நன்றி! வாழ்க வளமுடன்!

  • @rajachinnasamy5542
    @rajachinnasamy5542 Жыл бұрын

    மிகச் சிறப்பாக பேசியிருக்கிறீர்கள் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @brightscreen8583
    @brightscreen8583 Жыл бұрын

    மிர்தாதின் புத்தகம் பற்றி தங்கள் விளக்கம் அருமை இதை நானும் உங்கள் விளக்கம் பற்றி அறிய விரும்பினேன் நன்றி

  • @question6468
    @question6468 Жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Жыл бұрын

    மிக மிக அருமையாக மிக எளிமையாக இதை புரிதலோடு இவ்வளவு எளிமையாக புரிய வைக்க முடியும் என்பது கூட எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது அவ்வளவு தெளிவாக அவ்வளவு எளிமையாக கிட்டத்தட்ட தமிழ்பித்தன் கடவுள் என்ன கூறினாரோ அந்த நிலையில் சிறப்பாக விளங்கியது நன்றி என்ற வார்த்தையில் அவ்வளவு சுலபமாக கூறிவிட முடியாது ஏனென்றால் அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் கூறுவர் மறத்திற்கும் அஃதே துணை என்ற திருவள்ளுவர் குறளும் கிணங்க என்ன அன்பு நம்மளை கட்டிப் போட்டுவிடும் என்று கூறுவார்கள் ஆனால் அது நம்மளை விடுவிப்பதற்கு அன்புதான் துணையாக இருக்கிறது என்ற கருத்து மிக அருமையாக இருந்தது இன்னும் நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச்சுடர் வானில் செலுத்தும் நானே ஆன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதற் ஜோதி நானே காமநோய் விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின் ஊனமற்ற காயமாய் இருப்பன் நான் கருக் கொள்ளாது குழியிலே காலில்லாத கண்ணிலே நெருப்பை திறந்தபின் நீயும் நானும் மனிதனும் கடவளாகளாம் மிக மிக அருமை ஐயா கருப்பையா சித்தர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 Жыл бұрын

    சிறப்பான பணி. மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள்.

  • @ravibharnive1
    @ravibharnive13 ай бұрын

    ஆழித்துரும்பெனவே அங்கும் இங்கும் உன் அடிமை பாழில் திரிவெதன்னவோ பாவம் பராபரமே! நன்றி ஐயா

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Жыл бұрын

    அருமை அருமை uni ஒன்று verse பல பல.., பலபல ஒன்றிணைந்த ஒன்று என்று விளங்கிக் கொள்ளும் போதும் உண்மை உணர்வுக்கு உதவும் தங்களின் இந்த உரை சிறப்பாக உள்ளது நானும் பல முறை படித்தும் விளங்காதவை விளங்கிக்கொள்ள உதவியாக இருந்தது நன்றிகள் தங்களின் இந்த பணிதொடற வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @aburoshni2565
    @aburoshni2565 Жыл бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @user-lo6ky8xh2h
    @user-lo6ky8xh2h Жыл бұрын

    ஐயா தற்போதைய இந்த மிருதாத்புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன் சரியாக புரியாமல் இருந்தேன் நல்ல விளக்கம் நன்றி

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Жыл бұрын

    அனைவரும் ஞானிகள்தான், கடவுள்தான், பிரபஞ்ச ஞான உணர்வாற்றல்தான்.. கட்டமைப்பு ஆளுமை ஆற்றல்தான்.. அதாவது சிவமும் சக்தியும்தான்.. ஒரே உணர்வின் பல்வேறு நிலைகளே..

  • @rajsu9294
    @rajsu9294 Жыл бұрын

    இதை நான் பார்த்து மகிழ்ந்து நண்பருக்கும் பகிர்ந்து உள்ளேன். நன்றி🙏💕

  • @KKTNJ
    @KKTNJ Жыл бұрын

    தமிழின தத்துவ அமுதசுரபியே வருக...வருக

  • @anuanu4352
    @anuanu4352 Жыл бұрын

    நன்றி ஐயா.

  • @antonycruz4672
    @antonycruz4672 Жыл бұрын

    தேடல்களின் இறுதி மரணத்தின் பிறகுதரிசிக்கும்தெய்வமாட்சியே.

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Жыл бұрын

    Thank you for the awesome explanation Sir.

  • @dhasan5794
    @dhasan5794 Жыл бұрын

    அருமையான விளக்கம்…எனினும் இதுபோன்ற தத்துவங்கள் தமிழில் நம் முன்னோர்களால் அதிகம் பேசப்பட்டே வந்திருக்கின்றன… குறிப்பாக அன்பின் அவசியத்தை வள்ளலார் அதிகம் விளக்கியுள்ளார்… மிக அருமையான பதிவு…

  • @presiyogendra5669
    @presiyogendra5669 Жыл бұрын

    Thank god for wonderful lecture.

  • @antonycruz4672
    @antonycruz4672 Жыл бұрын

    அன்பின் ஆழம் அகலம் உயரம் மனு உரு தெய்வம் இயேசு மாமனிதர். உயிர்தந்த தியாகி. மிர்...

  • @anthonybalachandar4168
    @anthonybalachandar4168 Жыл бұрын

    Excellent narration Professor Sir. I never miss your topics. Please go on your journey, we will follow you.

  • @SureshNallaperumal
    @SureshNallaperumal Жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @RajanPandian
    @RajanPandian Жыл бұрын

    நான் என்றால் ஆன்மா! பாரதி பாடிய அக்னி குஞ்சி ஒன்று கண்டேன் பாடலில், தழல் வீரத்திற்கு குஞ்சு என்று மூப்பு என்றும் உண்டோ! ஆன்மா வின் சக்திக்கு இறை என்றும் மனிதன் என்று வித்தியாசம் இல்லை என்று கூறியிருக்கிறார் பாரதி! அருமை ஐயா!

  • @SrinivasanMelmangalam

    @SrinivasanMelmangalam

    Жыл бұрын

    Exactly correct

  • @agrivision4376
    @agrivision4376 Жыл бұрын

    Sir, your explanations are clear and superb. It is very much useful for me , since I am not having book reading habit. Thanks

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Жыл бұрын

    Exceptional explanation of philosophy professor sir Great

  • @MahaLakshmi-nm2hp
    @MahaLakshmi-nm2hp Жыл бұрын

    Listening to your videos are great learning experience professor.thank you for your great speach

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Жыл бұрын

    மிகவும் சிறப்பு! அற்புதமான புத்தகம்...!!

  • @aaroonraja69
    @aaroonraja69 Жыл бұрын

    தங்கள் காணொளி மிக அருமை அய்யா

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 Жыл бұрын

    It was indded an enligttening session..Great Wrok Sir.

  • @senthamarair8339
    @senthamarair8339 Жыл бұрын

    Eagerly awaiting for this sir. Thank you so much.

  • @coolcool379
    @coolcool379 Жыл бұрын

    When we are in deep sleep we are nearly connected with SPACE. When we are in wake we are nearly connected with TIME.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    With much difficulty and hard of reading you are giving us in a simple way of understanding. Thanks.

  • @vinothkumar11
    @vinothkumar11 Жыл бұрын

    The way you delivered was amazing sir! Keep up the good work!! Thank you!!!

  • @vsivaramakrishnavijayan5980
    @vsivaramakrishnavijayan5980 Жыл бұрын

    வணக்கம்.தங்களின்சாக்ரடீஸ் சேனலை பார்த்துக் கொண்டு வருகின்றேன். இந்த மிர்தாதின் புத்தகம் அருமை. எமது குருவின் உயிரே கடவுள் என்ற கோட்பாட்டை இதில் காண்கிறேன். நன்றி.🙏🙏🙏

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Жыл бұрын

    Excellent presentation sir. Thanks.

  • @narayanansubramaniam4545
    @narayanansubramaniam4545 Жыл бұрын

    Excellent brief, Keep giving us food sir

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 Жыл бұрын

    Thanks a lot, Very much informative

  • @Balakrishnan-uu2ru
    @Balakrishnan-uu2ru4 күн бұрын

    Very brief explaination for NaN Thank you

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    Its Great for me....Thank u sir

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s3 ай бұрын

    அன்பு தான் வாழ்வின்...சாரம்...கால சக்கரம்..சுழலும்...அதன் அச்சாணி சுழல்வதில்லை....மையாதில் சென்ட்ரல்...பிறவி..பினி இல்லை...மிர்தாத்

  • @chaanthiniassociiates323
    @chaanthiniassociiates323 Жыл бұрын

    Excellent Sir.... Your video's provides me a sort of unexplainable feel I am thinking, listening Your speech itself a mystical journey to me. Each video's I do listen many times... Thanks is a simple word for your work.

  • @duraiarasan842
    @duraiarasan842 Жыл бұрын

    Sir, thanks so much. Really nice explanation.

  • @sambamurthyk3596
    @sambamurthyk35969 ай бұрын

    Thankyou very much sir, for your speech on this book. I tried to buy this book online but couldn't get it. Your speech has given a wonderful insight about this book. I will certainly get hold of this book and read it.

  • @ravired08
    @ravired08 Жыл бұрын

    Really appreciate and big contribute to our community this channel

  • @johnwilliamgomaz8674
    @johnwilliamgomaz8674 Жыл бұрын

    My bad time situation every day morning and evening read it . My best quote Love is juice of life

  • @vijaykumar-lc6eg
    @vijaykumar-lc6eg Жыл бұрын

    Great explanation Professor

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal72707 ай бұрын

    Dr sir You are excellent lecture I never met in my life Greatest sir

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss85436 ай бұрын

    Excellent explanation sir.... After I read the book.... I saw this video 💐💐💐💐💐....... Amazing👍👍👍

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s3 ай бұрын

    mmhm..vow excellent..jee...already i read mirthad...10 yrs.before...but every times giving new ideas...

  • @arumugama9055
    @arumugama9055 Жыл бұрын

    Excellent brother…! Explained nicely with suitable examples. We also trying to understand the core part through your explanation…. 👍

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Жыл бұрын

    அகம் அன்பின் ஊற்று!அகமே பிரம்மம்!🙏🏼❤️

  • @DevaPrabu-qp6br
    @DevaPrabu-qp6br7 ай бұрын

    நன்மை. தீமை அறியும் கனி ,கீழ்படியமைய் தான்.சுதந்திரத்தை கொடுத்தார்

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Жыл бұрын

    Nandri sir,,Nandrigal kodi to our greatest Universe, Ancestors...all creatures, creations of Universe

  • @balathandayuthamchef
    @balathandayuthamchef10 ай бұрын

    Thank you sir arumaiyana vilakkam

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Жыл бұрын

    Thank you very much sir 🙏❤️

  • @user-cc6tm8hg6b
    @user-cc6tm8hg6b Жыл бұрын

    அருமை நேர்த்தியான தேர்ச்சி நீங்கள் மெருகுகேறி விட்டீர்கள் மேலும் வளர்க வணக்கம் வாழ்த்துக்கள் 1:10:51

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Жыл бұрын

    You speak beautifully thanks 👍👍

  • @ovandana
    @ovandana Жыл бұрын

    I couldn't understand anything while reading the Book. But you have explained it so well. Yet it requires several times listening to understand such deep philosophical book. Thank you so much sir 🙏

  • @elangos2159
    @elangos2159 Жыл бұрын

    Arumai....!! 🙏

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Жыл бұрын

    மகிழ்ச்சி ஐயா 🙏

Келесі