பெருமாளுடன் போட்டிபோடும் தாயார் | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan Part 10
Click to watch More உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content - • Sri Velukudi Krishnan ...
பெருமாளுடன் போட்டிபோடும் தாயார் | "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 10 | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி
#velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi #navatrispecial #ramanujar #lakshmisavesperumal #navaratri #navaratri2022 #lakshmikataksham #krishnanswamy #velukudikrishnanLatest
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
Пікірлер: 27
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏
❤❤❤
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
nadri nandri nandri 🙏🙏🙏
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: -(969) ஸ்ரீ ஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளேஸரணம். ஜய்ஸ்ரீ மந்நாராயணாய ||
Arumaiyana Upanyasam Dhanasmi swamin
Nandri swamy namo narayana
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sriman Narayana
🙏🙏🙏🙏Ohm namoe bagavadae vaasudaevaayaa 🙏🙏🙏🙏
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Sri krishnayanamonamha🙏kamala
Om namo bagavadhe vasudevaya
Romba Romba nanri swamy ❄❄❄❄❄
Thank u swamy.
🌹🌹🙇🙏🙏🙏🙏
Swamigalukku Adiyenin Anantha kodi namaskaram
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏💐
நிறைவுப் பகுதி - கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் லக்ஷ்மியின் வைபவத்தை மேலும் பல ஸ்லோகத்தை மேற்கோளிட்டு அத்புதமாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் சிறப்பித்ததிலிருந்து - 'ஸ்ரத்தா ' என்ற மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து பெருமானின் பெருமையும் கூடி விடுகிறது. ஜனகர் சீதையை கல்யாணம் செய்து கொடுக்கும் போது அவளின் பெருமைகளை எடுத்துரைத்து இப்பேர்பட்ட சீதை என ராமனிடத்தில் கூறியதையும், மாரீசன் ராவணி டத்தில் ப்ரும்மசாரி ராவணனிடத்தில் அபச்சாரம் பட்டாலும் பரவாயில்லை . கிருஹஸ்தனான ராமனிடம் அபச்சாரம் படலாகாது என அறிவுரை கூறியதையும் "அப்ரமேய " என்று துவங்கும் ஸ்லோகத்தின் மூலம் ராமனின் தேஜஸ் புத்திக்கு அடங்காதது என்றும், புத்திக்கு அடங்கிய பெருமை வாய்ந்தவள் மஹாலக்ஷ்மி என்றும் குறிப்பிட்டார். இந்திரன் மஹாலக்ஷ்மியை குறித்து ப்ரார்த்தித்தை குறிப்பிடும் வகையில் பாற்கடலிலிருந்து அவதரித்தவளே , அனைவருக்கும் ஜனனியாய் விளங்குபவளே . நான் இழந்ததை மீண்டும் கொடுத்தவளே வணக்கம் என தன் ஸ்லோகத்தில் போற்றியதையும் வழிமொழிந்தார். த்வம்ஸித்த: த்வம் ஸ்வதா - ஸ்வாஹா - அக்னி பகவானின் இரண்டு தர்மபத்தினியாய் அக்னியை ஆக்ருதி கொடுக்கும் போது 'ஸ்வதா ' என பித்ருக்களுக்கு அந்த அக்னியை சேர்ப்பவளாகவும், ஸ்வாஹா என யாக யக்ஞத்தில் சேர்க்கும் அக்னியை தேவர்களுக்கும் சேர்ப்பவளாகவும் இருக்கிறாள். காரிய ஸித்தியாகவும் விளங்குகிறாள். உன் மூலமாய் பெருமாளிடத்தில் சேர்க்கிறேன்."த்வம் லோக பாவன "- உன் மூலம் லோகத்தில் இருக்கும் அஸீத்தம் அனைத்தும் போக்கி பவித்ரத்தை உண்டு பண்ணுகிறாய். நீயே சரஸ்வதி, ஸ்ரத்தா தேவி ஞான வடிவாய், ஒளிமயமாய் , இரவாய், பகலாய், அனைத்துமாய் தேவரீரே உள்ளீர். யக்ஞ வித்யை தர்ம மீமாம்சம் பிராட்டி என்றதையும் கூறி, கருணையோடு இருப்பாள், அருள் மழை பொழிபவள், செல்வமாயும் சிறப்புற்று விளங்குபவள். செல்வத்தை அளிக்கும் ஒட்டுமொத்த "யக்ஞ வித்யை யே நம, மஹாவித்யை நம குஹ்ய வித்யை கோபினே தர்மமீமாம்ச்ச" என மந்திரங்கள் பற்றிய அனைத்து படிப்பு மாயும் மொத்த வித்யா தேவியாவும், ஆத்ம வித்யாகவும் எழுந்தருளியிருக்கிறாள் என சாதித்தார். ஒருவன் ரங்கநாச்சியாரை குறித்து இரண்டு கரம் சேர்த்து கை கூப்பி வணக்கம் சொன்னதற்கு அவனுக்கு ஐஸ்வர்யம கைவல்யம் என அனைத்தையும் ஸ்ரீரங்க நாச்சியார் கொடுத்து மேன்மேலும் கொடுக்க இன்னும் எதுவும் இல்லையே என தவிப்பதாக ஸ்ரீபரா சரபட்டர் - ஸ்ரீரங்கநாச்சியார் நாணத்துடன் தலைகுனிவதற்கு அர்த்தம் கற்பிப்பதாக குறிப்பிட்டார். அந்த அளவுக்கு பிராட்டியின் ஒளதார்யாத்திற்கு ஒரு எல்லை கிடையாது என இந்திரனும் கொண்டாடுகிறான். மேலும் ஆன்மீகத்தில் தர்க்க சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் வேதஸ்வரூபமாகவும் பிராட்டி நிலைநிற்கிறாள் என்றும், அனைத்து வேதங்களாலும் பேசப்படுபவள் என்றும் முன்மொழிந்தார் . பிராட்டியுடன் கூடிய பெருமான் எனவும் திருமகள் கேள்வன் ஸ்ரிய பதி எனவும் பெருமானை வேதம் புகழும். பிராட்டிக்கு இருக்கும் பெருமைகளுக்கு அவள் பெருமைகளை ஒருவராலும் பேசி முடிக்க இயலாது. அவள் பேச்சிற்கும், வாக்கிற்கும் அப்பாற்பட்டு உயர்ந்து நிற்பவள் என்றும், வாக்குக்கு எட்டும்படியாக பெருமாள் இருப்பதால் அவரை பற்றி நிறைவாய் பேசுகிறோம் என்றார்.இந்த ஜகம் முழுவதும் விஷ்ணுவுடன் சேர்ந்து மஹாலஷ்மி வியாபிக்கிறாள் என்றும் , பெருமாள் விபுவாக இருந்து, இவள் அனு ஆக இருந்தாலும் பெருமான் ஸ்வதந்திரனாய், பிராட்டி பெருமானுக்கு பரதந்திரனாய் இருந்தாலும் அவருக்கு பெருமை கூட்டுபவனாய் திகழ்கிறாள். மாநகா கோசம் ததா கோசம் - என் வீடு, என் வாழ்வு, என்னுடைய ஞானம் இவைகள் அனைத்திலிருந்தும் தேவி விலகாமல் இருக்க வேண்டும் என ஸ்ரீ குண ரத்ன கோசத்தில் பராசர பட்டர் பிராட்டியின் பெருமைகளை எடுத்துரைத்து பிரார்த்திக்கிறார் என்று வழிமொழிந்து இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
பக்தமீரா பிருந்தாவனத்தில் கண்ணன் ஒருவரே ஆண் மற்றவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாகவே தெரிகிறார்கள் என்று. கோஸ்சுவாமியிடம் கூறினாள் மீரா பாய்.
பகுதி - 1 இப்பகுதியில லக்ஷ்மி கடாக்ஷத்தின் மஹாத்மியத்தை அத்புதமாய் ஞான குரு வேளுக் குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து - ஒரு குழந்தையை காபபாற்றுவதில் தாய், தந்தை இருவருக்கும் இடையில் ஒப்பட்டால் தாயே குழந்தையை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறாள் என கருத்துரைத்தார். பெருமானுக்கு பிராட்டி வழங்கும் 2 யுக்திகளாய் - அடியார்கள் சரணம் என உன் திருவடிகளை பற்றியவர்களின் குற்றத்தை பாராமல் மன்னித்து விடு. சரணம் என உன் திருவடிகளை பற்றாத வர்க்கு சாஸ்திரம் விதித்தபடி அவர்களை தண்டித்து விடு என இரண்டையும் பிராட்டி தெரிவித்தாள் என்றார். மஹாலஷ்மி நடத்தும் பாடசாலையில் பெருமான் ஒருவரே மாணவன்.அவள் புருவ நெறிப்பிற்கு தக்கவாறு உலகத்தை பெருமான் நடத்துகிறார். ஆக பெருமானுக்கு பிராட்டி இன்றியமையாத அடையாளமாய் இருக்கிறாள் என்பது முதல் நிலை. சேதனர்களை பெருமானுடன் சேர்த்து வைக்க புருஷகாரம் - சிபாரிசு செய்வது 2ம் நிலை. சரணாகதிக்கு பலனாய் கைங்கர்யத்தை பிரார்த்திக்கும் போது அவளும் பெருமானுக்கு சமமாய் இருந்து நம் கைங்கர்யத்தை பெற்றுக கொள்வது 3ம் நிலை. அடியார்களை பொறுத்த மட்டிலும் அடியார்களின் குற்றங்களை மறக்கிறாள். மன்னிப்பிக்கிறாள் இதுவும் ஒரு நிலை. மேலும் பெருமானுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு நம்மை ரக்ஷிப்பதில் நோக்காக உள்ளாள். மைந்தடங்கண்ணினாய் - என்ற ஆண்டாள் பாசுரப்படி, உன் மைத்துனன் பெருமானின் கை தாமரை என்றால் பிராட்டியின் கை செந்தாமரை கை, இவள் நம்மை ரக்ஷிக்க வரும் போது இவளுக்கு பெயர் வரக் கூடாது என பெருமான் தன் திருமார்பில அவளை அணைத்து தடுக்கிறார். மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீதேறி கொத்தலர் பூங்குழல என்ற பாசுர கட்டத்தில் கண்ணனின் மலர்ந்த மார்பு அவளை அணைத்தபடியால்மேலும் பன்மடங்காய் பெருமானுக்கு வளர்ந்தது என சாதித்தார்." வாய் திறவாய் மலர் மார்பா " மாசுஸஹ என "ஸர்வ தர்மாண்.. மாஸிஸஹ " சோகப்படாதே என வாய் திறக்க முற்படும் போது இவர் எப்படி ரக்ஷிப்பார் என பிராட்டி அதை சொல்லாமல் இருக்க சைகை காண்பிக்க பெருமானும் அடங்கி விடுகிறார் என விளக்கினார்.மைத்தடங்கண்ணியாய் நீயும் உன் மணாளனை துயிலெழ ஒட்டாதான் என்ற வரிக்கு பரம காருணிகரான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தன் உரையில் பிராட்டியின் அழகிய கண்படைத்ததின் பயன் அடியார்களுடன் பெருமானை சேர்த்து வைப்பதற்கன்றி பேச வொட்டாமல செய்வதற்கா? இது தத்துவமன்று தகவுமன்று என ஆண்டாடளும் கூற பிராட்டி கதவை திறக்கிறாள் என முடித்தார். பிராட்டி எப்போது தோன்றினாள் என்றால் அம்ருத மதனம் போது அவதரித்தாள் என்றும் பெருமான் தன் 1000 தோள்களால் பாற்கடலை கடையும் போது அதிலிருந்து மஹாலஷ்மி அவதரிக்கிறாள். "ஆர் வாசக துர்வாசக "எனது வங்கும் விஷ்ணு புராண ஸ்லோகத்தை அனுசந்தித்து, துர்வாசகர் அங்கும் இங்குமாய் திரிந்து கொண்டிருக்கும் போது அங்கு ஒரு வித்யாதர பெண்ணை கண்டார். அவள் கையில் லஷ்மிக்கு சாற்றிய புஷ்பமாலை இருந்தது. தாயர் சூட்டிக் கொண்ட அந்த மாலையை துர்வாசகர் இந்திரனுக்கு கொடுக்க, இந்திரன் அதன் அருமை பெருமை தெரியாமல் அதை யானை தலை மீது போட அது அந்த மாலையை கீழே போட்டு மிதித்தது. இதனைக் கண்ட துர்வாசகர் கோபமுற்று உனக்கு இருக்கும் ஐஸ்வரியம் தொலைந்து போகத் கடவுது என இந்திரனுக்கு சாபம் கொடுத்தார். தாயார், பெருமானின் பூமாலைகளை அவர்கள் ப்ரஸாதமாய் பாவித்து நம் இரு கைகளாலும் வாங்கி கண்களிலும் நெற்றியிலும் ஒற்றிக் கொண்டு ஒரு நாள் கிரஹத்தில் வைத்திருக்க வேண்டும் என அந்த வழக்கத்தை வலியுறுத்தினார். யசோதை கண்ணனுக்கு கொடுக்கும் பிரஸாதத்தை புசித்து கையை தான் போட்டிருக்கும் பீதாம்பரத்தில் துடைக்க இதைக்கண்ட யசோதை கண்ணனுக்கு காட்டிற்கு செல்லும்போது மான்தோல், மரவுரி உடை அணிவித்து அனுப்புவதாய் என்ற இந்த படலத்தை ரஸமாய் ஸ்வாமிகள் சாதித்தார். பவித்ரோதஸவத்தில் வழங்கும் பட்டுநூலால் நெய்த ப்ரஸாதத்தை எப்போதும் வீட்டில் வைத்து பராமரிக்கனும் என்றும், பெருமானின் அபயஹஸ்த சந்தனம், தாயாரின் மஞ்ச காப்பு ஆகிய பிரஸாதங்களை நாம் நம் வீட்டில் நடக்கும் சுபநிழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.