துப்புடை யாரை (பெரியாழ்வார்)
D.A.Joseph choose the 10 Pasurams in which Periyalwar is worried about his last days and appeals to Vishnu for his escort and assistance.
பத்தாந் திருமொழி
(423)
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(424)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள்
போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(425)
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(426)
ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(427)
பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(428)
தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(429)
செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே
எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா
வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது
அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(430)
நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன்
ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(431)
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே
அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன்
நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
(432)
மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும்
ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே.
Пікірлер: 52
உயர்திரு ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
நமஸ்காரம் ஸ்வாமி இதுவரை பாசுரங்கள் ஸேவிக்காமல் இருந்தாலும் தங்களின் பாசுர விளக்கம் கேட்ட பின் பாராயணம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் கண்டிப்பாக ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.மிக்க நன்றி ஸ்வாமி. 15:20
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே..!🙏🏻🙏🏻🙏🏻 தங்களின் ரூபத்தில் பெரியாழ்வாரைக் காண்கிறேன்..! ❤️❤️❤️ஜெய் ஶ்ரீமன் நாராயணா..! 🙏🙏🙏
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
@dvsrinivasan
Жыл бұрын
@@DAJoseph16 namaskaram. thangal naveena thirumazhisai alwar. eppay thirumazhisai alwar ella mathangalim sendru srivaishnavam supreme endru arindaro appadi thangal srivaishnavame supreme endru nilai naatukirarkal. oru vendukol. thangal pravachanathil muthalli thirvenkadathanai padum pozhu intha muthal pasurathaiyum sonnal nandraha irukkum. nandri ayya. srinivasan, chennai
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம்
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
Adiyen's Namaskarams to the Lotus Feets of Guruvarayaa, You are Truly an Narayana's Time machine, Every single time when I listen to your Narrations Ayya is taking all of your listeners to every Alwars time period, re-creating the situations and making us to experience the sight seeing of Vaikunta. we really get to experience of Time Travel. we are so fortunate to take birth in presence of Ayya's Timeline. Dhanyawad Jai Sriman Narayana 🎉
அருமை மிகவும் நன்றாக இருக்கிறது
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரனம்
Jaisrimannarayana 🙏🙏🙏
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
Wonderfull speech superb
Ji The jokes you have cracked in between the upanyas throughout taken me away from the fear of death . Thank you🙏 ji
அருமையான உபன்யாசம் ஸ்வாமி 🙏🙏🙏🙏
awesome 🙏🙏🙏
elevated and superior explanation of the Pasusuram on Periyalwar, which is bliss to listen to and lucidly narrated without complicated meanings or interpretations. namaskarams
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
அடியேன் நமஸ்காரம் சுவாமி.எப்படியாவது அவன் திருவடியை அடைந்து விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.அதற்கு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எம்பெருமான் திருவுள்ளம் வேண்டும்.நமஸ்காரம் சுவாமி
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
@gayathrigayathri1511
Жыл бұрын
@@DAJoseph16 ஜீவாத்மாக்குள் இருக்கும் அந்தர்யாமியாகிய பரமாத்மாவை பற்றி ஒரு 𝚟𝚒𝚍𝚎𝚘 பொடுங்க 😌
Jai sriman narayan
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
Jai Sriman Narayana
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
நன்றி ஐயா
glad to see swami do prabhandam topic again.. dhanyosmi
அருமையான உபன்யாசம் மிக்க நன்றி சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻
🙏
Swamy Your explanation is simple and profound. This is great reminder for us to be on track till we meet our death.🙏👌
குருவே சரணம்...❤❤❤
Namaskaram Migavum arpudhamana informations. Ungal pani thodara Sriman Narayananai vendugirane.ķ
🙏🙏🙏
Jaisriram
Swamy Namaskaram! If you could please explain other pasurams like Agalakillen irayum endru (recommendation letter to Lord Vishnu), it will be useful for the humanity.
🙏🙇
Adiyen ramanuja dasan
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
💚💚💚💚💚
NAMASTE SIR
ஜீவாத்மாக்குள் இருக்கும் அந்தர்யாமியாகிய பரமாத்மாவை பற்றி ஒரு 𝚟𝚒𝚍𝚎𝚘 பொடுங்க 😌
அடியேன் இராமானுஜ தாசன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் 🙏🙏🙏
DAJவாழ்க
ஐயா! யாகங்களில் விலங்குகள் பலியிடும் நிகழ்வு பற்றி பேசவும் 🙏🙏
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம்
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !
🙏
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம்
@DAJoseph16
Жыл бұрын
Jai Sriman Narayana !