தடைகள் நீங்கி கைமேல் பலன் அருளும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்| Vel Maral lyrics & Meaning
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய
தடைகளை நிக்கி உடனுக்குடன் பலன் அருளும் சக்தி வாய்ந்த
பாராயணம்
பாராயணம் செய்யும் முறை:
வேலும் மயிலும் சேவலும் துணை (6 முறை ஓதவும்)
திருத்தணியில் (12 முறை ஓதவும்)
பாடல் 1,31,36,62
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் (திரு)
ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும்.
(வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)
பாடல் 2,32,35,61
திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. (12 முறை ஓதவும்)
திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!
பாடல் 3,29,34,64
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் (திரு)
சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.
பாடல் 4,30,33,63
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் (திரு)
அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.
பாடல் 5,27,40,58
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் (திரு)
பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.
பாடல் 6,28,39,57
சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும் (திரு)
சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுபட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்
பாடல் 7,25,38,60
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் (திரு)
தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே,
அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும்
பாடல் 8,26,37,59
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் (திரு)
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும்
பாடல் 9,23,44,54
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் (திரு)
சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.
பாடல் 10,24,43,53
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு)
குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும்.
(வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)
பாடல் 11,21,42,56
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் (திரு)
பாடல் 12,22,41,55
தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும் (திரு)
பாடல் 13,19,48,50
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் (திரு)
பாடல் 14,20,47,49
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும் (திரு)
பாடல் 15,17,46,52 ,
சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும் (திரு)
பாடல் 16,18,45,51
சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு)
பாடல்கள் 11 முதல் 16 வரை பொருள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள link யை பார்க்கவும்
Reference: kaumaram.com/text_new/velmara...
Meaning : tamildevotionallyrics.blogspo...
Пікірлер: 644
எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு இனி எதுவும் இல்லாமல் இருக்கிறேன். இனி நீதான் முருகா என்னை காப்பாற்ற வேண்டும். எனக்கு வாழ்க்கையில் இனி நிம்மதி யை தா முருகா. ஏன் எனக்கு இவ்வளவு சோதனை முருகா. ஆறுதலை தா முருகா.
அனைத்து மக்களுக்கும் நோய் நொடி இல்லாலும் திருமண வயதை எட்டிய வர்களுக்கு மன்றங்கள் குருவுடன் திருமணம் நடைபெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி
அப்பா முருகா நோய் இல்லாத வாழ்வுகொடுங்க கடன் இல்லாத வாழ்வு கொடுங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா தயவு செய்து கடன் பிரச்சனையிலிருந்து என் தம்பியை மீட்டெடுத்து இங்க எல்லாத்தையும் நல்லா வாழ வை முருகா எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா என் மன எண்ணங்கள் நல்ல என்னமா இருக்கணும் 🙏🙏🙏🙏
முருகா அப்பனே என் கணவருக்கு வந்திருக்கும் நோயில் இருந்து அவரை காப்பாற்றி தாங்கள் வேல் மாறல் மஹா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டு இருக்கேன் நம்பிக்கை உடன் நீங்கள் எங்களுக்கு துணை இருக்கனும் ஐயனே ஓம் சரவணபவ 🙏🙏🙏
@jegasteelsindustrial4170
11 ай бұрын
முருகனை நம்பினாரை திருவருள் காத்தருளும்
@nirmalamanoharan671
11 ай бұрын
Sanmuga kavasam padunga amma
@prasath7895
11 ай бұрын
சரிங்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@murugammalj.s2178
11 ай бұрын
@@jegasteelsindustrial4170vcbb mb ?,
@parameswari2660
11 ай бұрын
Nallathe nadakkum amma🙏
தினமும் மனமார வேல் விருத்தம் பாராயணம் செய்து வந்தால் எல்லாப் பிணிகளும் மறைந்து போகும். அழகான பதிவிற்கு நன்றி
வேல்மறல் கேட்டு படித்து பலனைடைத்தோர், பலனைடைய காத்திருப்போர் அனைவர்க்கும் முருகன் அருள் கிடைடைக்கட்டும் ஓம் சரவணபவ
அப்பா முருகா எனது மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் முருகா அவள் கடன் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏
முருகா இன்னைக்கு ரத்தம் டெஸ்ட் எடுத்து பாக்கும் போது என்னோட குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்கனும் முருகா ரத்த டெஸ்டில் எந்த குறையும் இருக்க கூடாது முருகா 🙏🙏🙏🙏 இன்னைக்கு டாக்டர் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்குனு சொல்லனும் முருகா 🙏🙏🙏🙏 என் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக வளர்த்துக்குடு முருகா எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏🙏
@Sailatha4655
12 күн бұрын
Enna ma kuzhanthai nalla iruka
முருகா வெற்றிவேல் முருகா என் மகன் உடல்நலத்தோடு ஆரோக்கியமாகத் தன் நிறைவோடு வாழ வரம் தந்திடப்பா உன் தாள. பணிகின்றேன்😊
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகற்றி ஆரோக்கியம் மற்றும் அன்பு ஒற்றுமை ஓங்கி அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.முருகா காப்பாற்று.கார்த்திகை வீரா தாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி மன நிம்மதி அடையவேண்டும் இன்றேல்.
@sumathisumo5094
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகா என் மகன் வாழ்கையில் எல்லா சந்தோசம் கிடைக்கனும் அவன் படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும் வேண்டிய
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் வேண்டுங்கள் 10வருடம் ஆச்சு
@user-gj2ox1rx9t
3 ай бұрын
Don't worry everything changed 🎉
@user-gj2ox1rx9t
3 ай бұрын
Don't worry everything changed 🎉
@palani.cpalani.c4213
3 ай бұрын
Antha murukane ungalukku kulanthaiyaka prappar
@sathishgopalakrishnan5023
3 ай бұрын
nichayam murugan arul ungaluku kidakkum
@user-jx4lq8bi3v
3 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
🙏 வேலும் மயிலும் துணை 🙏 முருகா என் வீட்டு மகாலட்சுமி என் மனைவியை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உன் துணையும் & அருளும் என்றென்றும் வேண்டும் 🙏 கூடிய விரைவில் அவளை எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப கொடுத்து அருள் புரிய வேண்டும்....,🙏 🙏🙏
@manimegalaisaravanan2878
3 ай бұрын
Nalathey nadakkum murugan arulal. Vetrivel muruganukku arokara
@saipriyakumar3427
3 ай бұрын
நீங்கள் அவர்களை நடத்தும் விதம் அவர்களை ஆரோக்கியமாக்கும். நீங்கள் அவர்களை மகாலட்சுமியாகக் கருதுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
இப்பாடலை வழங்கிய தாங்களுக்கு நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் முருகா என்வீட்டு பத்திரத்தை எனக்கு வாங்கி கொடுத்து விடு கடன் இல்லாமல் எங்களை வாழ விடு முருகா என்பிள்ளைகள் இருவரையும் நன்றாக வாழ வை ஐயா ஓம் முருகா 🙏🙏🙏
முருகா என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... முருகா எங்க அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க... 4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை.. உன்னையே நம்பி இருக்கேன் அம்மா வேண்டும் அய்யா காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம்
@elumalaii4799
4 ай бұрын
Kandipa ammaku onum agathu muruga kappathuvangaaa 🙏
@venimandra
3 ай бұрын
Murugar irukaa payam yen
@chithrabharathidasan6144
3 ай бұрын
முருகன் அருளால் அம்மா விரைவில் குணமடைவாய்வாங்க
@amuthasiva7093
2 ай бұрын
நம்பிக்கையோடு வழிபடுங்கள் . நல்லதே நடக்கும்.
@baskaranrena3261
2 ай бұрын
அம்மா விரைவில் குணமடைய கந்தகடவுளை வேண்டுகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா செந்தில்லாண்டவர்க்கு அரோகரா
முருகா என் மனக்கவலையை நீக்கு அப்பா
அப்பனே முருகா 🙏🙏🙏 நின் திருப்பாதக்கமலங்களுக்ககு சரணம் அப்பா
என் அப்பன் முருகனே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிற சந்தோசத்தை கொடு முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
அப்பா முருகா என்னோட வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி கந்தா போற்றி வேலா போற்றி போற்றி
வாழ்வில் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்பாகவும் இருக்க அருள் புரியவேண்டும்.முருகாபெருமானே🙏🙏🙏
ஓம் முருகா உன்னை சரண் அடைந்துவிட்டேன் நீங்கள் தான் என்னை காப்பாற்றவேண்டும் என் அப்பனே ஓம்சரவணபவ ஓம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா... சிவசக்தி பாலகனே, ஷன்முகனே, சடாக்ஷரனே, என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க.. ஓம் ஐம் க்ரீம் ஷ்ரீம் வேல் காக்க ஸ்வாகா.. (அகத்திய மாமுனி)
@saravana198
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்கள் கடன் அடைய வேண்டும் எல்லா பிரச்சினை திறனும் எதிரிகள் நிறைய பேர் உள்ளனர் எங்கள காப்பாத்துங்க அப்பா ஓம் சரணம் சரணம் சரவண பவ
இன்று இருக்கும் எங்களுடைய பெரிய துன்பத்திலிருந்து எங்களை காப்பாற்று முருகப்பா. Daily மனசு வலிக்குது. இனிமேல் எங்களை உன் பிடியில் பாத்துகாப்பாக வைத்துக்கொள்.
@HamsaveniKrishnamurthy
3 ай бұрын
Plz Muruga Aswin marriage quick set agha vaydum🙏🙏👏🌅🌻
முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பனே
ஓம் முருகா. எனது கடன் எல்லாம் தீரனும் எனக்கு ஒரு வழிகாட்டு ஓம் முருகா.
அப்பா முருகா என் வாழ்க்கையில் நல்ல வழியா காட்டு பா முருகன்
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா ❤ என் குடும்பத்தை கடன் துண்பத்தில் இருந்து காப்பாத்தி தொட்டது துலங்கனும் உந்தன் கருணை வேண்டும் வேலும் மயிலும் சேவலும் எங்கள் வாழ்வுக்கு துணையாக இருந்து காக்க உன் அருள் போதும் என் கந்தா❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்கிறாய் என்பது தெரிந்தது கொண்டேன் எப்போதும் என் பக்கத்தில் இருந்து எனக்கு நல்ல படியாக உன்னை நினைத்துக் கொண்டேன் இருக்கும் பாக்கியம் கொடுத்து என் மன கவலை நீக்க வேண்டும் என்று உன் திருவடி களே சரணம் சரணம் சரணம்.❤ அரோகரா அரோகரா அரோகரா ❤
இந்த பாடல் கேட்ட போது என் கடை கடகட வென்று விற்று விட்டது. என் மகள் சிஏ இன்டர் பாஸ் முருகா உனக்கு நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா எனக்கு இருக்கும் மூச்சு திணறல் சரியாகனும்.வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
முருகா அப்பனே என் குடும்பம் நோய் நொடி இல்லாமல் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஓம் முருகா முருகா முருகா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஓம் முருகா சரணம்... என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ அருள் புரியுங்கள் அப்பா... இந்த ஜென்மத்தில் இந்த ஒரு பிள்ளையை நல்லபடியாக வளர்த்தால் போதும் அப்பா...
@KumuthaMarimuthu-yi1iy
8 ай бұрын
🎉❤😅🙏👍
@user-xo6yx1mz5d
5 ай бұрын
Om muruga en kanavar chandru 6month blood glad agi brind pogalai brind operaton padutjapadugai agivitar abai brind palaiya napagam vayum kankal vai pesaum kai kal anaith nallapadiya velai saiyum muruga unidam madi pichai katkiran appa
அப்பனே முருகா என் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட ஆசி வழங்குங்கள் நல்ல வருமானம் வரணும் செல்வம் செழிப்புடன் வாழ அருள் புரியுங்கள் ஐயா என் கடன் பிரச்சனை இல்லிருந்து விரைவில் வெளி வர வேண்டும் ஐயா நீ இருக்கும் போது எனக்கு எல்லாம் வெற்றி ஆகும் அரோகரா அரோகரா
❤🎉முருகா என் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கான் அவனுக்கு எந்த நோயாக இருந்தாலும் உன் வேல்கொண்டு அதை ஓடசெய் என் அப்பனே முருகா காப்பாற்று முருகா என் மனக்குறையை போக்கு இறைவா வேலும் மயிலும் துணை❤🎉
ஓம் திரு முருகா சரணமடைந்தேன் காத்தருள வேண்டும் ஐயனே
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
அப்பா முருகா நீதமண்ரம். வழக்குவரவேண்டும். வெற்றிபெரவேண்டும்
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா எனது மகள் என்னிடமே திரும்பி வரவேண்டும் ஓம் சரவண பவ தேவாயா நமக
ஒம் முருகா போற்றி வணங்குகிறேன் ஐய்யனே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா என் கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும்துணே எங்களைகாப்பாய் தடைகளை அகற்றி என்மகனுக்குநல்வழிகாட்டு இறைவா ஓம் சரவணபவாய நமக
முருகா உன் வேல்மாறல் பாடலை இரு வேளையும் நான் கேட்கிறேன் என் கணவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா
புனே முருகா வேலு மயிலும் சேவலம் துணை ஓம் சரவணபவ 🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
எனது இடத்து பிரச்சினை விரைவில் தீர்த்து சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கதிர் வேல் முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா பழனி மலை பால தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா 🙏🌺🦃🦚🌺🙏
முருகா என் பிள்ளை புலமை பரீட்சையில் சித்தி பெற உன் ஆசீர்வாதம் கிடைக்க அருள் வேண்டும். ஓம் சரவணபவ....
பொருள் விளங்க பாராயணம் செய்யும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. கோடி நன்றி 🙏🙏🙏
@kavithakamesh8738
2 жыл бұрын
🙏🙏
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளவும் நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் வேலும் மயிலும் துனைகடவுளேஎன்வீட்டுபிரச்சனைதடைகளைநீக்கவேண்டும்முருகாவெற்றிவேல்முருகா
என் அப்பானே வெற்றி வேல் முருகா என்னோட அக்கா மகன் நன்றாக பேச வேண்டும் அவனுடைய உடல் பூரண ஆரோக்கியம் பெற வேண்டும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா போற்றி போற்றி
ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🌺🦚🦃🌺🙏 வேலும் மயிலும் துணை......
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
வேலும் மயிலும் சேவலும் துணை. ஓம் சரவணபவாய நமக
என் மனக்கவலையை நீக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவ ஓம்
முருகா உம் திருவடியே சரணம். நான் இந்த வருடம் முடிவதற்குள் நான் நினைத்த நாட்டுக்கு செல்ல அருள் வேண்டும். வேலும் மயிலும் துணை.......
முருகா போற்றி கடனில் இருந்து என்னை மீட்டு கொடுங்க முருகா. சுமார் 8 வருடமா ரெம்ப கஷ்டபடுகிறேன்.உன்னையே நினைக்க முலு சிந்தனை வேண்டும்.நானும் என் குழந்தைகளும் என்றும் அடிமைகள் முருகா.
🙏🙏🙏வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏
முருகா என் அம்மாவை காப்பாத்து என் குடும்பம் உன் கையில் 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙇🙇🙇
Muruga en ❤appaney engal valvil nallamatrangalai thangapa....engaluku appavumey nee thunaiyaga irrukanumba...intha parayanathai ketkumpodhu un pakkathil neyrungivittadhaga thoondrugiradhu...feel panrenepa...om saravanabhava......velundu venai ilai
எனது அத்தை மகளுக்கு செய்வினை நீங்கி ❤❤மீண்டும் நாங்க ஒன்று சேர வேண்டும்... ❤❤அனைவரும் பிராத்தனை செய்யவும் 🙏💕🙏💕
@user-gj2ox1rx9t
3 ай бұрын
Every thing changed good morning
மிக அருமையான பதிவிற்கு நன்றி மிக அற்புதமாக உள்ளது இருப்பினும் இடை இடையே விளம்பரம் வருவதால் ஆழ்ந்து கவனிக்க இயலவில்லை
முருகா எனக்கு நீங்கள்தான் துணை
கண்வலி நீங்க அருள்புரிவாய் முருகா
அப்பா முருகா எங்கள் பெரிய மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறான் நல்ல மதிப்பெண் எடுத்து எல்லா பாடத்திலும் தேர்ச்சிப்பெற உங்கைள மனமுருகி வேண்டுக்கிறேன் அய்யா
Muruga vetrivel muruga முருகா எங்க தொ லில் ஸ்வீட் காரம் அமோகமாக விற்பணையாக வேன்டும் முருகா. என் மகன் எங்கள் சொல் பேச்சு கேட்க வேன்டும். முருகா அருள் புரியவேன்டும் முரு கா 🙏🙏🙏🙏🙏🙏
Excellent thanks fr meaning muruga sharanam வேலும் மயிலும் துணை
நன்றிகள் கோடி கோடி கோடி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனது மூத்த குமாரர் சந்திரசேகரன்.3வருடமாக உடல் நலமின்றி உள்ளார்.நோயின்றி ஆசிவழங்கு முருகா.
முருகா எங்க அப்பாவை காப்பாற்றி தாருங்கய்யா.முருகா..முருகா..முருகா
வேலுண்டு வினையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை முருகா
அருமை நல்ல விளக்கம் தந்து அனைவர்க்கும் புரியும்படி சொன்னிர்கள், உங் களுக்கு நமஸ்காரம்
Om muruga.eanna avumana paduthanum eannoda lifeah mudikanumdu nirayaper sathi seiranga eannai kappaththunga muruga unga pillaikku nalla valkaiya thanga nan therinchum theriyamal seitha pilaiku mannippu thanga muruga perumane. Neengathane eanna valavaikanum
மனைவியை இழந்த என் மனதில் அமைதியையும் உடல் ஆரோக் கியத்தையும் தந்தருளு ங்கள் முருக பெருமானே🙏🙏🙏
முருகா 🙏நான் தினமும் பாராயணம் செய்கிறேன் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது எல்லாம் உன் விருப்பபடி நடக்கட்டும்..முருகா முருகா முருகா🙏🙏
Om muruga potri 🙏😘😘 appa ungalatha nambi irukom nengatha ennagaluku ellam muruga potri 🙏🙏😘
Om MURUGA Kadan Ella Valki Koduga Vetri vel Muruga Saranam SARANAM 🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு காங்கேயநல்லூர் முருகனுக்கு வேலும் மயிலும் சேவலும் துணை என் அப்பனே முருகா❤
Om Muruga Shanmuga Saravana Bhava Sthothiram 🙏🕎💗 Velum Mayilum Sevalum Thunai 🕎💗🙏
Ellam Elanthu Enni Elappathruku Enni Eatuvum Ellamal Erukuran .Enni NEETHAN OM MURUGA ENNAI KAPPADARA VANDUM OM MURUGA EANAKU VALKKAYIAL ENN NIPPATHI VANDUM OM MURUGA .YAN YANAKU Sothaaini MURUGA ENNI KAPPADURU VERTIVEL MURUGA SARANAM 🙏🙏🙏
முருகா நாளைக்கு என்னோட தோடு திருப்ப அருள் புரிய வேண்டும்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 நீயே அடைக்கலம்.🙏🌹
திருத்தனி முருகன் வழித்துணை வருவான்
Excellent. Vazga valmudan. Such a divine voice
முருகா சரணம் முருகா சரணம்
Om muruga potri potri potri.
Excellent with meaning.thanks a lot.truly gods grace
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🪔🪔🪔🪔🪔🪔
அருமையான பதிவு நன்றி🙏💕
என் அக்கா மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவர் இடம் கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ முருகா. வேலும் மயிலும் சேவலும் துணை. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றி வேல் முருகருக்கு அரோகரா. கந்தனுக்கு அரோகரா. முருகருக்கு அரோகரா.
அற்புதமா பதிவு .. மிக்க நன்றி
கருத்து புரிந்து எமக்குவேல் மாறல் பதிவை தந்ததிற்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
என் அப்பனே முருகா போற்றி போற்றி சரவண பவ சண்முகா போற்றி போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஈசன் மைந்தனே போற்றி போற்றி
விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
Appa muruga ennaku aan kuzhanthai bakkiyam kodungal appa please 🙏🙏🙏 muruga 🙏🙏😭😭😭 kanneerudan ketkiren ennaku kuzhanthai bakkiyam kodungak muruga 🙏🙏😭😭😭 please 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏