ஆஃபியா ஓதும் சூரத்துல் அலஃக் (இர்த்தக் கட்டி)

Name: Aafiya
Father Name: Uvaisna Lebbai
Age: 7
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(அல்குர்ஆன் : 96:1)
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
(அல்குர்ஆன் : 96:2)
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
(அல்குர்ஆன் : 96:3)
الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:4)
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ‏
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:5)
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
(அல்குர்ஆன் : 96:6)
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰى‏
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
(அல்குர்ஆன் : 96:7)
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰى‏
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
(அல்குர்ஆன் : 96:8)
اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰى‏
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
(அல்குர்ஆன் : 96:9)
عَبْدًا اِذَا صَلّٰى‏
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
(அல்குர்ஆன் : 96:10)
اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
(அல்குர்ஆன் : 96:11)
اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
(அல்குர்ஆன் : 96:12)
اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰى‏
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
(அல்குர்ஆன் : 96:13)
اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰى‏
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 96:14)
كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِۙ‏
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
(அல்குர்ஆன் : 96:15)
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ‏
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
(அல்குர்ஆன் : 96:16)
فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ‏
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
(அல்குர்ஆன் : 96:17)
سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ‏
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
(அல்குர்ஆன் : 96:18)
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
(அல்குர்ஆன் : 96:19)

Пікірлер